K A N Tours&Travels

K A N Tours&Travels we are do my best all type of duty...

திருப்பஞ்சலி கோவில் என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இத...
09/12/2025

திருப்பஞ்சலி கோவில் என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இது ஞீலிவனேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சிவபெருமான் கல்வாழை மரத்தின் கீழ் அருள்பாலிப்பதால் 'ஞீலி' என்ற பெயர் வந்தது, மேலும் இது எமதர்மனுக்கு பரிகாரம் செய்யும் தலமாகவும், திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் கருதப்படுகிறது, மேலும் இது 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும்.

முக்கிய அம்சங்கள்:
பெயர்கள்: திருப்பைஞ்ஞீலி, ஞீலிவனேஸ்வரர் கோவில், திருப்பஞ்சலி, வாழை வனநாதர்.
தலைவர்: அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் (சிவபெருமான்).
அம்பாள்: அருள்மிகு விசாலட்சி (நீள்நெடுங்கண் நாயகி).
தல விருட்சம்: கல்வாழை (ஞீலி).
சிறப்பு: எமதர்மன் பிறந்த தலம், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலம், அப்பருக்கு கட்டமுது கொடுத்த தலம்.

அமைவிடம்:

திருச்சிராப்பள்ளிக்கு அருகில், மண்ணச்சநல்லூர் தாலுகாவில் திருப்பைஞ்ஞீலி என்ற ஊரில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில் என்ற பெயரிலேயே அதிகம் அறியப்படுகிறது, மேலும் இது பல பக்தர்களால் தென்கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

தலச் சிறப்பு
திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்தத் தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.
எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
நித்தமும் இரவில் நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் இங்கு தங்க நேர்ந்தமையால், இறைவனார் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.
அப்பர் பெருமான் இத்தலத்துக்கு வர விரும்பி நடக்கையில் வழி தவறி நிற்கையில், சிவனே அந்தணர் வடிவில் அவரது பசியாற்ற கட்டுச்சோறு அளித்து இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார்.
"சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.
இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.
இது காவேரி நதியின் வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61ஆம் தலமாக விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது மெய்யனுபவமாக விளங்கும்.

இறைவன் பொதிசோறு கொடுத்த நிகழ்வு

திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களையடுத்து, திருநாவுக்கரசர் இத்தலம் நோக்கிவந்தபோது தண்ணீரின் தாகமும், பசியும் அவரை வாட்டின.
அவருடைய களைப்பைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவர் வரும் வழியில் ஒரு குளத்தையும், தங்கி இளைப்பாறுவதற்காக ஒரு மண்டபத்தையும் உருவாக்கி கட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் வடிவில் காத்துக்கொண்டிருந்தார்.
களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி இறைவன் கூற, அப்பரும் அவ்வாறே செய்தார்.
அந்தணரிடம் அவர் எங்கு செல்கின்றார் என்று அப்பர் கேட்க, தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூறவே இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி கோயிலின் அருகில் வந்தவுடன் அந்தணர் மறைந்தார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து, உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.
ஞானசம்பந்தருக்கு இறைவன் பொதிசோற்றினை திருக்குருகாவூர் கோயிலில் கொடுத்தார்.

வரலாற்றுச் சிறப்பு

இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.
பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கும் அபூர்வ சிவலிங்கம்காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமே...
13/11/2025

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்

உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கும் அபூர்வ சிவலிங்கம்

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி.

காட்டில் வாழும் உடும்பு என்னும் பிராணியானது எதைப்பற்றிக் கொண்டாலும், அதை இறுக பற்றிக் கொள்ளும் தன்மை உடையது. இத்தலத்தில் உடும்பின் வால் போல் சிவலிங்கத் திருமேனி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி உடும்பின் வால் போன்று சிவலிங்கம் இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று பிரம்மா அகந்தை கொண்டபோது சிவபெருமான் அவரை சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப் பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம்.

தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.
ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அந்த சிறுவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.

காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்து கொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். அதனால்தான் இக்கோயிலில் சிவலிங்கம் உடும்பின் வால் அளவு உள்ளது.

பல வியாதிகளை குணப்படுத்தும் அபிஷேக தீர்த்தம்

இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் இத்தலத்தில் பூஜை செய்யப்படுகிறது.

 #தாமல்  #வராகீசுவரர் திருக்கோவில் -  #காஞ்சீபுரம்பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்து...
06/07/2025

#தாமல் #வராகீசுவரர் திருக்கோவில் - #காஞ்சீபுரம்

பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாமல் வராகீசுவரர் திருக்கோவில்.
காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலம், தொண்டை மண்டலத் திருக்கோவில், மகாவிஷ்ணு வராக அவதாரத்தில் வழிபட்ட சிவன் வாழும் தலம், சரபேஸ்வரருக்கு லிங்கத் திருமேனி அமைந்துள்ள ஆலயம், ராகு, கேது தோஷம் நீக்கும் தலம், பல்லவர், சோழர், விஜயநகர மன்னன் என பலரும் போற்றி வணங்கிய கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு திகழ்கிறது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தாமல் வராகீசுவரர் திருக்கோவில்.புராண வரலாறு : ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. உலக இயக்கம் நின்று போனது. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.
இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதையடுத்து அவர் கடலை கலக்கிக் கொண்டிருந்தார். இதனால் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து, அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், சிவபெருமானை வழிபட்டு வேடன் வடிவில் தோன்றி, வராகனை வீழ்த்தி அதன் கொம்புகளை உடைத்து அவற்றைத் தனது அணிகலன் ஆக்கினார். பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகிறது.
வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, சிவபெருமானை வணங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் வராகீசுவரர் என்றும், பன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் தாமல் என்ற திருத்தலமாகும்.தொன்மைச் சிறப்பு : பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர் களும் போற்றி வழிபட்ட திருக்கோவிலாக தாமல் சிவாலயம் திகழ்கின்றது. மன்னர்கள் காலத்திலேயே இவ்வூர் பல்வேறு போர்களைச் சந்தித்ததை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. தாமல் என்ற பெயர், மூன்றாம் சிம்மவர்மனின் செப்பேட்டில் (கி.பி. 1556) குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டல தாமல் கோட்டத்தில், தாமர் நாட்டு, தாமநல்லூர் என பழங்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தாமல் என்பதற்கு தடாகம் அல்லது குளம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஊரில் மிகப்பெரிய பல்லவர் காலத்து ஏரி இருப்பது இதனை உறுதி செய்கின்றது.
புறநானூற்றில் தாமல் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. நலங்கிள்ளியின் சகோதரர் மாவலத்தான் பற்றி, தாமலைச் சேர்ந்த தமப்ப கண்ணனார் என்ற புலவர் இயற்றிய பாடல் வாயிலாக தாமலைப் பற்றி அறிய முடிகிறது.ஆலய அமைப்பு : 35 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தினை ஒட்டி அழகிய திருக்குளம் உள்ளது. மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், அண்மையில் திருப்பணியின் போது அடியார்களால் எழுப்பப்பட்டுள்ளது. பல்லவர், சோழர், ராஷ்டிரகூடர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் என அனைத்து மன்னர்களின் கலைப்பாணியும் இக்கோவிலில் காணப்படுகிறது.
