Save Bahour Lake

Save Bahour Lake The second largest irrigation tank of Pondicherry, this is facing threats from unmindful tourism projects. Join hands to protect this beautiful tank!!

புதுவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள "பாகூர்", மாநிலத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் "அழகிய சதுர்வேதி மங்கலம்" என இவ்வூர் அழைக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் உள்ள ஏரிகளில் பாகூர் ஏரி 2வது பெரிய ஏரியாகும். 1762 ஹெக்டர் பரப்பளவும் 3.60 மீ உயரமும் கொண்ட இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர் அப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரி புதுச்சேரி அரசின் பராமர

ிப்பில் இருந்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள பாகூரின் மையப் பகுதியில் "ஸ்ரீ மூலநாத சுவாமி கோயில்" சோழ மன்னர்கள் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது.

பழங்கால நூல்களில் பாகூரின் பெயர் "வாகூர் நாடு" என அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது முந்தைய காலத்தில் மூலஸ்தானம் உடைய பெருமானடிகள், பரமேஸ்வரா என அழைக்கப்பட்டு பின்னர் மூலநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் பண்டைய கால கல்வெட்டுகளும் உள்ளன. குறிப்பாக 10-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த ராஷ்ட்ரகூட மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சோழ மன்னர்களை போரில் தோற்கடித்த ராஷ்ட்ரகூட மன்னர் கிருஷ்ணா காலத்தில் நடந்த நிகழ்வுகள் கோயில் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன.

சோழர் கல்வெட்டுகள் ஆதித்தய சோழன் காலத்தில் செதுக்கப்பட்டவை. பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலம் குறித்த பழமையான செப்பேடும் இக்கோயில் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

இதன் மூலம் பாகூர் சிறந்த கல்வித் தலமாக விளங்கியதை அறிய முடிகிறது. இக்கோயிலில் ஜூன் மாதம் நடைபெறும் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

தொல்லியல் துறை கட்டுப்பாடு.
பாகூர் மூலநாத சுவாமி கோயில் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டு, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயில் பூஜைகள், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் பிரதோஷம், சனிப்பெயர்ச்சிக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக இங்குள்ள பொங்கு சனிபகவான் சன்னதி பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோயில் தஞ்சாவூர் கோயிலுக்கு முன்பு கட்டப்பட்டது என்ற சிறப்புடையது.

கவனத்திற்கு: மழைக்காலம் தொடங்கும் முன் முடிக்கப்படுமா கொம்மந்தான்மேடு தடுப்புச் சுவர் பணி? பாகூர் அருகே உள்ள கொம்மந்தான்...
27/04/2026

கவனத்திற்கு: மழைக்காலம் தொடங்கும் முன் முடிக்கப்படுமா கொம்மந்தான்மேடு தடுப்புச் சுவர் பணி?

பாகூர் அருகே உள்ள கொம்மந்தான்மேடுடில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள படுகை அணைப் பகுதியில் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு பெருவெள்ளத்தால் சேதமடைந்த கரைகளை சீரமைத்து, பலப்படுத்த புதிய தடுப்புச் சுவர் கட்டும் பணி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், மாதங்கள் பல கடந்தும் பணிகள் இன்னும் முழுமையடையாமல் ஆமை வேகத்தில் நகர்கின்றன.

🌧️ மீண்டும் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இதே வேகத்தில் பணிகள் நடந்தால் விவசாய நிலங்களும், கரையோர குடியிருப்புகளும் மீண்டும் பெருவெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஒப்பந்தத்தின்படி பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

📢 புதுச்சேரி அரசும், பொதுப்பணித்துறையும் (PWD) உடனடியாகத் தலையிட்டு, வரவிருக்கும் பருவமழைக்கு முன்பாக இந்த வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் முழுமையாக முடித்து மக்களின்ச அச்சத்தைப் போக்க வேண்டும்!
தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் மக்களின் பாதுகாப்பிற்கும் விடப்படும் சவாலாகும். அரசு விரைந்து செயல்படுமா?

