Coimbatour

Coimbatour “Coimbatour“ was founded in 2014 with the concept of organized day tours to educate the culture and Heritage of the place with fun.

Tour Time“ was founded in 2014 with the concept of organized day tours to educate the culture and Heritage of the place with fun. Head quartering in Coimbatore, TamilNadu, INDIA, Tour time strives to become the leading day tour operators in INDIA. Our Unique Selling Proposition of Flexible pricing attracts many customers. According to the information, we are the only one in Coimbatore offering the

varieties of tour packages which covers more than 200 exciting locations. We focus more on Safety and Comfort which allows people to experience the trips on their own fashion.

சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி...உலகம் முழுவதையும் சோழ சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்ற உணர்வுகொண்டவர் ர...
01/12/2015

சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி...

உலகம் முழுவதையும் சோழ சாம்ராஜ்யமாக்க வேண்டும் என்ற உணர்வுகொண்டவர் ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன். ‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பர கேசரி வர்மன்’ என்று அவரைப் புகழ்கின்றன சோழர் கால கல்வெட்டுகள்.

கர்நாடகத்தின் குடமலை நாடு தொடங்கி வங்காளம் வரை வெற்றிகளைக் குவித்தார் ராஜேந்திரன். கடல் கடந்தும் படை நடத்தினார். இலங்கையையும் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியாவையும் வென்றார். அவர் போர் நடத்திச் சென்ற இடங்களின் தடங்களைக் காண்பதும் அவரால் எழுப்பப்பட்ட அடையாளச் சின்னங்களை ஆவணப்படுத்துவதற்காக ஒரு பயணத் திட்டம் உருவாகி உள்ளது.

‘ராஜேந்திர சோழன் கங்கை படையெழுச்சியின் தடம் காணும் பயணம்’ என்ற பெயரில் இந்தப் பயணத்தை - கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் ஆரம்பித்துள்ளது எனும் 14-10-15-ல் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்திலிருந்து இது தொடங்கியது. தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகன், சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் உதவிப்பேராசிரியர் ஜெ.சவுந்தரராஜன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்கள் எஸ். கண்ணன், ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் ஜி. சசிதரன், வரலாற்று ஆர்வலர் எம். ரமேஷ், ராஜேந்திர சோழன் ஆவணப்பட இயக்குநர் குணவதி மைந்தன் இவர்களோடு நானும் பங்கேற்றேன்.

சோழ கங்கத்தின் சிறப்பு

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கியமான வரலாற்றுச் சின்னங்களை காட்டினார் வெங்கடேசன். அதில் ஒன்று, சூரியப் பிரபை. ஒரே கல்லால் ஆன ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் சிற்பம். இது வங்கப் போரின்போது அங்கிருந்து ராஜேந்திரனால் கொண்டுவரப்பட்டது. இன்னொன்று, எட்டுக் கைகளைக் கொண்ட கலிங்க துர்க்கை. இது கலிங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. “இது போல எட்டு சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எஞ்சி இருப்பது இது மட்டும்தான்” என விளக்கினார் கோமகன்.

கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திரன் நிறுவிய சோழ கங்கம் (பொன்னேரி) ஏரியை நோக்கிப் புறப்பட்டது பயணக் குழு. அதன் சிறப்பை விளக்கினார் வெங்கடேசன். “மன்னர்கள் வெற்றிபெற்ற இடங்களில்தான் வெற்றிச் சின்னங்களை நிறுவுவது வழக்கம். ஆனால், ராஜேந்திர சோழன், இங்கே வந்து இந்த ஜல ஸ்தூபியை நிறுவியிருக்கிறார். திருவாலங்காட்டுச் செப்பேடு “பகீரதன் தனது சகோதரர்களுக்கும் தந்தைக்கும் மோட்சம் கொடுப்பதற்காகப் புனித கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான். அதை ராஜேந்திரன் தனது பராக்கிரமத்தால் இங்கு கொண்டுவந்தான் என்கிறது” என்றார்.

