18/08/2026
🔔ஆலயம் அறிவோம் - "பளிங்குக் கல்லில் பதிந்த பேரழகு – தில்வாரா கோவில்!" 🛕
🕉️தில்வாரா கோவில் சிறப்புகள் 🪔
🔹ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில் கி.பி. 11 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலை அற்புதமாகும். இது தூய வெள்ளை பளிங்கில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது.
🔹வெள்ளை பளிங்கு சிற்பங்கள்: முழுவதுமாக வெண்மை நிற பளிங்குக் கற்களால் உருவாகியுள்ளது. தூண்கள் மற்றும் கூரைகளில் செய்யப்பட்டுள்ள மலர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் தெய்வங்களின் வடிவங்கள் மிக நுணுக்கமானவை.
🔹 இது ஐந்து தனித்தனி ஜைனக் கோயில்களின் தொகுப்பாகும். அவை ஆதிநாத் (விமல் வசாஹி), நேமிநாத் (லுன் வசாஹி), ரிஷபதேவ் (பித்தல்ஹர்), பார்சுவநாத் (கர்தார் வசாஹி) மற்றும் மகாவீரர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
🔹 கி.பி. 1031-ல் விமல் ஷா என்பவரால் கட்டப்பட்ட இக்கோயிலின் மைய மண்டபம் மற்றும் விதானங்கள் (Ceilings) கற்பனைக்கு எட்டாத கலை நயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.
🔹யானைகளின் ஊர்திப் பயணம்: அக்காலத்தில் வாகன வசதிகள் இல்லாததால், அம்பாஜி மலையிலிருந்து மவுண்ட் அபு மலைக்கு யானைகள் மூலம் பளிங்கு பாறைகளைக் கொண்டுவந்து இக்கோயிலைக் கட்டியுள்ளனர்.
🔹ஒப்பற்ற கைவினைத்திறன்: கூரைகளில் உள்ள வட்ட வடிவப் பூ வேலைப்பாடுகள் தொங்கலில் உள்ள தாமரை மலர் போன்ற அமைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.
புக் செய்ய:
📲செல்: 9003998648, 9344457790