Sree Azhakinachiyar Tour & Travels

Sree Azhakinachiyar Tour & Travels Welcome to Tirupati Balaji, Darshan. The exclusive cars operators to Tirupati Balaji Darshan by luxury cars. From Chennai.

Daily one-day trip to Tirupati Balaji darshan. From Chennai.
* a/c Vehicles,
* Delicious breakfast,
* 300% online VIP Darshan,
* 2 Laddus included,
* Delicious Lunch,
* Door step pickup & drop,

Sree Azhakinachiyar Tours Travels, Chennai.
+919444695252
+919600100599

‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல.பக்கிம் ச...
13/05/2026

‘ஜெய் ஹிந்த்’-தைப் போல ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லையும் தேசபக்தி முழக்கம் என்கிறார்கள் ‘சங்கிகள்’; அது உண்மையல்ல.

பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கலகத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது.

முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்துவிட்டு, இந்து - ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’.

“நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் - மதம் - பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால் நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை; 7 கோடி இந்துக்கள் வாளேந்தி களத்தில் குதிப்போம்” என்பதே வந்தே மாதரம் பாடலின் கருத்து.

வந்தே மாதரம் பாடலைப் பாடி வைணவ இந்து இளைஞர்கள் முஸ்லிம்களை கொலைசெய்து, முஸ்லிம் பெண்களை ‘பாலுறவு’ வன்முறைக்கு உள்ளாக்கி முற்றாக ஒழித்து விட்டு, காளி தேவி முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

அப்போது கதாநாயகன் சத்யானந்தாவிடம், “நாம் தான் முஸ்லிம்களை அழிந்து ஒழித்து விட்டோமே; இந்து இராஜ்யம் வரவில்லையே; ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு கதையின் நாயகன் சத்யானந்தா, “இப்போது நமக்கு எதிரிகளே இல்லை; ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள்; அவர்கள் தங்கள் அதிகாரங்களை நம்முடைய விஷ்ணு கடவுளுக்குத் தான் காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்று பதில் கூறுகிறார்.

இப்படி இஸ்லாமியர் ஒழிப்பையும் ஆங்கிலேயர் ஆதரவையும் கொண்டாடும் ‘வந்தே மாதரம்’ - மனுதர்ம கூட்டத்துக்கு தேசபக்தி பாடலாகி விட்டது. காந்தி ‘வந்தே மாதரம்’ பாடலை ஏற்பதற்கு மறுத்து விட்டார்.

1937இல் காங்கிரஸ், இப்பாடலில் இடம் பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளை ஏற்க மறுத்து விட்டது. தேசிய கீதமாக்க முடியாது என்று கூறி விட்டது.

2006இல் ‘வந்தே மாதரம்’ பாடலின் நூற்றாண்டாகக் கருதி, இந்தியா முழுதும் பள்ளிகளில் பகல் 11 மணிக்கு பா டலாம். அதில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் எதிர்ப்பு வரிகளைப் பாட வேண்டாம். விருப்பமில்லாத பள்ளிகள் வந்தே மாதரத்தைப் பாடத் தேவையில்லை என்று ஒன்றிய காங்கிரஸ் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

உண்மையில், 1996 - ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நூற்றாண்டே அல்ல; 1870இல் எழுதப்பட்டு, 1882இல் ஆனந்த மடம் நாவலில் சேர்க்கப்பட்ட பாடலுக்கு 1996 எப்படி நூற்றாண்டு ஆக முடியும்?

‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட மறுப்பவர்களை தேச துரோகிகள் என்று அப்போது குற்றம் சாட்டியது பா.ஜ.க.! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இப்பாடலை மதராஸாக்கள் (முஸ்லிம் பள்ளிகள்) உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

ஆக, ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடல் அல்ல; இஸ்லாமிய வெறுப்பையும் ஆங்கிலேயர் புகழ்ச்சியையும் கொண்டது. பாடலின் முதல் இரண்டு பத்திகள், ‘தாய் மண்ணைப் புகழ்கிறது’ என்பதாலேயே அது தேசபக்திப் பாடலாகி விடாது.

13/12/2025
12/12/2025

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

06/11/2025

Effort is not achievement.
Nothing is impossible if you try.

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள்  சிந்தித்து  ரசிப்பதற்கு...1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.2. தீயில் இட்ட நெய் த...
23/08/2025

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு...

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அணைக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.
🌹🌹 இனிய காலை வணக்கம் 🌹🌹

தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது ...
15/04/2025

தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..

இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.