கூடுதுறையில் சோழர் கோயில்

கர்நாடகத்தை நோக்கிப் பயணம் தொடர்கிறது. வழியில் எதிர்கொள்கிறது பவானியின் கூடுதுறை. குடகில் பிறந்ததும், ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பட்டினப்பாலை சிலாகிப்பதுமான காவிரியும் மேற்கு தொடர்ச்சி மலையில் ஜனிக்கும் பவானியும் கூடுகிற இடம் இது. இங்கேயும் சோழர்கள் காலத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அது சங்கமேஸ்வரர் கோயில். இப்போது இந்தக் கோயில் எடுத்துக் கட்டப்பட்டுவிட்டபோதும் சோழர்கள் கட்டிய பழைய கோயில் காவிரிக் கரையில் இருக்கிறது. சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கோயிலில் காயத்திரி லிங்கேஸ்வரர் வடக்கே பவானி - காவிரி சங்கமத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

பண்ணாரி நோக்கிப் பயணம் தொடர்கிறது. திம்மம் மலை உச்சியை அடைகிறோம். “நாம் கடல் மட்டத்திலிருந்து 2,656 அடி உயரத்தில் இருக்கிறோம்’’ என்றார் சிவராமகிருஷ்ணன்.

வீரக்கற்கள்

மலை உச்சியிலிருந்து இறங்கும் சாலையில் சற்று தூரம் போனால், தாளவாடி வந்து விடுகிறது. “இந்தப் பகுதிக்கு ஏற்கெனவே ஆய்வுக்கு வந்திருக்கிறேன். இந்தப் பகுதியில் போரில் இறந்த வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகற்கள் இருக்கு” என்று ஆர்வமூட்டுகிறார் வெங்கடேசன். வழியில், எப்போதாவது தண்ணீர் ஓடும் சொர்ணமுகி ஆறு குறுக்கிடுகிறது. அதைக் கடந்தால் தொட்டுவிடும் தூரத்தில் தொட்டகஜனூர்.

சற்றுத் தூரத்திலேயே சாலையின் வலது ஓரத்தில் இரண்டு நடுகற்கள். ஒட்டுமொத்தக் குழுவும் அதைச் சூழ்ந்துகொண்டு ஆர்வத்தோடு ஆராய்கிறது. “போரில் இறந்த வீரர்களுக்கு வைக்கப்படும் வீரக் கல்தான் இது” என்கிறார் வெங்கடேசன். “சோழர் காலத்துக் கல்லாக இருக்க முடியாது. சோழர்கள் வீரக் கற்களில் சிவலிங்க வடிவத்தைச் செதுக்கியதாகத் தரவுகள் இல்லை. இது 13-ம் நூற்றாண்டுக்குப் பின்பு ஹொய்சாளர்களோ விஜயநகரப் பேரரசர்களோ வைத்திருக்கலாம். போர் வீரனுக்குத்தான் என்பதில்லை. அந்தக் காலத்தில், வட்டாரத் தலைவர்கள் இறந்தால்கூட கற்கள் நடப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் கண்ணன். தாளவாடி நோக்கித் திரும்புகிறது பயணம்.

For tour packages,
Contact : 80564 23456, 80566 23456
www.coimbatoretourism.com

- பயணம் தொடரும்

Vaishnava saint sculptures discoveredFor tour packages,Contact : 80564 23456, 80566 23456www.coimbatoretourism.comA team...
10/10/2015

Vaishnava saint sculptures discovered

For tour packages,
Contact : 80564 23456, 80566 23456
www.coimbatoretourism.com

A team of archaeologists has discovered two Vaishnava saint sculptures (also called Vamana Avathar sculptures), both around 500 years old with identical carvings on the stones, at Pongalur (the one in Avinashi taluk) and Nariyampallipudur situated seven km. apart in the district.

“During those era, Vaishanava mutts or monastic establishments used to give away land to the people in Kongu region as ‘grants’ for farming activities and collect tax from the agricultural revenue.

The amounts thus collected are used for renovation of temples, lightning of lamps during temple festivals in the region.

When giving away lands, these monastic establishments used to place sculptures of gods/saints to denote that the expanse was given as ‘grant’ and also for the people to worship the same for soil fertility,” S. Ravikumar, one of the members of Virarajendran Archaeological and Historical Research Centre which discovered the sculptures, told The Hindu .