23/04/2026

புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் பாகூர் பகுதியில் அமைந்துள்ள பாகூர் ஏரி, தற்போது முறையான பராமரிப்பின்றி ஆகாயத் தாமரைச் செடிகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

🌾 சுமார் 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

💧 சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'பங்காரூ வாய்க்கால்' மூலம் இந்த ஏரிக்குத் தண்ணீர் வருகிறது.
📉 தற்போது செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

📉 நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, அரசுக்குக் கிடைத்து வந்த மீன் ஏல வருவாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத இந்த ஏரியை, கோடை காலத்தைப் பயன்படுத்தி உடனடியாகத் தூர்வாரி, ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டுமெனப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 🚜

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

#பாகூர்ஏரி #புதுச்சேரி #விவசாயம் #சுற்றுச்சூழல்

இந்திய விவசாயிகளை அடகு வைக்கும் அமெரிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்க.
02/03/2026

இந்திய விவசாயிகளை அடகு வைக்கும் அமெரிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்க.

புதுவை அறிவியல் இயக்கத்தின் 20-ஆவது மாநில மாநாடு அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சுயசார்புக்கே!! 🧬🌟புதுச்சேரியின் அறிவுத்த...
23/01/2026

புதுவை அறிவியல் இயக்கத்தின் 20-ஆவது மாநில மாநாடு

அறிவியல் மக்களுக்கே! அறிவியல் சுயசார்புக்கே!! 🧬🌟

புதுச்சேரியின் அறிவுத்தளத்தில் ஒரு முக்கிய நிகழ்வு! புதுவை அறிவியல் இயக்கத்தின் 20-ஆவது மாநில மாநாடு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
அறிவியல் என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல, அது நம் வாழ்வாதாரம், கலாச்சாரம் மற்றும் எதிர்காலம் என்பதை பறைசாற்றும் வகையில் இந்த மாநாடு அமையவுள்ளது.

எப்போது? எங்கே?

📅 நாள்: 24.01.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல்
📍 இடம்: ஜெயராம் உணவகம், காமராஜர் சாலை, புதுச்சேரி.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்:

இந்த ஒரு நாளில் சமூகம் சார்ந்த பல முக்கிய தலைப்புகளில் ஆலோசனைகளும், உரைகளும் இடம்பெற உள்ளன:

🔹 அறிவியலும் பண்பாடும்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் சிறப்புரை.

🔹 நாளைய சமூகம்: செயற்கை நுண்ணறிவு (AI) முதல் பசுமை ஆற்றல் (Green Energy) வரை நிபுணர்களின் பார்வையில்.
🔹 கல்விச் சிந்தனை: புதிய கல்விக் கொள்கையின் சவால்கள் குறித்த விவாதம்.
🔹 ஆரோக்கியமான புதுச்சேரி: "புதுச்சேரி - சுகாதார நகரத்தை நோக்கி" - JIPMER பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துக்களம்.

நிறைவாக, புதிய நிர்வாகிகளின் தேர்வு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த பிரதிநிதிகள் மாநாடும் நடைபெறவுள்ளது.

அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் இந்த அறிவுத் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்! 🤗

"அறிவியல் அறிவோம்... மாற்றத்தை உருவாக்குவோம்!"

#புதுவைஅறிவியல்இயக்கம் #அறிவியல்மாநாடு

03/11/2025

அவசரப் புகார் மனுபெறுநர்:மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள்,இராஜ்பவன்,புதுச்சேரி - 605 001.ஜயா, பாகூர் ஏரி உள்ளிட்ட நீர்...
03/11/2025

அவசரப் புகார் மனு

பெறுநர்:
மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள்,
இராஜ்பவன்,
புதுச்சேரி - 605 001.

ஜயா,
பாகூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பறவைகள், கொக்குகள், நாரைகள், கீரிப்பிள்ளை மற்றும் காட்டுப்பூனைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுதல், மரங்கள் வெட்டப்படுதல் மற்றும் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் இயற்கை வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஒரு அவசரப் பிரச்சினையை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பாகூர் ஏரியில் பாகூர், அரங்கனூர், நிர்ணயபட்டு, சேலியமேடு, மற்றும் பரிக்கல்பட்டு, சோரியங்குப்பம், இப்பகுதிகளில் தினமும் பறவைகளை வலைகள் வைத்தும் இரசாயண மருந்து வைத்தும் வேட்டையாடப்படுகிறது. மேலும் நாட்டுத் துப்பாக்கி மூலமும் பறவைகள் வேட்டையாடப்படுகிறது. சமூக விரோகள் தொலைபேசி மூலம் பறவைகள் வியாபாரம் நடைபெறுகிறது. அனைத்து மதுபானக் கடைகள் மூலமாகவும் பறவைகள்விற்பனை நடை பெறுகிறது. இதன் பின்னயில் அரசுத் துறை அதிகாரிக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதே நிலை உசுட்டேரி மற்றும் வில்லியனூர் பகுதிகளிளும் தொடர்கிறது.
ரோந்து வாகனம் இருந்து பறவைகள் வேட்டையாடுவதற்கு மரம் வெட்டுதல் தடுப்பதற்கும் எந்த பயனும்மில்லை. வனத்துறை இனை இயக்குநர், வனத்துறை AO மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் இவர்களிடம் புகார் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையுமில்லை. வனத்துறை AO அவர்கள் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அவரது தொலைபேசி வேலைசெய்வது இல்லை அல்லது காலிங் எடுப்பது இல்லை.
வனத்துறை இனை இயக்குநர், வனத்துறை AO இவர்கள் அலுவலக வளாகத்தைவிட்டு வெளியே வருவதில்லை. இவர் மீது அளுநரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை.

