Talbiyah Haj & Umrah Service

Talbiyah Haj & Umrah Service وَأَتِمُّوا۟ ٱلْحَجَّ وَٱلْعُمْرَةَ لِلَّهِ ۚ
Complete the Haj and Umrah for Allah.

21/01/2026

*Shawwal Umrah Group*
Departure : *24th March*
RETURN : *7th April*
Return from Madhina

More Details
Contact : 97100 92070
,98413 41093

இமாம் தாரமி (ரஹ்) அவர்கள் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ளார்கள்: பெருமானார் ﷺ அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த ...
17/01/2026

இமாம் தாரமி (ரஹ்) அவர்கள் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ளார்கள்:

பெருமானார் ﷺ அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பிறகு, மதினாவில் கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது.

மக்கள் உதவி கோரி அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் ஒரு யோசனை கூறினார்கள்:

"பெருமானார் ﷺ அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு மேல் பச்சை நிற குப்பாவின் மேற்கூரையில் ஒரு திறப்பை ஏற்படுத்துங்கள்; நாயகத்திற்கும் வானத்திற்குமிடையே எந்தத் தடையும் இருக்கக்கூடாது."

​மக்கள் அவ்வாறே செய்தவுடன், உடனடியாக மழை பெய்யத் தொடங்கியது. செடிகொடிகள் செழித்து வளர்ந்தன, கால்நடைகள் ஆரோக்கியமடைந்தன, ஒட்டுமொத்த நகரமே மகிழ்ச்சியில் திளைத்தது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், பிற்காலத்தில் உதுமானியர்கள் (Ottomans) மஸ்ஜிதுந் நபவியின் குப்பாவிற்கு (Dome) மேல் ஒரு குறிப்பிட்ட ஓட்டினை (Tile) அமைத்தனர்.

இன்றும் மஸ்ஜிதுந் நபவியின் பச்சை நிற குப்பாவிற்கு (Green Dome) நேர் மேலே ஒரு சிறிய ஜன்னல் போன்ற அமைப்பு இருப்பதை நாம் காணலாம். இது அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் காட்டிய அந்த முறையை நினைவுபடுத்துவதாகக் கருதப்படுகிறது.

​யஜீதின் படைகளால் மதீனா முற்றுகையிடப்பட்ட காலத்தில், பாங்கு (Adhan) சத்தமாகச் சொல்வதற்கும் மஸ்ஜிதில் தொழுகை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அப்போது ஸயீத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

*"நான் மஸ்ஜிதினுள் ஒளிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் துயிலும் இடத்திலிருந்து (ரவ்ளா ஷரீஃப்) பாங்கு சத்தம் கேட்பதை வைத்து நான் தொழுகை நேரத்தை அறிந்து கொள்வேன்.".*

- **** **** *** ****.

மவ்லவி, B.முஹம்மது சாதாத், மன்பயீ.
*இமாம், கே.பி.எம்.மஸ்ஜித்,அடையார்.*
நிறுவனர்: *தல்பியா ஹஜ் & உம்ரா சர்வீஸ்*

16/01/2026

"What is the simple method taught by the Sahabas (Companions of the Prophet) to complete the Quran once a week?"

Watch, share and follow this page for more information.

ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம்.​மறுமை நாளில், ஒவ்வொரு மனிதனும் ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாலத்தைக் கடந்த...
15/01/2026

ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம்.

​மறுமை நாளில், ஒவ்வொரு மனிதனும் ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

அந்த பாலம், ஒரு முடியை விட மெல்லியதாகவும், வாளை விடக் கூர்மையாகவும் இருக்கும். அதற்கு அடியில் நரக நெருப்பு கொழுந்துவிட்டு எரியும், மறுபுறத்தில் சொர்க்கம் அமைந்திருக்கும்.
​அந்நாளில் சூரியன் தலைக்கு மிக அருகிலிருக்கும்,