வெளிப்புற மண்டபம் விஜயநகர மன்னர் காலம், இதன் தூண்களில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ராவணன் என ராமாயணக் காவியக் காட்சிகள் புடைப்புச் சிற்பங் களாகக் காட்சி தருகின்றன. உண்ணாழி எனும் உள்சுற்று மண்டபம் 50 தூண்களைக் கொண்டு சோழர் மற்றும் விஜயநகர மன்னர் பாணியில் அமைந்துள்ளது. இதில் சிவபுராணச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன.வராகீசுவரர் : கருவறையில் மேற்கு முகமாய் இறைவன் வராகீசுவரர் காட்சி தருகிறார். வட்ட வடிவ ஆவுடையாராக சிவலிங்கத் திருமேனியில் இறைவன் ஆசி வழங்குகின்றார். இவரே பன்றீசர், திருப்பன்றீசுவரர், திருப்பன்றீசுவரமுடையார், தாமலுடையார் எனப் பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டவர். இன்று இவரது திருப்பெயர் வராகீசுவரர் என்பதாகும்.
வெளிப்புற மண்டபத்தினையட்டி, தெற்கு முகமாக கவுரி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்மன், திருக்கோவில் புனரமைப்பின்போது புதிதாக உருவாக்கியதாகும். எனினும் அன்னை நின்ற கோலத்தில் எழிலோடு காட்சி தந்து அருளாசி வழங்குகின்றார். அம்மனின் எதிரே சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இருக்கிறது. அன்னை சகல சம்பத்துக்களையும் அள்ளித் தருபவள் என்பதால், அன்னையை சம்பத்கவுரி என்றும் அன்போடு அழைக்கின்றனர்.தனிச் சிறப்புகள் : மாசி மாத ரத சப்தமி அன்றும், மகத்தன்றும் மாலை வேளையில், இத்தல இறைவனை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தழுவி வழிபடுவது தனிச்சிறப்பு. சரபேஸ்வரருக்கு, லிங்கத் திருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. நூற்றியெட்டு லிங்கம் அமைந்துள்ளதும், காளாஸ்திரிக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குவதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரதோஷம், கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு -கேது பூஜை, அஷ்டமி பூஜை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.பிற ஆலயங்கள் : இத்தலத்தில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சார்ந்த தாமோதரப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் கி.பி. 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் புனரமைக்கப்பட்ட செய்தியை வரலாறு கூறுகிறது. இதுதவிர இவ்வூரில், நரசிம்மர் பூஜித்த நரசிங்கேஸ்வர ஆலயம், திரவுபதி அம்மன் ஆலயம், பொன்னியம்மன் ஆலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் அமைந்துள்ளன. இத்தலத்தைச் சுற்றி ஜடாயுவுக்கு மோட்சம் தந்த திருப்புட்குழி என்ற திவ்ய தேசம், திருப்பாற்கடல், காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர், அம்பி சிவாலயம் உள்ளிட்ட பழமையான ஆலயங்களும் உள்ளன.
அமைவிடம் : காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம் வட்டத்தில் தாமல் அமைந்துள்ளது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில சென்னைக்கு மேற்கே 83 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தூரத்திலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தாமல் அமைந்துள்ளது.ராகு- கேது பரிகாரத் தலம் : தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகு-கேது யாக பூஜைகளில் கலந்து கொண்டால், ராகு-கேது தோஷத்தில் இருந்து பூரணமாய் விடுபடலாம் என்பது பக்தர் களின் நம்பிக்கையாகும்

