Sanjay Travels""

Sanjay Travels"" costumer SERVICE is our MOTTO

30/05/2023

Evening Energy.
------------------------

5ive undeniable Facts
of Life :

👉1.
Don't educate
your children
to be rich.
Educate them
to be Happy.
So when
they grow up
they will know
the value of things
not the price

👉2.
Best awarded words
in London ...

"Eat your food
as your medicines.
Otherwise
you have to
eat medicines
as your food"

👉3.
The One
who loves you
will never leave you
because
even if there are
100 reasons
to give up
he will find
one reason
to hold on

👉4.
There is
a lot of difference
between
human being
and being human.
A Few understand it.

👉5.
You are loved
when you are born.
You will be loved
when you die.
In between
You have to manage...!

29/05/2023

நான் என்னும் அகங்காரம்!!

ஒரு நாள் இலைகள் கூடி பேசிக்கொண்டிருந்ததாம். அப்போது “வாழை இலை சொன்னதாம்…”நான் தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ (சிறப்பு) யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு, என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் நான் தான் சிரேஷ்டம் என்றதாம் .*

*வாழை இலையின் பக்கத்திலிருந்த வெற்றிலை குபீரென்று சிரித்து ….’ அட பைத்தியமே , ‘நீ என்ன ஸ்ரேஷ்டம்? நன்றாக சாப்பிட்டு முடித்ததும் உன்னை ‘குப்பைத் தொட்டியில் ‘அல்லவா வீசி எறிகிறார்கள், என கிண்டல் அடித்தது .*

*உன்னை விட நான் தான் சிரேஷ்டம், தெரியுமா? ‘மடத்து’ சமையல் ருசியில் அனைவரும் வயிறு நிறைய.. ஏன் அதற்கு மேலும் நிறைய சாப்பிட்டு விடுவார்கள்….. மடத்து சாப்பாட்டின் ருசி அப்படிப்பட்டது, நெஞ்சு நிறைய சாப்பிட்டவர்கள் அடுத்து , அது ஜீரணமாக தேடுவது என்னைத்தான் வயிற்றிலிருக்கும் சாப்பாடு ஜீரணமாக நான் மிக, மிகத் தேவை அதனால் நான் தான் மிகச் சிரேஷ்டம் என பதிலளித்ததாம் வெற்றிலை.!*

*இதைக் கேட்ட கருவேப்பிலை சொன்னதாம்….. என்ன? நீ தான் சிரேஷ்டமா? என்ன ஒரு முட்டாள் தனமாக பேசுகிறாய்….. ஜீரணமாக உன்னை உபயோகித்துவிட்டு சக்கையாக்கி!! உன்னை “தூ’ என துப்பி விட்டு போகிறார்கள்…..ரோடெல்லாம் உன்னால் அசுத்தம்…. ’நீ என்ன சிரேஷ்டம் ?…. என கூறிய கருவேப்பிலை, ‘ நான் தான் மிக மிக முக்கியமானவன், எங்கு சாப்பாடு நடந்தாலும், எந்த சமையல் ஆனாலும், நான் இல்லாமல் ருசிக்குமா? அனைத்து சமையலிலும் என் தாளிப்பு இல்லாமல் ருசிக்காது, அதனால் நான் தான் ஒசத்தி, சிரேஷ்டம் என்றதாம் கருவேப்பிலை……..*

*வாழை இலையும் ,வெற்றிலையும் குபீரெனச் சிரித்ததாம்….. சமையல் ஆகும் வரைத் தான் உன் ஆட்டமெல்லாம்,… இலைக்கு வந்ததும் , முதலில் உன்னை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்து தானே சாப்பிடுகிறார்கள்…. ஒதுக்கப்பட்ட நீ என்ன சிரேஷ்டம்? எனச் சொல்லி கேலி செய்ததாம் இரண்டும்.*

*இதையெல்லாம் கேட்டும் மவுனமாக இருந்த ஒரு இலையை, பக்தர் எடுத்து தெய்வத்தின் மேல் சூட்டினார் , தெய்வத்தின் மார்பில் அமர்ந்த அந்த இலை சொன்னதாம்……”நான் துளசி”*

*வாழை இலையே!!!! நீ தான் ஒசத்தி ,சிரேஷ்டம் என பேசினாய், அகங்காரப்பட்டாய்……. அதனால் நீ குப்பை தொட்டிக்கு போனாய்.*

*வெற்றிலையே!! உன் கர்வப் பேச்சால் நீயும் அகங்காரம் கொண்

26/05/2023

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சிப் பெரியவர்

வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள். ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், "என் சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே' என்று கதறுவார்கள். சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர் சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.

படிப்போமா!

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை. உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள். உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே! உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது... உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே.... இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது! உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ! உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள்...!

25/05/2023

எது திருப்தி?