*1.* பிரபவ - *நற்றோன்றல்*
*2.* விபவ - *உயர்தோன்றல்*
*3.* சுக்கில - *வெள்ளொளி*
*4.* பிரமோதூத - *பேருவகை*
*5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்*
*6.* ஆங்கீரச - *அயல்முனி*
*7.* சிறிமுக - *திருமுகம்*
*8.* பவ - *தோற்றம்*
*9.* யுவ - *இளமை*
*10.* தாது - *மாழை*
*11.* ஈசுவர - *ஈச்சுரம்*
*12.* வெகுதானிய - *கூலவளம்*
*13.* பிரமாதி - *முன்மை*
*14.* விக்ரம - *நேர்நிரல்*
*15.* விச - *விளைபயன்*
*16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*
*17.* சுபானு - *நற்கதிர்*
*18.* தாரண- *தாங்கெழில்*
*19.* பார்த்திப - *நிலவரையன்*
*20.* விய - *விரிமாண்பு*
*21.* சர்வசித்த - *முற்றறிவு*
*22.* சர்வதாரி - *முழுநிறைவு*
*23.* விரோதி - *தீர்பகை*
*24.* விகிர்தி- *வளமாற்றம்*
*25.* கர - *செய்நேர்த்தி*
*26.* நந்தன - *நற்குழவி*
*27.* விசய - *உயர்வாகை*
*28.* சய - *வாகை*
*29.* மன்மத - *காதன்மை*
*30.* துன்முகி - *வெம்முகம்*
*31.* ஏவிளம்பி - *பொற்றடை*
*32.* விளம்பி - *அட்டி*
*33.* விகாரி - *எழில்மாறல்*
*34.* சார்வரி - *வீறியெழல்*
*35.* பிலவ - *கீழறை*
*36.* சுபகிருது - *நற்செய்கை*
*37.* சோபகிருது - *மங்கலம்*
*38.* குரோதி - *பகைக்கேடு*
*39.* #விசுவாவசு - * #உலகநிறைவு*
*40.* பராபவ - *அருட்டோற்றம்*
*41.* பிலவங்க - *நச்சுப்புழை*
*42.* கீலக - *பிணைவிரகு*
*43.* சவுமிய - *அழகு*
*44.* சாதாரண - *பொதுநிலை*
*45.* விரோதி கிருது - *இகல்வீறு*
*46.* பரிதாபி - *கழிவிரக்கம்*
*47.* பிரமாதீச - *நற்றலைமை*
*48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி*
*49.* இராட்சச - *பெருமறம்*
*50.* நள - *தாமரை*
*51.* பீங்கள - *பொன்மை*
*52.* காளயுக்தி- *கருமைவீச்சு*
*53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்*
*54.* ரவுத்ரி- *அழலி*
*55.* துன்மதி- *கொடுமதி*
*56.* துந்துபி- *பேரிகை*
*57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி*
*58.* இரக்தாட்சி- *செம்மை*
*59.* குரோதன்- *எதிரேற்றம்*
*60.* அட்சய - *வளங்கலன்*

* எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்
பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டிங்கு வீடுற்றேன்

* பாட்டோடு பொருந்தாத
இசையால் பயன் இல்லை

* உயிர் இரக்கம் இரக்கம் இல்லாத கண்களாலும் பயன் இல்லை

* எண்ணத்தில் கவனமாக இருந்தால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும். ஏனெனில், எண்ணத்தின் வெளிப்பாடே சொல்லும் செயலும் ... ஞானம் பெற்றவரிடம் உண்மையின் நறுமணம் இருக்கும்
* 🙏அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள்*
* 🙏சைவ உணவே தெய்வ உணவு என்கின்ற உண்மை நிலை உணர்ந்து மாமிசம் உணவு அறவே தவிர்த்து இறையருள் பெற்று நீடூழி வாழ்க!

சிவ சிவ

அஞ்சலை அம்மாள்(இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை) அஞ்சலை அம்மாள் 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த...
27/10/2024

அஞ்சலை அம்மாள்
(இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை)

அஞ்சலை அம்மாள் 1 சூன் 1890 - 20 பெப்ரவரி 1961), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளியும் பின்னாளைய தமிழ்நாட்டு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

பிறப்பு
1 சூன் 1890
கடலூர்,
தென் ஆற்காடு மாவட்டம்,
மதராசு மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)

இறப்பு
20 பெப்ரவரி 1961 (அகவை 70)
சி. முட்லூர்,
தென் ஆற்காடு மாவட்டம்,
மதராசு மாநிலம், (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா

பெற்றோர்
முத்துமணி, அம்மாக்கண்ணு

வாழ்க்கைத்
துணை
முருகப்பா (தி. 1908)

பிள்ளைகள்
அம்மாக்கண்ணு
(எ) லீலாவதி
காந்தி
ஜெயவீரன்
கல்யாணி
உறவினர்கள்
க. இரா. ஜமதக்னி (மருமகன்)
மு. நாகநாதன் (மருபேரன்)
எழிலன் நாகநாதன் (கொள்ளுப்பேரன்)

1 சூன் 1890 அன்று கடலூரில், முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில், அம்மாக்கண்ணு - முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்த அஞ்சலை அம்மாள், ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். அதன்பின் அக்கால அரசியல், மற்றும் பிரித்தானியரின் அடக்குமுறை குறித்து அறிந்துகொண்டார்.