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

குணம் தந்த நாதர் கோவில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம்குணம் தந்த நாதர் கோவில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம்காஞ்சிபு...
24/05/2025

குணம் தந்த நாதர் கோவில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம்
குணம் தந்த நாதர் கோவில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஒரக்காட்டுப்பேட்டையில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குணம் தந்த நாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் 600 ஆண்டுகள் பழமையானது. மூலஸ்தான தெய்வம் குணம் தந்த நாதர் என்றும் அன்னை திரிபுர சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். ஸ்தல விருட்சம் சரகொண்டரை மரம் மற்றும் தீர்த்தம் அக்னி தீர்த்தம் மற்றும் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தும்.

இந்தக் கோயிலில், கோயில் பிரகாரத்தில் அஷ்ட லிங்கங்கள் (திருவண்ணாமலையில் காணப்படுவது போல் 8 சிவலிங்கங்கள், 8 திசைகளைக் குறிக்கும்) இருப்பதைக் காணலாம். உள்ளூர் மக்கள் இந்த சிவலிங்கங்கள் ஆசாரியரின் (கண்ணுக்குத் தெரியாத ஆன்மீக சக்திகளிடமிருந்து கேட்கும் தெய்வீகக் குரல்) வடிவத்தில் பெறப்பட்ட தெய்வீக உத்தரவின் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

பௌர்ணமி நாட்களில் இந்த கோயிலை 21 முறை சுற்றி வருவது திருவண்ணாமலை கிரிவலம் ஒரு முறை செய்வதற்கு சமம். சமீபத்தில் இந்த கோயிலில் ஒரு அதிசயம் நடந்தது. பிறவியிலேயே ஊமையாக இருந்த ஒருவர், ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் 21 முறை இந்த கோயிலை சுற்றி வந்தார். அவர் 7 பௌர்ணமிகள் தொடர்ந்து இந்த தவம் செய்து பேசும் சக்தியைப் பெற்றார். நவ வீரபாகு சன்னதிகள், இந்த கோயிலில் மிகவும் அரிதான அம்சம் உள்ளது.

கோயில் திறக்கும் நேரம்
கோயில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள்
ஸ்கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து ஸ்கந்த சஷ்டி விழாவைக் கொண்டாடுகிறார்கள். சூர சம்ஹாரமும் இங்கு கொண்டாடப்படுகிறது.
தொடர்பு
குணம் தந்த நாதர் கோயில்,
ஓரக்காட்டுப்பேட்டை,
காஞ்சிபுரம் மாவட்டம்
மொபைல்: +91 – 97869 77574 / 94448 96971
இணைப்பு
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள செங்கல்பட்டிலிருந்து ஒரக்காட்டுப்பேட்டை சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது, மேலும் ஆத்தூருக்கு சுமார் 2 கி.மீ தொலைவில், பாலார் ஆற்றின் குறுக்கே மேற்கு நோக்கி ஒரு மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். செங்கல்பட்டிலிருந்து ஒரக்காட்டுப்பேட்டையை அடைய T 5, 22, 22A என்ற பேருந்து எண்களில் செல்லவும்

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந...
25/10/2024

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப்படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. தனது வலது கையை அபய முத்திரையுடன், தூக்கிய தனது இடது காலின் மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது.

இச்சிற்பம், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ள வள்ளிமலையில் காணப்பட்ட சமண பெண் தெய்வமாகிய பத்மாவதி இயக்கியம்மன் ஆகும். வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று. இங்கு குடவரைச் சிற்பங்களும் உள்ளன. இதன் காலம் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு என்பர். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது. மேலும் தற்போது இது இந்து தலமாக மாற்றப்பட்டு பல புனைவுகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி இத்தலத்தில் வளர்ந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
கோயில் அமைப்பு வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள். இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும். படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவ்விடத்தில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த கல்லை அப்படியே மூடிவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப் படவில்லை. படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.
நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நதியில் வள்ளி அம்மன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது சாதாரண உயரம் கொண்டவர்களும் குணிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு தாழ்வான நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரகம் காட்சி அளிக்கிறது. மேலே பார்த்தால் பாறை எங்கே நமது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் உருவாகிறது. பாறைகளைக் குடைந்து அதற்குள் முருகனை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும் என்று பிரம்மிப்பாக உள்ளது. எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.
மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானையின் உருவம் கொண்ட பாறை என்று நம்பும் பக்தர்கள் அதனை கணேச கிரி என்று பக்தியோடு வணங்குகிறார்கள். கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது. மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது. சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும். எனவே இறைத்தன்மை வாய்ந்த இத்தலத்திற்கு சென்று வள்ளி மலையின் அற்புதத்தை கண்டு வாருங்கள். வள்ளி, தெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் முருகனின் அருளைப் பெற்று வாருங்கள்