In both the sculptures, Vamana holds holy pot with water on right hand (kamandalam) and the left hand has the umbrella. Both the sculptures have the emblems of sun and moon.

“History books point out that the sun and moon are symbolically carved out in that era to tell the villagers that the land given as grants should be used only for the purpose meant till sun and moon exists,” pointed out C. M. Ramesh Kumar, another member of the team.

When spoke to some villagers in both the places, they were not aware of the historical importance of the stones.

“We thought that it as a stone kept to mark the boundary,” said M. Kanagraj, a farmer from Nariyampallipudur on whose farm border lays one of the sculptures.

10/10/2015

Museum traces history of Indian Railways

Old ticket punching machines, centuries-old cranes, Swiss X-Class locomotive, which once hauled the Nilgiris Mountain Railway, are some of the exhibits at the rail museum set up at the backyard of Mettupalayam Railway Station. The museum with over 100 exhibits was inaugurated on Wednesday by General Manager of Southern Railway Vashista Johri in the presence of Divisional Railway Manager – Salem Subhranshu, MPs A.K. Selvaraj, C. Gopalakrishnan and MLA O.K. Chinnaraj.

This is the first rail museum for the Salem Railway Division.

A five-tonne manually operated crane manufactured at Bradford greets visitors outside the main hall. It was used for shifting materials from meter gauge to broad gauge and also to move Defence materials that used to reach Mettupalayam by train for further transportation to Wellington.

A Swiss X-Class locomotive brought from Swiss Locomotives and Machine Works, Winterthur, Switzerland finds a place next to the crane. A vintage ticket machine that is used for punching the ticket and assigning a serial number can be found inside the hall.

Other interesting exhibits include old weighing machines, paraffin gas lamps and Berkefeld Filter, samples of narrow gauge, meter gauge and broad gauge railway lines with fish plates.

One should not miss the miniatures of Linke Hofmann Busch coaches, coaches of Duranto, Jan Shatabdi and Rajdhani trains, Metro trains and Electrical Multiple Units, that are on display Various emblems of Indian Railways and Divisions, the UNESCO citation when NMR was acknowledged as a World Heritage Site are also part of the exhibits.

Mr. Johri said that it was just a beginning and the museum would further be improved.

A surviving symbol of heritageFor tour packages,Contact : 80564 23456, 80566 23456www.coimbatoretourism.comDuration — 5 ...
23/09/2015

A surviving symbol of heritage

For tour packages,
Contact : 80564 23456, 80566 23456
www.coimbatoretourism.com

Duration — 5 hours. Distance — 46 km. Price of ticket — Negligible. What to do — Travel up and down a scenic route. What you get — A package of guaranteed romance, adventure, relaxation, nature and definite adrenalin-surge.

Come aboard the Nilgiri Mountain Railways’ (NMR) nostalgia-dipped toy train where the youngest X class locomotive is more than 50 years and the oldest more than 80. You can’t disembark without a clutch of memories, none of them unpleasant, even if there’s a break-down. If that happens it’s unpaid-for — extra time to enjoy the forests and mountains, misty valleys and the cool, cool weather. As it inches up its route between 1,069 and 7,228 ft., you might get off to pick flowers for your love, look up to find an elephant staring at you from two ledges above, point your camera to catch a pretty hoopoe posing on a tree, wonder about disappearing-deep gorges, or just scream your head off every time you pass through a tunnel. Its charm is fabled — the train has been whistling and chugging since 1899 — first from Mettupalayam to Coonoor, and since 1908, to Fernhill and Ooty — it’s a journey through 16 tunnels and across 250 bridges.

According to archaeologist Suresh, who is also the convener of the INTACH Tamil Nadu Chapter and Ramana Kumar, VP, Photographic Society of India, NMR has a unique history. Adds Suresh, “In the 1980s, I did extensive listing of historical monuments in Thanjavur, Sriperumbudur, Pudukkottai, Kumbakonam. I was asked to cover Ooty in 92-93. I focussed on the Coonoor-Ooty belt. Now I’m digitising the 70 per cent I had covered in that stint and will retain it. Sadly, most of them have been re-constructed. The new listing is on the 30 per cent that was left out.” They were happy to find that the Breeks Memorial School had preserved its heritage features.