🌷🌷மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது.*

*தெய்வத்தை நம்புகிறவர் தோற்றாலும் ஜெயிக்கிறார். நம்பாதவர் ஜெயித்தாலும் தோற்கிறார்.*

*என்னை தவிர நீங்கள் யாரையும் வணங்ககூடாது என்பவனல்ல கடவுள். நீங்கள் எதை வணங்கினாலும் நான் அதில் இருப்பேன் என்பவனே கடவுள்.*

*நீங்கள் தோற்பதுமில்லை, தோற்கப்போவதுமில்லை. நீங்கள் செய்வது ஒன்றேதான் நற்சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தாங்கிப்பிடிக்க எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறான்.*

*நிறைவான மனமே ஒருவருக்கு கிடைக்கும் மிகப் பெரிய வரம். இறைவன் கொடுப்பதை திருப்தியுடனும் மகிழ்வுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.*

*இல்லாததை நினைத்து ஏங்காமல் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள். ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றியோடு இருங்கள்.*

*நீங்கள் அனுபவிக்கும் எல்லாமும் எல்லோருக்கும் இங்கு கிடைப்பதில்லை. சில நேரங்களில் இல்லாததை நினைத்து, இருப்பதை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.*

*திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் நிறைவு செய்யுங்கள்.*

*அதன் பிறகு பாருங்கள் உங்களைப் போல அழகான வாழ்க்கையை வாழ இந்த உலகில் யாராலும் முடியாது.*

*திருப்தி என்ற ஒன்று மனதில் வந்து விட்டால் போதும். வாழ்க்கை அற்புதமானதாகும். அழகானதாகும்.*

*அதை அனுபவித்து வாழ்ந்து விடுங்கள். இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்கட்டும். செழிக்கட்டும்.*

💞வாழ்த்துகள்.💞

23/05/2023

ஒரு மனிதன் ஒரு முனிவரிடம் சென்று சுவாமி 'ஞானம் என்றால் என்ன?' என்று கேட்டான்.

அதற்கு முனிவர் ஞானம் என்றால் ' இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பதுதான் ' என்றார்.

அதை நீங்கள் ' எங்கு கற்றீர்கள்? ' எனக் கேட்டான்.

நான் அதை ஒரு கழுதையிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றார் முனிவர். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.

கழுதையிடம் இருந்து கற்றுக் கொண்டீர்களா? எப்படி? என்று கேட்டார்.

நீங்கள் இன்று போய் நாளை காலையில் ஆசிரமத்துக்கு வாருங்கள் என்று வந்தவரை அனுப்பி விட்டார் முனிவர்.

மறுநாள் காலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த அவரை முனிவர் உட்காரவைத்தார். கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக ஒரு கழுதை சென்றது அதை காட்டியிருக்கிறார் முனிவர்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முனிவர் கூறியிருக்கிறார் ' இந்த கழுதை ஒவ்வொரு நாளும் காலையில் அழுக்கு மூட்டைகளை சுமந்து செல்கின்றது. கொஞ்ச தூரத்தில் ஒரு ஆறு இருக்கிறது அங்கே போய் இந்த அழுக்குத் துணிகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் சுத்தமான துணியுடன் மாலையில் திரும்பி இந்த வழியாக வருகிறது'. இந்தக் கழுதை மாதிரி நாம் இருக்க வேண்டும். காலையிலே போகும்போது அழுக்கு மூட்டைகளை சுமந்து செல்கிறோம் என்ற வருத்தமும் அதற்கு இல்லை. மாலையில் திரும்பி வரும்போது சுத்தமான துணிகளை சுமந்து கொண்டு வருகிறோம் என்கிற மகிழ்ச்சியும் அதற்கு இல்லை .இதை பார்த்து தான் நான் ஞானத்தை கற்றுக் கொண்டேன் என்றாராம் முனிவர்.

ஆம் தியேட்டருக்குச் சென்று ஒரு படம் பார்க்கின்றோம். ஒரு நீர்வீழ்ச்சி அதில் நீர் வழிகிறது படம் முடிந்தால் திரை நனைந்து இருக்காது. அதே போல் தீப்பிடித்து எரிகின்ற காட்சிகள் வருகின்றது. ஆனால் அந்தத் திரை கருகிப் போகாது. படத்தில் வருகின்ற நீரும் நெருப்பும் அந்த திரையை பாதிப்பதில்லை.

நாம் அந்தத் திரை மாதிரி இருக்க வேண்டும். அந்தப் பக்குவம் நமக்கு வந்துவிட்டால் எந்த இன்பமும் துன்பமும் நம்மை ஒன்றும் செய்யாது.

யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. கற்றுக் கொடுப்பவர் யாராகவும் இருக்கலாம் ஆனால் நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

21/05/2023

எது நல்ல நட்பு?