Tiger caves
02/06/2024

Tiger caves

Valmiki Caves, 40 km from Tadipatri, Andhra Pradesh
29/05/2024

Valmiki Caves, 40 km from Tadipatri, Andhra Pradesh

The Best Time to Visit Kiliyur FallsHowever, if you want to experience the majestic waterfall at its glorious best, go j...
07/05/2024

The Best Time to Visit Kiliyur Falls
However, if you want to experience the majestic waterfall at its glorious best, go just after the monsoons come to an end. Typically, the rainy season in these parts ends in July, so August makes for a great time to visit the falls

பண்டைய தமிழ் நாட்டில் தங்கள் மதம் செழித்தபோது இங்கு வாழ்ந்த சமண துறவிகளால் அடோப்களாக மாற்றப்பட்ட குகைகள் இந்த மலையில் உள...
04/05/2024

பண்டைய தமிழ் நாட்டில் தங்கள் மதம் செழித்தபோது இங்கு வாழ்ந்த சமண துறவிகளால் அடோப்களாக மாற்றப்பட்ட குகைகள் இந்த மலையில் உள்ளன. இந்த குகையில் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்பது சமண சிற்பங்கள் உள்ளன, இதில் மகாவீரர், கடைசி தீர்த்தங்கரர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் அடங்கும்.

விளாப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 3.5 கிமீ தொலைவிலும் , வேலூரில் இருந்து 30 கிமீ தொலைவிலும், பஞ்ச பாண்டவ மலை அல்லது பஞ்ச பாண்டவ மலை, ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே மாநில நெடுஞ்சாலை 129 க்கு அருகில் விளாப்பாக்கம் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. மலைப்பாங்கான பகுதி 9 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு செழிப்பான ஜெயின் மையமாக இருந்தது, ஏனெனில் இது பாறை வெட்டப்பட்ட குகைக் கோயில், ஜெயின் உருவங்களுடன் கூடிய இயற்கை குகைகள் மற்றும் கல்வெட்டுகளிலிருந்து தெளிவாகிறது.

பஞ்ச பாண்டவர் மலை (பஞ்ச பாண்டவர் மலை) என்ற பெயர் மகாபாரதத்திலிருந்து பாண்டவர்களுடன் தொடர்புடையது. இந்த மலையை உள்ளூரில் திருப்பன்மலை என்று அழைக்கப்படுகிறது, அதாவது பயமுறுத்தும் பால் மலை. இக்கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடக் கோவிலில் காணப்படும் சோழர் கால கல்வெட்டின்படி, இந்த நகரம் 10 ஆம் நூற்றாண்டில் ஜைன மதத்தின் வலுவான செல்வாக்கின் கீழ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லவ பாணியில் கட்டப்பட்ட குகை அகழ்வாராய்ச்சிகளில் பாறை வெட்டப்பட்ட குகைக் கோயில் மிகப்பெரியது . கிழக்கு நோக்கிய இந்த குகை ஒரு பெரிய குன்றின் அடிவாரத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கயிறு வரிசையாக அமைக்கப்பட்ட பன்னிரண்டு தூண்களால் தாங்கப்பட்ட ஒரு பெரிய முகமண்டபத்தை இந்த குகை கொண்டுள்ளது . தூண்கள் மேலிருந்து கீழாக ஒரே மாதிரியாக சதுரமாக இருக்கும். தூண்கள் மற்றும் பைலஸ்டர்களுக்கு மேலே வளைந்த கோர்பல்கள் உள்ளன. குகையின் பின் சுவரில் வெற்றுக் கலங்களுடன் ஏழு இடங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பக்கச் சுவர்கள் சதுர செதுக்கப்படாத தொகுதிகளுடன் விடப்பட்டுள்ளன.