அதிகாரிகளின் பொறுப்பின்மை:
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பது குறித்து உரிய துறைகளிடம் புகார் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலிலேயே ஈடுபடுகின்றனர்.

* வனத்துறை இதை பொதுப்பணித்துறை அல்லது கொம்யூன் பஞ்சாயத்து சம்பந்தப்பட்டது என்கிறது.

பொதுப்பணித்துறை மற்றும் பிற துறைகள் இது காவல்துறையின் அல்லது வனத்துறையின் பொறுப்பு என்று கூறுகின்றன.
இத்தகைய 'கொம்யூன் பஞ்சாயத்து' போன்ற அதிகாரிகளின் ஒருங்கிணைந்த அலட்சியத்தால், குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972-ஐ கேலிக்குரியதாக்குகிறது.

வனத்துறை நிர்வாகக் கோளாறு குறித்த கோரிக்கை:
புதுச்சேரி வனத்துறையில் தற்போது வேளாண்மைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வனப் பாதுகாப்புக்குத் தேவையான சிறப்பு அறிவும், பயிற்சிகளும் இவர்களுக்கு இல்லாததால், வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற குற்றங்களைத் தடுக்க இவர்களால் முடியவில்லை. எனவே, வனத்துறையின் செயல்திறனை மேம்படுத்த, இந்தப் பணியாளர்களை உடனடியாக வேளாண்மைத் துறைக்கே திருப்பி மாற்றி, விவசாய மானியம், காப்பீடு மானியம் இதுவரையில் கொடுக்கப்படவில்லை இந்த அதிகாரிகளை அங்கு பணியில் அமர்த்த வேண்டும்.வேளாண்மை துறை சாராத காவல் துறை அதிகாரிகளை பணியில் அமர்த வேண்டும். வனப் பாதுகாப்பில் அனுபவம் மற்றும் ஆர்வம் உள்ளவர்களைப் பணியமர்த்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறையின் உறவினர்கள் மூலம் பறவை வேட்டை நடைபெறுகிறது. புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லை.
கோரிக்கைகள்:
மேற்கண்ட தீவிரமான சட்டவிரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிர்வாகக் கோளாறுகளைச் சரிசெய்யவும், தாங்கள் உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:

* உடனடி விசாரணைக் குழு:
நீர்நிலைகளில் நடக்கும் வனவிலங்கு வேட்டை மற்றும் மரங்கள் வெட்டுதல் குறித்து ஒரு உயர் மட்ட கூட்டு விசாரணைக் குழுவை அமைத்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

* காவல் மற்றும் ரோந்து:

வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த தொடர் ரோந்துப் பணிகளை இப்பகுதிகளில் உடனடியாகத் தொடங்கி, சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க வேண்டும்.

* பொறுப்பு நிர்ணயம்:

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மரங்களைப் பாதுகாப்பதில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையின் பொறுப்புகளும் தெளிவுபடுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

* வனத்துறை ஊழியர்களை மாற்றுதல்:
வனத்துறையில் உள்ள வேளாண்மைத் துறை பணியாளர்களை உரிய துறைக்கு மாற்றி, வனப் பாதுகாப்பிற்கான நிபுணத்துவம் உள்ளவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

புதுச்சேரியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரச்சனைக்கு உங்கள் மேலான தலையீடு மூலமாக நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நன்றி.
இப்படிக்கு,
உண்மையுள்ள,
பி. சந்திரசேகர்,
தலைவர்,
பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு.
பாகூர்.

01/09/2025

Address

Bahour Lake
Pondicherry
607402

Alerts

Be the first to know and let us send you an email when Save Bahour Lake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share