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.
உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ‘ஆம்’ என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்" என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
"அவர் செய்த செயலை
நேரடியாகப்
பார்த்துவிட்டுத்தான், அவரைப் பற்றி கூறுகிறாயா ?"
என்று கேட்டார்.
இவர் இல்லை என
பதில் சொன்னார்.
"அவரைப் பற்றிய
நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? "
என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
இவர் இல்லை என
பதில் சொன்னார்.
"அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா,,??
என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.
இதற்கும் இவரிடம் இல்லை என்றே பதில் வந்தது.
"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு
ஆரோக்கியமான
விவாதங்களையே
மேற்கொள்ளும். அதனால் நல்ல நண்பர்களை எப்போதும் இழந்து விடாதீர்கள்.

20/05/2023

*444444444444444444444444அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாங்க ஸ்பெஷல்....?????*

01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க.

02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.

03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....????

04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.

05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு., ‘நாலு’ம் புரிஞ்சவரு.

06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்....

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும்.
நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....


ஔவையாரின் ‘நால்’வழி நீதி நூல். சொல்லும் நான்கு பொருட்கள் பால்., தெளிதேன்., பாகு., பருப்பு இவை ‘நாலு’.

நாலும்., இரண்டும் சொல்லுக்குறுதி... இதில் ‘நாலு’ என்பது.. நாலடியார்....

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
‘வேதம் நான்கினின்’ மெய்ப்பொருளாவது நாராயணா.

‘நான்மறை’.... என்பது வேதங்கள் ‘நான்கு’.

வைணவ நெறியைப் பரப்பிய ஆச்சார்யர்களில் முதன்மையானவர்கள் ‘நான்கு’ பேர். ஸ்ரீமந்நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ,ஸ்வாமி தேசிகன். இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.

மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் ‘நான்கு’ அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்) எடுத்ததாகும்.

வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர்., அவற்றை ‘நாலு’ ரிஷிக்களிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள்
ருக் ═ பைலர்., யஜூர் ═ ஜைமினி., சாம ═ வைசம்பாயன., அதர்வண ═ சுமந்து.

தசரதனுக்கு ‘நான்கு’ பிள்ளைகள்.

‘நான்கு’ புருஷார்த்தங்கள்....
அவை தர்ம., அர்த்த., காம., மோட்சம்.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் ‘நான்கு’
அவை ~ பிரம்மசர்யம்., கிருஹஸ்தாச்ரமம்., வானப்ரஸ்தம்., சந்யாசம்.

கண்ணனிடம் பக்தி செய்யும் நால்வர் கீதை சொல்வது
ஆர்த்தி,அர்தார்த்தி,ஜிஞ்ஜாசு,ஞானி

திருமங்கை ஆழ்வார் பெருமாளை திருஎழுகூற்றிருக்கையில் விளிப்பது
சுந்தரநால்தோளன் என

பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் ‘நான்கு’ பேர். சநகர்., சநாதனர்., சநந்தனர்., சனத் குமாரர்.

பிரம்மாவுக்கு ‘நான்கு’ த

19/05/2023

எதிர்வினை.

மனைவி; என்னங்க உங்கம்மாவை முதியோா் இல்லத்தில் சோ்க்கப் போனீங்களே என்னாச்சு...?

கணவன்; "அதெல்லாம் சோ்த்தாச்சு".

மனைவி ; "எங்கம்மா சொன்னது சாிதாங்க.

கணவா் ; "என்ன சொன்னாங்க"

மனைவி ; "நீங்க தங்கமானவங்களாம் ஆம்பளைனா உங்களை போல தான் இருக்கனும்பாங்க".

கணவா்; "ஏனாம்.??

மனைவி; "மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதான்."

கணவா்; " சொல்ல மறந்துட்டேன். வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தொிந்தவா்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசனையா இருந்தேன்"

மனைவி ; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா.?"

கணவா்; "கிடைச்சுட்டாங்க".

மனைவி ; "அப்படியா யாரு..?"

கணவா் : "உங்கம்மா. இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சோ்த்துட்டு போனான்".

மனைவி : "என்னது..? பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சோ்த்துட்டானா? அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா.? அவன் உருப்புடுவானா.? பெத்த தாயிக்கு மூணுவேளை கஞ்சி ஊத்த அவனுக்கு வக்கில்லையா.? அப்படி என்னதான் அவன் பொண்டாட்டி தலையணை மந்திரம் ஓதினாளோ? பெத்த தாயை காப்பாத்த முடியாத அவனெல்லாம் வெளங்கவே மாட்டான்.

அவள் ஆவேசம் வந்தவளாய் ஆத்திரத்தை அடக்கமுடியாமல் ஓ'வென்று கத்தி கதறத் தொடங்கினாள். எந்த வினைக்கும் அதனை ஒத்த எதிா்வினை உண்டு. இதுதான் பிரபஞ்ச நியதி. இதில் எவரும் தப்பவே முடியாது.

படித்ததில் பிடித்தது.

18/05/2023

இறைவனை ஏன் வணங்க வேண்டும்?

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"

ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்க

Address

Chennai
600064

Telephone

04422230181

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjay Travels"" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjay Travels"":

Share

Category