29/03/2025
#மதுக்கூர் ரமலான் #மோகூர்
இப்படியும் சில மனிதர்கள் ..!!!
பெரும் நேசத்திற்கும் பாராட்டிற்கும் உரிய எமது மாற்று மத சகோதரரின் நெகிழ்ச்சி மிகு ஈகை குணம்
இந்த சகோதரரின்,ஈகை குணத்தையும்,இஸ்லாமியர்கள் மீது உண்டான பற்றினையும் பாருங்கள் ..
போட்டோவில் காணும் இந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மோகூர் என்ற கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி திரு.திருப்பதி அண்ணன்,இவர் அண்டை ஊரான மதுக்கூரில் எங்களது இல்லத்தில் பல ஆண்டுகளாக பால் வணிகம் செய்து வருகிறார்....இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ரமலான் மாதத்தில் எங்களிடம் பாலும், சர்பத்திற்கான பொருட்கள் வாங்க பணமும் கொடுத்து, அருகாமையில் உள்ள பள்ளிக்கு நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக இவற்றினை நல்ல முறையில் செய்து கொடுங்கள் என்ற அன்பு கட்டளையோடு செல்வார்.. ஈகை குணமும்,இஸ்லாமியர்கள் மீது உண்டான பற்றும் மேலோங்கிய வன்னம் உள்ள எமது சகோதரர் ஆரம்பத்தில் 3 லில்டரில் தொடங்கி,படி படியாக இந்த வருடம் 21 லிட்டர் பாலும் ,பொருட்களுக்காக ₹500 கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிட தக்கது.,
இவரை போன்ற சகோதரர்கள் தான், ஈகை குணத்திற்க்கும் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும்
ஒரு எடுத்து காட்டாகாவும்., இது போன்ற நிகழ்வுகள் பிறருக்கு கொடுத்தால் குறைந்து விடுமோ என்ற எண்ணம் கொண்ட எமது சமுதாய மக்களுக்குமே ஒரு படிப்பினையாகவும் இருக்கின்றது ....
இந்த சகோதரருக்கும்,அவரது குடும்பதார்களுக்கும் வல்ல இறைவன் நேர் வழியையும், நோய் நோடியில்லா நீண்ட ஆயுளோடும்,ஆரோக்யத்தோடும் ஈருலகிலும் சிறப்புடன் வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக..ஆமீன்🤲
(துவா செய்வோம் ..
-----------✨✨✨--------------
J.J. ஹோம் குடும்பத்தார்கள்
இடையக்காடு
மதுக்கூர்