இன்றைய கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள சின்னநெற்குணம் எனும் சிற்றூரில் வேளாண்மை மற்றும் நெசவுத் தொழில் செய்து வந்த முருகப்பா என்பவரை 1908-இல் திருமணம் செய்து கொண்டார் அஞ்சலை. அவரின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக முருகப்பாவும் கடலுரிலேயே தங்கிப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர் ஒரு நாளிதழ் முகவராகவும் இருந்தார்.

நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாக செய்து வந்த இவ்விருவரும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தறி நெசவுப்பணியோடு காங்கிரசு கட்சிப்பணியும் செய்தனர். "பெரியார்" ஈ. வெ. இராமசாமியுடன் சென்று பல சிற்றூர்களில் நெசவு செய்த கைத்தறித் துணிகளை விற்றனர். அஞ்சலை-முருகப்பா இணையருக்குப் பின்னாளில் அம்மாக்கண்ணு (1916) காந்தி, ஜெயவீரன் (1931), கல்யாணி உள்ளிட்ட ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

தறி நெசவுப்பணியோடு காங்கிரசு கட்சிப்பணியும் செய்தனர். "பெரியார்" ஈ. வெ. இராமசாமியுடன் சென்று பல சிற்றூர்களில் நெசவு செய்த கைத்தறித் துணிகளை விற்றனர். அஞ்சலை-முருகப்பா இணையருக்குப் பின்னாளில் அம்மாக்கண்ணு (பி.1916) காந்தி, ஜெயவீரன் (1931), கல்யாணி உள்ளிட்ட ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

"மகாத்மா" காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலை அம்மாள். 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவு செய்தார். அப்பொழுது பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த சுப்பிரமணிய பாரதி, இவரைப் பாராட்டிச் சென்றார். முன்னதாக 1914 வாக்கில், "பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே அஞ்சுகிற காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கைக்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பாரதியார் கூறினார்.

1857 சிப்பாய்க் கிளர்ச்சியின்போது பல சிப்பாய்களையும் பொதுமக்களையும் படுகொலைசெய்யக் காரணமாயிருந்த ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேயப் படைத்தளபதியின் நினைவாக 1860-இல் சென்னை மவுண்ட் சாலையில் ஒரு சிலையைப் பிரித்தானிய அரசு நிறுவியது. அச்சிலையை அகற்ற வலியுறுத்தி 1 செப்டம்பர் 1927 அன்று எஸ். என். சோமையாஜுலு தலைமையில் நடைபெற்ற நீல் சிலை சத்தியாகிரகத்தில் முருகப்பாவுடனும் மகள் அம்மாக்கண்ணுவுடனும் பங்கேற்று அச் சிலையை உடைத்தமைக்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார் அஞ்சலை.அங்கு இவர்களை 1927 டிசம்பரில் சந்தித்த காந்தி, அம்மாக்கண்ணுவின் பெயரை லீலாவதி என்று மாற்றித் தன்னுடன் வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.

10 சனவரி 1931 அன்று கடலூரில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார். அதன்பின் ஆறு மாதசிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். நிறை மாதத்தில், சிறை விடுப்பில் வெளிவந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.அதன் பின் 15 நாளான கைக்குழந்தையுடன் சிறைக்குச் சென்று எஞ்சிய இரண்டு மாத தண்டனையை நிறைவு செய்தார். விடுப்பில் வந்து குழந்தை பிறந்ததால் அதற்கு ‘செயில் வீரன்’ என்று பெயர் சூட்டினார். பின்னர் அக்குழந்தை ‘ஜெயவீரன்’ என்று அழைக்கப்பட்டார்.

1931 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார்.

1932-இல் காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியலை நடத்தினார், இதனால் ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

1933 சட்டமறுப்பு மறியலில் பங்கேற்றார். அதே ஆண்டு அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாத சிறைத்தண்டனை பெற்றார்.

1934-இல் காந்தி, கடலூருக்கு வந்தபோது அஞ்சலையம்மாளை சந்திக்க முயன்றார். பிரித்தானிய அரசு காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலையின் துணிவைக் காரணமாகக் காட்டி, காந்தியடிகள் இவரை "தென்னிந்தியாவின் ஜான்சிராணி" என்று அழைத்தார்.