அனைவரும்
தங்கள் வியர்வையிலேயே மூழ்கிக் கொண்டிருப்பார்கள். மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அச்சத்தில் உறைந்திருக்கும்; பெரும் பாவிகள் அந்தப் பாலத்தில் தடுமாறி நரக நெருப்பிற்குள் விழுவார்கள். ஒரு தாய் தன் குழந்தைக்குக் கூட உதவ முன்வராத அந்த இக்கட்டான நாளில், நம் பெருமானார் ﷺ என்ன செய்வார்கள் தெரியுமா?,

​அந்தப் பாலத்தின் அருகே நின்று நாம் அதைக் கடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களது புனிதமான உள்ளத்தில் நம்மைப் பற்றிய கவலை பொங்க, அவர்களது உதடுகள்,

"யா அல்லாஹ், என் உம்மத்தினருக்குப் பாதுகாப்பை அளிப்பாயாக!" என்று மட்டுமே வேண்டிக்கொண்டிருக்கும்.

​இவ்வளவு கருணை மிக்க உங்களை நாங்கள் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும், யா ரசூலுல்லாஹ்!.

- **** **** *** ****.

மவ்லவி, B.முஹம்மது சாதாத், மன்பயீ.
இமாம், கே.பி.எம்.மஸ்ஜித்,அடையார்.
நிறுவனர்: *தல்பியா ஹஜ் & உம்ரா சர்வீஸ்*

14/01/2026

What are the skill development taught by our prophet Muhammad PBUH?.

*ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?.* திருமணத்தைப் பொறுத்தவரை அனைத்தும் விட்டுக்கொடுத்தல் (Compromise) பற்றியதே ஆகும். உங்கள...
14/01/2026

*ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?.*

திருமணத்தைப் பொறுத்தவரை அனைத்தும் விட்டுக்கொடுத்தல் (Compromise) பற்றியதே ஆகும். உங்களில் ஒருவர் மற்றவரை விட அழகானவராகவோ, அறிவாளியாகவோ, அதிக மார்க்கப்பற்றுள்ளவராகவோ, கல்வி கற்றவராகவோ அல்லது அதிக நற்பண்புகள் கொண்டவராகவோ இருக்கலாம். இதுதான் வாழ்க்கை.

​பூரணத்துவத்தை (Perfection) எதிர்பார்த்து, உங்கள் உறவை நீங்களே பாழாக்கிக் கொள்ளாதீர்கள். ஒரே குடும்பத்தில் வளர்ந்த உங்கள் உடன்பிறப்புகளே உங்களைப் போல் இருப்பதில்லை எனும் போது, வேறொரு குடும்பத்தில் வளர்ந்த ஒருவர் எப்படி அப்படியே உங்களைப் போலவே இருக்க முடியும்?.

​நம் பெருமானார் நபிகள் நாயகம் ﷺ அவர்களைப் பாருங்கள் - அவர்கள் எப்போதும் மிக அழகிய முறையில் விட்டுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள்.

அவர்களே உலகிலேயே மிக அழகானவர்,
மிகச்சிறந்த அறிவாளி, அதிக இறையச்சம் கொண்டவர்
மற்றும் கண்ணியமானவர். உலகில் யாரையுமே அவர்களோடு ஒப்பிட முடியாது.
​அப்படி இருந்தும், அவர்கள் ஒருபோதும் கோபப்பட்டதோ, யாரையும் தாழ்வாக நினைத்ததோ அல்லது வெறுத்ததோ இல்லை.

மாறாக, அவர்கள் மிகுந்த பொறுமையுடனும், கருணையுடனும் இருந்தார்கள்.

அவர்கள், தங்களிடமிருந்த சிறப்புகளைக் கொண்டு மற்றவர்களின் அந்தஸ்தை உயர்த்தவும், அவர்களுக்கு உதவவும், அவர்களைச் சிறப்பானவர்களாக உணர வைக்கவுமே பயன்படுத்தினார்கள்.

​அவர்கள் தம் மனைவியரை எவ்வளவு உயர்வான நிலைக்கு உயர்த்தினார்கள் என்றால்,
அல்லாஹ்வே குர்ஆனில்,

"நபியின் மனைவிகளே! நீங்கள் மற்றப் பெண்களைப் போன்றவர்கள் அல்ல!"

என்று கூறும் அளவுக்கு அவர்களை மாற்றினார்கள்.
**** **** *** ****.

