Sree Balaji Travels

Sree Balaji Travels Our Speciality is Tirupati Tour Packages. We have well planned Tirupati Tour Packages and we do cust

10/01/2024

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...

எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

🌼பிரம்மம்🌻அஉம் அகத்திய மாரிசி நம ☘🙇‍♂️அஉம் சற்குருவே நம 🌻பிரம்மத்தை பற்றி பகவான்ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அருமையான 4 கத...
15/11/2022

🌼பிரம்மம்🌻

அஉம் அகத்திய மாரிசி நம ☘🙇‍♂️
அஉம் சற்குருவே நம 🌻

பிரம்மத்தை பற்றி பகவான்
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அருமையான 4 கதைகள் 🌼

கதை 1:

ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

கதை 2:

புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.

கதை 3:

ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.

கதை 4:

நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.

பரப்பிரம்மம்🌻

ஓர் அறையில் ஒரு மண்குடத்தை வைத்தால், குடத்தினுள் கட்டுண்டிருக்கும் ஆகாசமும், அறையினுள் கட்டுண்டிருக்கும் ஆகாசமும், வெளியே உள்ள ஆகாசமும் வேறுபட்டனவா? குடம் உடைந்து அறையின் சுவர்களையும் கூரையையும் நீக்கிவிட்டால், குடம், அறை இவற்றினுள் இருக்கும் ஆகாசமும், வெளி ஆகாசமும் வித்தியாசமில்லாமல் ஒன்றே ஆகிவிடுகின்றன அல்லவா? அதே போல் ஒன்றேயாகிய பேருண்மையான முழு முதற்பொருள்தான், உயிர்களின் உடலிலும் வெளியிலும், எங்கும் ஊடுருவிப் பரவி, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கிறது என்று அறிய வேண்டும். அதுதான் பரப்பிரம்மம்.
_ பகவத்கீதை.

ஒன்றுதான் அனைத்தும்🌼
அகம்ப்ரம்மாஸ்மி 🌼

ஒன்றில் மட்டுமே இருப்பது அனைத்திலும் இருக்காது. அனைத்திலும் இருக்கும் ஒன்றே ஒவ்வொன்றிலும் இருக்கும்.

ஒன்றில் மட்டுமே இருப்பதை வைத்து ஒன்றாக மட்டுமே உணரமுடியும். அனைத்திலும் இருப்பதை வைத்துதான் அனைத்துமாக உணரமுடியும்.

அனைத்தும் ஒன்றுதான்🌻
அயம் ப்ரம்மாஸ்மி 🌻

அஉம் பரப்ரம்மனே நமஹ 🌼🌻🙇‍♂️

11/11/2022

ஒரு நல்ல கதை.
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....
அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்.....

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?

பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு, உயிர் பிரியும் தருண‌த்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.

பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.

விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா?

வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.

அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான்.

உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும்
சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.

கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார்.

ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.

அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு
தெரியவில்லை.

சகாதேவனுக்கு மட்டும்
அது தெரிகிறது.

கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும்
விறகை சுமந்து வந்தார்கள்.

அவர்கள் க‌ளைப்பாவது நியாயம்.

உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது.
நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான்.

உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது.

சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனது தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும்,இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது
என்று சகாதேவனிடம்
சத்தியத்தை கிருஷ்ணர்
வாங்கிக் கொள்கிறார்

தனக்கு முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம்
அதிகமாகிவிட்டது.

துரியோதனன், பாண்டவர்களை
அழிப்பதற்கு , போருக்கான
சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம்
கேட்க , சகாதேவனும் நாளைக்
குறித்துக்கொடுக்கிறான்.

அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில்
உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும்
தருவாயில்தான், கர்ணன் தன்
உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது.

இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில்
இந்த உண்மையை தெரிந்து
கொள்ளமுடியவில்லையே
என்று ஜோதிடத்தில் நம்பிக்கை
இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப்
போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா!ஜோதிடம்
என்பது பொய்தானே என்று
கேட்கிறான்.

அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே
இப்படி கூறலாமா?என்று சொல்கிறார்..

ஜோதிடத்தில் அனைவருடைய
பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து
கொண்டேன்.

ஆனால் கர்ணன் என்
உடன்பிறந்தவன்
என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை.

அப்படியென்றால்
ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா? என்று மீண்டும்
கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னாரு........
பாருங்க பதில்.

ஆஹா...

அனைத்தையும் நீ ஜோதிடத்தில்
தெரிந்துகொண்டால் பிறகு
நான் எதற்கு???

இந்த பதிலைகேட்டவுடன்
சகாதேவனுக்கு
தூக்கிவாரிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.

எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் 99% மட்டுமே
தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும்.

மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது
காஞ்சிமகா பெரியவரிடம்
இருந்து உதிர்ந்தது.

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!**இன்று சொல்லி வணங்குவோம் .**யார் ஒருவர் தினமும் மேற்கண்ட* *ஸ்ரீநாராயணனின்...
06/06/2022

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!*
*இன்று சொல்லி வணங்குவோம் .*

*யார் ஒருவர் தினமும் மேற்கண்ட* *ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்* *மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக* *இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்.*

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன 24 இறைத்திருநாமங்கள்!*

*1.ஓம் கேசவாய நமஹ!*
*2.ஓம் சங்கர்ஷனாய நமஹ!*
*3.ஓம் நாராயணாய நமஹ!*
*4.ஓம் வாசு தேவாய நமஹ!*
*5.ஓம் மாதவாய நமஹ!*
*6.ஓம் ப்ரத்யும்னாய நமஹ!*
*7.ஓம் கோவிந்தாய நமஹ!*
*8.ஓம் அனிருத்தாய நமஹ!*
*9.ஓம் விஷ்ணவே நமஹ!*
*10.ஓம் புருஷோத்தமாய நமஹ!*
*11.ஓம் மதுசூதனாய நமஹ!*
*12.ஓம் அதோஷஜாய நமஹ!*
*13.ஓம் த்ரிவிக்மாய நமஹ!*
*14.ஓம் லஷ்மி நரசிம்ஹாய நமஹ!*
*15.ஓம் வாமனாய நமஹ!*
*16.ஓம் அச்சுதாய நமஹ!*
*17.ஓம் ஸ்ரீதராய நமஹ!*
*18.ஓம் ஜனார்தனாய நமஹ!*
*19.ஓம் ஹ்ருஷீகேஷாய நமஹ!*
*20.ஓம் உபேந்த்ராய நமஹ!*
*21.ஓம் பத்மநாபாய நமஹ!*
*22.ஓம் ஹரயே நமஹ!*
*23.ஓம் தாமோதராய நமஹ!*
*24.ஓம் கிருஷ்ணாய நமஹ!*

*யார் ஒருவர் தினமும் மேற்கண்ட ஸ்ரீநாராயணனின் 24 திருநாமங்களை அனுதினமும் தவறாமல் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜ யோகமும், பிறவி முடிந்த பின்னும் மேலுலக இன்பத்தையெல்லாம் அனுபவித்து இறுதியில் எம்பெருமான் ஸ்ரீநாராயணனின் திருவடிகளை அடையலாம்*

Address

No. 129, College Road, Nanganallur
Chennai
600061

Alerts

Be the first to know and let us send you an email when Sree Balaji Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sree Balaji Travels:

Share

Category