Although the NMR has survived, many stops on the way are now ghost stations. Some structures are overgrown with flora and are crumbling fast. You can’t reach them for fear of wild animals. The train, thankfully, has stayed the way Swiss inventor Riggenbach had fashioned it. It is still painted in the original blue and yellow and still sports bench-seats without cushioning. And mercifully, the coaches remain open — no glass windows or curtains.

“Till 1820 no one knew of Ooty, it had fluctuating boundaries of forest land,” says Suresh. That year (so people say), cops chasing a couple of thieves followed them into the woods on the other side of Kallar. They returned with the bandits and information that the place where they had caught the thieves was cool and breathtakingly beautiful. The brigands might have lost a career, but gave the world a hill station and an ageless beauty. The district collector John Sullivan at once decided to migrate to the ‘paradise’ and in the 1820s, was the first European to do so. He founded Ooty, built two stone-houses — one, called Kal Bangla which became the official residence of the Principal of the Government Arts College, and is being renovated.

Of course, reaching Sullivan’s new home wasn’t easy. Travellers needed to ride on horseback or to be carried on ‘dolies’ up a forest path to Othaikkal Mandu or one-stone-temple (it is still around). The name was then anglicised to become Ootacamund and Tamilised to Udhagamandalam and shortened to Ooty. A railway line was the answer. It was first discussed in 1854, but took 40 years to get started. In 1873, the train to Coimbatore was extended to Mettupalayam and one took the ghat road before the tracks were laid. Today, NMR is the lifeline of the Nilgiris economy. The hill towns live on tourism and the train is a major draw. In 2005, the NMR system of rakes-tracks-stations-signals-tunnels became world heritage. Suresh goes on rail-trails that include trekking along the tracks, tunnel-exploring and checking out railway structures like signal-systems and milestones.

The train passes through plains for the first five miles. In the next 12, it climbs dramatically up to 4,363 ft. through nine tunnels, treating you to magnificent views of the eastern slopes of Nilgiris. Then you move to the left for non-stop photo-ops. It’s a picture of tranquility as the train passes through Coonoor, Wellington, Lovedale and halts near the Ooty Lake.
Close to the Mettupalayam station you’ll see the longest rail bridge here, across the Bhavani River. Watch out for the Coonoor station — it is stone-built and was the terminal for nine years. The Fernhill station has been closed and is now a ‘rest’ guesthouse. You have to be a senior railway official or someone with special permission to spend a night there, but with all that you’ll still be sleeping on a railway platform! With the tracks so close, the guesthouse windows have to remain shut. Or else, the train will have to stop for them to close before proceeding.

The tunnels are unique — rock-cut or masonry — and offer spectacular views. The toy train was featured as Marabar Express in David Lean’s movie version of E.M. Forster’s A Passage to India . At least three chief ministers of South India have been picturised dancing around the train in movies. If you can pull it off, get in touch with the wonderful Ooty station master Pramod. He might even demonstrate the intricacies of the old signalling system. As there is no catering on the train, carry boxed lunches for train food. And don’t miss the tree planted by Sullivan in the Government Arts College compound. “I offered to join Suresh on this documentation project even before he asked me,” says Ramana. “I walked around with three cameras, with cops trailing me. They wanted to know why I was shooting odd spots. A curious Father asked me if I was cataloguing churches. At the Fernhill Guesthouse, we were repeatedly warned: “Not safe, not safe!” The 4-km track/tunnel-walk through tunnel no. 16 was fabulous from a photographer's point of view, he says. Waiting for the train to emerge from the tunnel and catching the live-action was definitely the defining moment.

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.பளிங்குக் கல்...
16/09/2015

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் …

சங்க இலக்கியத்தின் சாட்சியமான கீழடி கிராமத்தை திறந்தவெளி அருங்காட்சியகமாக பராமரிக்க வலியுறுத்தல்For tour packages,Conta...
15/09/2015

சங்க இலக்கியத்தின் சாட்சியமான கீழடி கிராமத்தை திறந்தவெளி அருங்காட்சியகமாக பராமரிக்க வலியுறுத்தல்

For tour packages,
Contact : 80564 23456, 80566 23456
www.coimbatoretourism.com

சங்க இலக்கியத்தின் சான்றாவண மாகத் திகழும் சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தை வெளிநாடுகளைப்போல திறந்தவெளி அருங்காட்சியகமாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.

வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த கீழடி கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக இந்திய தொல் லியல் துறை சார்பில் மிகப்பெரிய அளவில் அகழாய்வு நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க கால மக்களின் தொல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத் துமே இங்கு கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும், சங்கத்தமிழ் ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக் கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத் துள்ளன. முத்துமணிகள், பெண் களின் கொண்டை ஊசிகள், பெண் கள் விளையாடிய சில்லு, தாயக் கட்டை, சதுரங்க காய்கள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடு மண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிக அளவில் கிடைத்திருக்கின்றன. அதேபோல இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப் படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடு களின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.

வீடுகள்தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன. இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு டன் அளவுக்கு கருப்பு, சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன. பல ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மதுரை பகுதியில் அதிக அளவில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் இருப் பது குறிப்பிடத்தக்கது. அதனை யொட்டியே இங்கு கிடைத்துள்ள மட்கலன்களிலும் தமிழ் பிராமி எழுத்துகள் காணப்படுவது மொழி ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சூதுபவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிகத் தொடர்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணர்த்துகிறது.

இவற்றையெல்லாம் தொகுத் துக் குறிப்பிடும் வரலாற்று ஆராய்ச் சியாளர்கள், கீழடி பகுதியை திறந்தவெளி அருங்காட்சியகமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்கின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியரும், தொல்லியல் ஆய்வு நிபுணருமான சிவராமகிருஷ்ணன் கூறியபோது, “எகிப்து, சீனா, ஜோர் டான் போன்ற நாடுகளில் மக்கள் வாழ்விடங்களில் நடத்தப்பட்ட அக ழாய்வுகள் மூலம் வெளிக் கொண ரப்பட்ட அத்தனை இடங்களையும் மூடிவிடாமல் திறந்தவெளி அருங் காட்சியகமாகப் பாதுகாத்து வரு கின்றனர்.

கீழடியில் கிடைத்துள்ள சான்று கள் சங்கத்தமிழ் இலக்கியங் களுக்கு சாட்சியமாகவும், வைகைக் கரை நாகரிகத்தை உலகுக்கு உரத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளன.

இங்கு கிடைத்துள்ள ஒவ் வொரு பொருளுமே ஒரு தொல்லியல் ஆவணம் எனலாம். மிகப் பெரிய அளவில் நமது பண்டைய நாகரிகத்தை எடுத்துச்சொல்லும் கீழடியை மூடாமல் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழரின் பழம்பெருமையை உலகறியச் செய்யலாம்” என்றார்.

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!For tour packages,Contact : 80564 23456, 80566 23456www.coimbatoretourism.comஎப்படி வந்தத...
10/09/2015

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு!


For tour packages,
Contact : 80564 23456, 80566 23456
www.coimbatoretourism.com

எப்படி வந்தது யானை முகம் ?

விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான்.

தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, பிள்ளையார் என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா? எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.

யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத்தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது. விநாயகருக்கு, சுமுகர் என்ற பெயருண்டு. ச என்றால் மேலான அல்லது ஆனந்தமான என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார். விநாயகர் சதுர்த்தி நன்னாளில், ஓம் கணேசாய நம என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.

பெண் உருவ பிள்ளையார்

பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலின் வலது பக்க தூணில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி என அழைக்கப்படுகிறார்.

பிள்ளையார் சுழி தேவதைகள்!

பிள்ளையார் சுழியில் உள்ள அகரத்திற்குப் பிரம்மன், உகரத்திற்குத் திருமால், மகரத்திற்கு ருத்திரன், பிந்துவிற்கு மகேசன், நாதத்திற்குச் சிவன் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, ஐந்து தெய்வ வணக்கமே பிள்ளையார் சுழி என்பர்.

விநாயகரும், சர்ப்பமும்!