பஞ்சபாண்டவர் மலை, ராணிப்பேட்டையில் உள்ள சுற்றுலாத் தலம், வேலூரில் உள்ள சுற்றுலாத் தலம், ராணிப்பேட்டை, வேலூர், சுற்றுலாத் தலம், குகைக் கோயில், ஜெயின் கோயில், பயண பதிவு, பயணிகள்

Panchapandavar Malai,Panchapandavar Padukkai, Pancha Pandava Malai Jain Caves,ancient Jain Caves, Pancha Pandava Malai hillock, Vilapakkam Town, Zaminpallavaram, Panjapandavar Malai Road, flourishing Jain center, rock cut cave temple, natural caves, பஞ்ச பாண்டவர் மலை, பஞ்ச பாண்டவ மலை , ஜெயின் குகை, விளாப்பாக்கம், பஞ்ச பாண்டவர் குகைக்கோயில்,குகைக்கோயில்,பஞ்ச பாண்டவர் கோயில்கள், கீழவளவு வட்டம்

Tamil Nadu 632507, India

திருமலை வையாவூர் பெருமாள்தரிசனம்திருப்பதிக்கு நிகரான திருமலை வையாவூர்சஞ்ஜீவி மலையையே தூக்கிக்கொண்டு வந்தார் அனுமன் என்கி...
08/10/2023

திருமலை வையாவூர் பெருமாள்
தரிசனம்
திருப்பதிக்கு நிகரான திருமலை வையாவூர்

சஞ்ஜீவி மலையையே தூக்கிக்கொண்டு வந்தார் அனுமன் என்கிறது புராணம். அப்படி மலையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பறந்து வந்தபோது, தட்சிண கருடகிரி எனும் மலையைத் தாண்டினார் அனுமன். அப்போது மலையை தன் வலது கரத்திலிருந்து இடது கரத்துக்கு மாற்றிக்கொண்டார். அந்த மலையை, தட்சிண கருடகிரி எனும் மலையில் வைக்காமல் வந்தார் என்பதால், பின்னாளில் அந்த மலை திருமலைக்கு நிகரான மலையாகவே போற்றப்பட்டது. அந்த ஊர் ‘வையாவூர்’ என்றாயிற்று.

செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர். இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் அழகிய மலையும் இயற்கை சூழ்ந்த எழிலுமாக கோயில் அமைந்திருக்கிறது.

இரண்யாட்சனை அழித்து பூமியை நிலைக்கொண்டு வந்து, பூவுலகில் நிம்மதியைத் தந்தருளிய வராஹப் பெருமான், ’பூலோகத்தில் நான் எழுந்தருள இருக்கிறேன். அதற்கொரு மலை வேண்டும்’ என கருடாழ்வாரிடம் கேட்க, வைகுண்டத்தில் இருந்து பர்வதத்தை எடுத்து வந்தார் கருடாழ்வார். பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம்.

திருமலை வையாவூர் மலைதிருமலை வையாவூர் மலை
சொல்லப்போனால், மலைகளுக்கெல்லாம் மலை என்று அர்த்தம். அப்பேர்ப்பட்ட பிரம்மாண்ட மலையை எடுத்துவரும் போது அதிலிருந்து சிறு பகுதி பாலாற்றுக்கு அருகே விழுந்தது. ’இந்த இடமே நான் வசிக்க ஏதுவான இடம். எனக்கு விருப்பமான இடம் இதுவே!’ என அருளிய வராஹ மூர்த்தி, அங்கேயே எழுந்தருளினார். அதுவே திருமலை வையாவூர் மலை என்கிறது ஸ்தல புராணம்.

திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்று பல தலங்களைச் சொல்லுவோம். இந்தத் தலமும் திருப்பதிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது. திருப்பதியில் வராஹரை தரிசித்துவிட்டு வேங்கடவனை தரிசிப்பது போலவே, இங்கேயும் முதலில் வராஹ தரிசனம். அதையடுத்து வேங்கடவன் தரிசனம். இங்கே பெருமாளின் திருநாமம் - ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள்.