மவ்லவி, B.முஹம்மது சாதாத், மன்பயீ.
இமாம், கே.பி.எம்.மஸ்ஜித்,அடையார்.
நிறுவனர்: *தல்பியா ஹஜ் & உம்ரா சர்வீஸ்*

மதீனா முனவ்வராவில் அமைந்துள்ள உமர் பின் கத்தாப் (ரலி) பள்ளிவாசல்.***************** ******* ******மஸ்ஜிதே உமர்*நபி (ஸல்) ...
14/01/2026

மதீனா முனவ்வராவில் அமைந்துள்ள உமர் பின் கத்தாப் (ரலி) பள்ளிவாசல்.
***************** ******* *****

*மஸ்ஜிதே உமர்*

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகை தொழுத இடங்களுள் ஒன்றில் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.

அதன் பிறகு உமர் (ரலி) அவர்களும் அங்கே தொழுததால், இப்பள்ளிவாசல் அவர்கள் பெயரால் அழைக்கப்படத் தொடங்கிற்று.

இப்பள்ளிவாசல் ஹிஜிரி 850-ல் (கி.பி. 1446) ஷம்சுத்தீன் முஹம்மது பின் அஹ்மத் அல்-ஸலாவீ என்பவரால் கட்டப்பட்டது.

​இது, மதீனாவின் புகழ்பெற்ற மஸ்ஜித் அல்-கமாமா (மேகப் பள்ளிவாசல்) மற்றும் மஸ்ஜித் அபூபக்கர் சித்தீக் (ரலி) ஆகியவற்றிற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது.

-மவ்லவி, B.முஹம்மது சாதாத், மன்பயீ.
இமாம், கே.பி.எம்.மஸ்ஜித்,அடையார்.
நிறுவனர்: *தல்பியா ஹஜ் & உம்ரா சர்வீஸ்*

*நாயகம் (ஸல்) ஓர் காவியம்*அல்லாஹ்வின் தூதரே! *தாயிஃப் நகரில் உங்கள் பரக்கத் பொருந்திய (ஆசீர்வதிக்கப்பட்ட) திருமேனி இரத்த...
14/01/2026

*நாயகம் (ஸல்) ஓர் காவியம்*

அல்லாஹ்வின் தூதரே!

*தாயிஃப் நகரில் உங்கள் பரக்கத் பொருந்திய (ஆசீர்வதிக்கப்பட்ட) திருமேனி இரத்தத்தால் நனைகின்ற அளவிற்கு கல்லெறியப்பட்ட அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

அவர்களை சபிப்பதற்குப் பதிலாக, அவர்களின் சந்ததியினர் இஸ்லாத்தின் பால் நேர்வழி பெற வேண்டும் என்று நீங்கள் பிரார்த்தனை செய்தீர்கள்.

அல்லாஹ்வின் தூதரே!

*உஹுத் போரில் நீங்கள் காயமுற்ற நாட்களை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

உங்கள் திருமுகத்திலிருந்து வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே,

"யா அல்லாஹ், என் மக்களுக்கு நேர்வழி காட்டு, ஏனெனில் அவர்கள், அறியாதவர்களாக இருக்கின்றனர்..."
என ஆறுதலாய் பிரார்த்தனை செய்தீர்கள்.

அல்லாஹ்வின் தூதரே!

*இஸ்லாத்தின் பெரும் எதிரியான அபூ ஜஹ்லின் மகன், உங்களுக்கு எதிராக இரண்டு தசாப்தங்களாக போர் புரிந்த பிறகு, உங்களிடம் வந்த அந்த நாட்களை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

அவருக்கு முன்னால் அவரது தந்தையைப் பற்றி யாரும் தவறாகப் பேச நீங்கள் அனுமதிக்கவில்லை; அவரை ஏற்றுக்கொண்டு மன்னித்தீர்கள்.

​அல்லாஹ்வின் தூதரே!