1940 தனிநபர் சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்று 6 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றுக் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் (1941-42) பங்கேற்று சென்னை உட்படப் பல நகரங்களுக்கும் சென்று உரையாற்றியமைக்காகச் சிறை சென்றார்.

1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தார்.

1937, 1946, 1952 என மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“அன்னியத் துணிகளை எதிர்க்க மகாத்மா காந்தியடிகள் கதர் கொண்டு வந்தார். இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போக விடாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கமே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமின்றி கவுரவமாய் இருப்போம். கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். காலை 10 மணிக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு திரும்ப வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டுக்கு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏழைகளுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”.

24 மே 1946 அன்று சென்னை மாகாண சட்டமன்றத்தில் அஞ்சலை அம்மாள் ஆற்றிய உரை, (சட்டமன்ற அவைக்குறிப்பு தொகுதி-1, பக்.317, மே, ஜூன்-1946)
தன் பதவிக்காலத்தில் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு ஆளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாக புவனகிரி செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்குக் கொண்டு வந்தார். குடிநீர் சிக்கலும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அக் கிளை வாய்க்கால், "அஞ்சலை வாய்க்கால்" என அழைக்கப்படுகிறது.
அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றினார். அப்போது அவரின் முயற்சியால் எக்சு-கதிர் கருவி கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

பண்ருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் தரமான குடி நீர் கிடைக்காமையால் அப்பகுதி மக்களுக்கு நரம்பு சிலந்தி பாதிப்பு ஏற்பட்டது. அஞ்சலையம்மாள் அத்தகைய சிற்றூர்களில் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார்.

தான் குடியிருந்த வீட்டை அடகு வைத்துக் கட்சிப் பணிக்காகவும் விடுதலைப் போராட்டத்திற்காகவும் செலவு செய்தார் அஞ்சலை. கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வருகையில் அவர் ஆதரவாளர்கள் சிலர் வீட்டை மீட்டுள்ளனர், அதை அஞ்சலை பெயரில் எழுதி வைத்தால் மீண்டும் அடகு வைத்துச் செலவு செய்து விடுவார் என்று அவரது மூத்த மகன் காந்தி மற்றும் இளைய மகன் ஜெயவீரன் பெயரில் எழுதி வைத்தனர்.

சிதம்பரம் அடுத்துள்ள சி. முட்லூர் என்ற சிற்றூரில் தனது மூத்த மகன் காந்தியுடன் குடியேறி வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த அஞ்சலை, அதே ஊரில் 20 பிப்ரவரி 1961 அன்று தன் 71-ஆம் அகவையில் காலமானார். மார்ச் 2 அன்று அவருக்கும் பிற முன்னாள் உறுப்பினர்களுக்கும் சென்னை மாநில சட்டப்பேரவையில் இரு மணித்துளிகள் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

த. ஸ்டாலின் குணசேகரன் எழுதிய விடுதலை வேள்வியில் தமிழகம் (2001) என்ற நூலில் அஞ்சலை அம்மாள் பற்றிய குறிப்புகள் உள்ளன. சில தமிழ் இதழ்களில் கடல் நாகராசன் எழுதியதோடு சிறுநூல்களும் வெளியிட்டு உள்ளார்.

ராஜா வாசுதேவன் எழுதிய தியாகத் தலைவி அஞ்சலை அம்மாள் என்ற வரலாற்றுப் புதினத்தை 2021-இல் தழல் வெளியீடு வெளியிட்டது.

அடைக்கல பத்துபத்தி முதலாம் அவற்றில் பத்தி எனக்குக் கூடாமல்எத்திசையும் உழன்றேடி இளைத்துவிழும் காகம் போல்முத்திதரும் நகர் ...
17/10/2024

அடைக்கல பத்து

பத்தி முதலாம் அவற்றில் பத்தி எனக்குக் கூடாமல்
எத்திசையும் உழன்றேடி இளைத்துவிழும் காகம் போல்
முத்திதரும் நகர் எழில் முக்கியமாம் கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

நான் என்ன செய்வேன் என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே! பக்தி அவ்வளவு எளிதானதாக இல்லை. எங்கு சென்று அமைதியாக அமர்ந்தாலும்.அந்த இடம்தான் அமைதியாக இருக்கிறதே தவிர மனம் அமைதி பெறவில்லையே எண்ணற்ற எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே! நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ எட்டுத் திசைகளிலுமே மாற்றி மாற்றி பறந்து களைப்புற்று நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம். முக்தி தரும் சப்த சேத்திரங்களில் தலை சிறந்த அந்திகிரி என்னும் காஞ்சிபுரத்தில் அருளாட்சி செய்யும் அருள்மிகு வரதராசா உன் திருவடிகளை சரணம்!

Address

70, Rajamannar Salai
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Sree Azhakinachiyar Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sree Azhakinachiyar Tour & Travels:

Share

Category