ஆதிசேஷ விமானத்தில் எழுந்தருளியுள்ளார் பெருமாள். ஆகவே, இதனை தட்சிண சேஷகிரி என்று விவரிக்கிறது புராணம். வேங்கடே பெருமாள், தொண்டைமான் முதலான எண்ணற்றவர்களுக்கு தரிசனம் தந்த திருத்தலம் என்பதால், பிரசன்ன வேங்கடேச பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்கேயுள்ள பாறையில், தேர்ச்சக்கரம் மற்றும் குதிரையின் குளம்பும் அச்சுகளாக இன்றைக்கும் தரிசிக்கக் கிடைக்கிறது.

திருமலை வையாவூர் மலைக்குச் செல்லும் படிகள்திருமலை வையாவூர் மலைக்குச் செல்லும் படிகள்
இந்தத் தலத்தின் தாயாருடைய திருநாமம் - ஸ்ரீஅலமேலு மங்கைத்தாயார். அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருகிறாள். மலையேறுவதற்கு 540 படிகள் இருக்கின்றன. அதேசமயம், மலைக்கு வருவதற்கு வாகனங்கள் வருவதற்கு ஒரு பாதையும் கீழே இறங்குவதற்கு இன்னொரு பாதையும் இருக்கின்றன. ஆகவே, மலையின் மீது கோயில் வாசல் வரை, வாகனங்களிலேயே வந்து செல்லலாம்.

அழகிய மலை. அற்புதக் கோயில். இங்கே உள்ள தீர்த்தம் வராஹ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. மாதந்தோறும் வருகிற திருவோண நட்சத்திர நன்னாளில், பெருமாளுக்கு விசேஷ பூஜைகளும் திருவோண தீபமும் ஏற்றி வழிபாடுகள் அமர்க்களப்படுகின்றன.

ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் (திருமலை வையாவூர்)ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் (திருமலை வையாவூர்)
நம் மனதில் என்ன குறைகள் இருந்தாலும் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீஅலமேலு மங்கைத் தாயாரிடமும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளிடம் பிரார்த்தனையாக வைத்துவிட்டால் போதும்... விரைவில் நிறைவேற்றித் தந்தருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!

செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், வாலாஜாபாத், வந்தவாசி என பல ஊர்களில் இருந்தும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து வந்து பெருமாள் தரிசனம் செய்யும் பக்தர்களும் இருக்கிறார்கள். செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில், படாளம் கூட் ரோடு எனும் இடத்தில் இருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில் சென்றால் திருமலை வையாவூரை அடையலாம். இங்கிருந்து கோயிலுக்குச் செல்ல ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகளும் உள்ளன.

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். திருமண பாக்கியம், குழந்தை வரம், நல்ல உத்தியோகம், கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை முதலானவற்றுக்காக பிரசன்ன வேங்கடேச பெருமாளிடம் வேண்டிக்கொண்டு தொடர்ந்து தரிசனம் செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

திருமலை வையாவூர்திருமலை வையாவூர்
திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அங்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்ற இயலாதவர்கள், திருமலை வையாவூருக்கு வந்து வராஹரையும் அலமேலுமங்கை தாயாரையும் பிரசன்ன வேங்கடேச பெருமாளையும் தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

திருமலை வையாவூருக்கு வாருங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்றங்களையும் தருவார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள்

Anna Nagar Tower Park, Anna Nagar, ChennaiThis park spreads across 15.35 acres and is known for having the tallest park ...
16/06/2023

Anna Nagar Tower Park, Anna Nagar, Chennai

This park spreads across 15.35 acres and is known for having the tallest park tower (135 ft) in the city. You have a bunch of trails to choose from and you can jog for an 8 km loop inside the park. Loving this? The park apparently has an amphitheatre, a bird watching deck, badminton courts, a skating rink, and a small lake! They also have trails for the differently-abled. Entry is free, so jog away! Restroom, parking, and food and water facilities are also available.

Address

6/328 Pallavarman Street Mahindra World City
Chengalpattu
603204

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918056360957

Website

Alerts

Be the first to know and let us send you an email when K A N Tours&Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K A N Tours&Travels:

Share

Category