*ஹிஜ்ரத்தின் போது ஒரு இஸ்லாத்தை ஏற்காத நபர், துரத்தியதால், ஒட்டகத்திலிருந்து விழுந்து உங்கள் அன்பு மகள் செய்யிதா ஜைனப் (ரலி) அவர்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்ட அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

பல வருடங்களுக்குப் பிறகு, அதே மனிதன் உங்களிடம் தவ்பா செய்து (மன்னிப்பு கோரி) வந்தபோது, நீங்கள் அவரை மன்னிக்கத் தேர்ந்தெடுத்தீர்கள்.

அல்லாஹ்வின் தூதரே! *உங்கள் பாசமகள் செய்யிதா ருக்கையா (ரலி) அவர்களை, உங்கள் மீது கொண்ட பகையினால் அபூ லஹபின் மகன் விவாகரத்து செய்ததை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

வருடங்கள், உருண்டோடின, அவன், பணிவுடன் உங்களிடம் வந்தான். அவன், உங்கள் குடும்பத்திற்கு இழைத்த துன்பங்களை நீங்கள் ஒருபோதும் நினைவுபடுத்தவில்லை - மாறாக, அவனை ஏற்றுக்கொண்டு மன்னித்தீர்கள்.

​அல்லாஹ்வின் தூதரே!

*நீங்கள் கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருந்தபோது, ஃபதாலா என்பவர் உங்களைக் கொலை செய்யும் நோக்கத்தில் ஒரு கத்தியுடன் பின்தொடர்ந்த அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

அவர் உங்களுக்குத் தீங்கு செய்ய நினைத்தார், ஆனால் அதற்குப் பதிலாக, உங்கள் பரக்கத் பொருந்திய (ஆசீர்வதிக்கப்பட்ட) கரத்தை அவரது இதயத்தின் மீது வைத்து, நுபுவ்வத்தின் (நபித்துவத்தின்) பார்வையாலும் கருணையாலும் அவரைத் தொட்டீர்கள். - அல்லாஹ் அவருக்கு நேர்வழியை வழங்கினான்.

அல்லாஹ்வின் தூதரே!

*உங்களுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் நீங்கள் மக்காவிற்குத் திரும்பிய அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

ஒரு ஒட்டகத்தின் மீது தலை குனிந்தவாறு அந்த நகரத்திற்குள் நுழைந்து, "இது கருணையின் நாள், இரத்தம் சிந்தும் நாள் அல்ல" என்று கூறினீர்கள்.

அல்லாஹ்வின் தூதரே!

*உங்கள் பெரிய தந்தை செய்யிதுனா ஹம்ஸா (ரலி) அவர்களைப் போர்க்களத்தில் இழந்து, உங்கள் திருமுகத்தில் கண்ணீர் வழிந்த அந்த நாளை நான் எண்ணிப் பார்க்கிறேன்.*

ஒரு நாள், அவரைக் கொலை செய்த (ஷஹீதாக்கிய) அதே மனிதன், உங்களிடம் மன்னிப்பு வேண்டியும் இஸ்லாத்தை நாடியும் வந்தான். அவர், உங்களுக்கு ஏற்படுத்திய ஆறாத வடுவுக்காக நீங்கள் பழிவாங்கியிருக்க முடியும், ஆனால் நீங்கள் அவரைப் பொருட்படுத்தாமல் மன்னிக்க முன் வந்தீர்கள்.

​அல்லாஹ்வின் தூதரே!

*மக்களின் குற்றங்கள் பெரியதாக இருந்தன, ஆனால் உங்கள் கருணை ﷺ அதைவிடப் பெரியதாக இருந்தது.*

நீங்கள்,
எவ்வளவு மகத்தானவர்!
எவ்வளவு தூய்மையானவர்! எவ்வளவு பரிபூரணமானவர்!

-மவ்லவி,B.முஹம்மது சாதாத்,மன்பயீ.
இமாம், குராசானி பீர் மஸ்ஜித், அடையார்.

மதீனாவில் உள்ள மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த இந்த மாமனிதர் மீது அல்லாஹ் கருணை பொழிவானாக.இவரது பெயர் முஹம...
13/01/2026

மதீனாவில் உள்ள மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த இந்த மாமனிதர் மீது அல்லாஹ் கருணை பொழிவானாக.

இவரது பெயர் முஹம்மது இஸ்மாயில்.