விநாயகர் உதரவந்தம் பாம்பு. அணி பாம்பு, பூணூல் பாம்பு எனத் தம் உடலில் சர்ப்ப அணிகலன் கொண்டுள்ளார். பிள்ளையார்பட்டியில் லிங்கமும் பாம்பும், திருப்பரங்குன்றத்தில் கரும்பும், பவானியில் வீணையும், மானாமதுரையில் சங்கும், சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தில் நாகத்தையும் கையில் கொண்டுள்ளார். தேனியில் அமிர்த கலசம் ஏந்தி காட்சியளிக்கிறார்.

பிள்ளையார் பிரார்த்தனை பலன்கள்!

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர்.கல்லால் அமைந்த விநாயகரை வழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.

விநாயகர் - சில தகவல்கள்!

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.

இழந்த பதவிகளை மீண்டும் பெற...

சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்; சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

வியப்பூட்டும் விநாயகர்!

வித்தியாசமான விநாயகர்: கை - தொழில், கும்பம் ஏந்திய கை - ஆக்கும் தொழில், மோதகம் ஏந்திய கை - காக்கும் தொழில், அங்குசம் ஏந்திய கை - அழிக்கும் தொழில், பாசம் ஏந்திய கை -மறைத்தல் தொழில். விநாயகருக்கு விருப்பமான நிவேதனம்: மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, பாகு, அதிரசம் முதலியன. பன்னிரெண்டு விநாயகர்: வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர். விநாயகர் என்ற சொல்லுக்கு சிறந்த தலைவர் என்று பொருள். வி - சிறந்த, நாயகர் - தலைவர். விநாயகரை உருவாக்க: கருங்கல், சலவைக்கல், பளிங்குக்கல், சுத்தி, வெள்ளை எருக்குவேர், பஞ்சலோகம், வெள்ளி, செம்பு, பொன், தந்தம், மஞ்சள், சந்தனம், சர்க்கரை, பசுஞ்சாணம், முத்து, பவளம், மண், விருட்ச மரங்கள் முதலியன.

கணபதியின் 16 வடிவங்கள்

விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம். இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும்.

1. பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

2. தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

3. பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

8. உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

9. விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.

12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

13. மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

14. புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

16. ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

ஐங்கரன்- பெயர்க்காரணம்

இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

ஊத்துக்குளி நர்த்தன விநாயகர்

விநாயகரது, நர்த்தனக் கோலம் (நடனமாடுவது) மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இப்படி ஒரு அபூர்வ கோலத்தை திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இக்கோயிலிலுள்ள விநாயகர் தனது வாகனமான மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனால் நர்த்தன விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விநாயகர் சன்னதி முன் மூஞ்சூறு இருப்பது வழக்கம். ஆனால் ஊத்துக்குளி பெரியநாயகி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் மூஞ்சூறு மீது நடனமாடும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது விசேஷமாகும்.

பிள்ளை மனம் கொண்டவர் வெள்ளை குணம் உடையவர்

விநாயகருக்குப் பலவிதமான பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு.

கணபதி பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்
விக்னேஸ்வரன் தடை அனைத்தையும் போக்குபவர்
லம்போதரன் தொந்தி உடையவர்
ஐங்கரன் ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்
வக்ரதுண்டன் வளைந்த துதிக்கை பெற்றவர்
பிள்ளையார் குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்
ஒற்றைக்கொம்பன் ஒரு கொம்பு உடையவர்
ஹேரம்பர் திக்கற்றவர்களுக்கு உதவுபவர்
விநாயகர் மேலான தலைவர்
தந்திமுகன் தந்தத்தை பெற்றவர்

தந்தையைப் போல் பிள்ளை

தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.

1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4) தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5) இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6) தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7) இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8) பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.

எலி மீது யானை அமர்ந்தது எப்படி?

யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.

Coimbatore Tourism – One of the best tourist services provided in Coimbatore. We focus more on Safety and Comfort of tourist, which allows people to experience the trips on their own fashion.

Address

Tour Time, A-Block, 19-Kurinji Nagar, Civil Aerodrome (PO)
Palladam
641014

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share