பல தசாப்தங்களாக அவர் ஒரே இடத்தில் அமர்ந்து, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களை நேசிப்பவர்களுக்கு தேநீரும் சிற்றுண்டிகளும் வழங்கினார் -

அல்லாஹ் அவருடைய பெயரையும் அன்பையும் உலகம் முழுவதற்கும், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவச் செய்தான்.

​"மக்களுக்கு சேவை செய்பவர்களே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்; அத்தகையவர்கள் அவரது ஆசீர்வதிக்கப்பட்ட காலத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர்.

இறுதித் தீர்ப்பு நாளில் ஹாஜி 'இஸ்மாயில்" அவர்களை அண்ணல் நபி ﷺ அவர்களுக்கு மிக நெருக்கமானவராக அல்லாஹ் ஆக்குவானாக.

மேலும் செய்யிதினா முஹம்மது ﷺ அவர்களின் திருக்கரங்களால் அல்-கவ்ஸர் தடாகத்திலிருந்து முதன்முதலில் நீர் அருந்துபவர்களில் ஒருவராக அவரை ஆக்குவானாக.

அவர் எந்தெந்த யாத்ரீகர்களுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளித்தாரோ, அதற்கெல்லாம் பகரமாக சொர்க்கத்தில் (ஜன்னத்தில்) எண்ணற்ற பால் மற்றும் தேன் ஆறுகளை வழங்கி அல்லாஹ், அவரை கௌரவிப்பானாக!.

- மவ்லவி, B.முஹம்மது சாதாத்,மன்பயீ.
இமாம், குராசானி பீர் மஸ்ஜித், அடையார்.

இஸ்லாமிய அண்டை வீட்டாரின் அன்பால் ஈர்க்கப்பட்டு, 92 வயது பெல்ஜியப் பெண்மணி இஸ்லாத்தைத் தழுவினார்.***************** *****...
13/01/2026

இஸ்லாமிய அண்டை வீட்டாரின் அன்பால் ஈர்க்கப்பட்டு, 92 வயது பெல்ஜியப் பெண்மணி இஸ்லாத்தைத் தழுவினார்.

***************** ******** ***********

​பெல்ஜியத்தின் பெர்ச்சம் (Berchem) பகுதியைச் சேர்ந்த 92 வயதான ஜார்ஜெட் லெபால் (Georgette Lepaulle) என்ற மூதாட்டி, தனது அண்டை வீட்டார் முகமது மத்தாவின் (Muhammad Maddah) நற்பண்பு, அன்பு மற்றும் குடும்ப விழுமியங்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

அவர் ஒரு பள்ளிவாசலில் கலிமாச் (Shahada) சொல்லி இஸ்லாத்தை ஏற்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இஸ்லாத்தைத் தழுவிய பின் அவருக்கு 'நூர் அல்-இஸ்லாம்' என்று பெயரிடப்பட்டது.

​இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக இருந்தாலும், தற்போது மீண்டும் இணையத்தில் பரவலாகி வருகிறது.

"முகமது மத்தா" பல ஆண்டுகளாக தனது முதிய அண்டை வீட்டாருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரைப் பராமரித்து, தனது முன்மாதிரியான நடத்தையால் அவர் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இஸ்லாமியக் குடும்பத்தில் தான் கண்ட அன்பு, பொறுமை மற்றும் அறநெறிகள் தன்னை ஆழமாகப் பாதித்ததாக அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.

​உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், இந்த நிகழ்வைக் கொண்டாடி வருவதுடன், இது இஸ்லாத்தின் அழகிற்கு ஒரு சான்று என்றும் கூறி வருகின்றனர்.

இஸ்லாம் என்பது வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களின் மூலமே பரவுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நற்பண்புகள் எவ்வளவு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த இதயத்தைத் தொடும் கதை நமக்கு நினைவூட்டுகிறது.

- மவ்லவி, B.முஹம்மது சாதாத்,மன்பயீ.
இமாம்,குராசானி பீர் மஸ்ஜித், அடையார்.

Labbaik allahumma Labbaik
13/01/2026

Labbaik allahumma Labbaik

Address

No, 7, 13/1 Qaide Millath Street
Chennai
600029

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talbiyah Haj & Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category