Save Bahour Lake

Save Bahour Lake The second largest irrigation tank of Pondicherry, this is facing threats from unmindful tourism projects. Join hands to protect this beautiful tank!!

புதுவையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள "பாகூர்", மாநிலத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் "அழகிய சதுர்வேதி மங்கலம்" என இவ்வூர் அழைக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் உள்ள ஏரிகளில் பாகூர் ஏரி 2வது பெரிய ஏரியாகும். 1762 ஹெக்டர் பரப்பளவும் 3.60 மீ உயரமும் கொண்ட இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர் அப்பகுதி விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஏரி புதுச்சேரி அரசின் பராமர

ிப்பில் இருந்து வருகிறது.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள பாகூரின் மையப் பகுதியில் "ஸ்ரீ மூலநாத சுவாமி கோயில்" சோழ மன்னர்கள் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது.

பழங்கால நூல்களில் பாகூரின் பெயர் "வாகூர் நாடு" என அழைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலானது முந்தைய காலத்தில் மூலஸ்தானம் உடைய பெருமானடிகள், பரமேஸ்வரா என அழைக்கப்பட்டு பின்னர் மூலநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் பண்டைய கால கல்வெட்டுகளும் உள்ளன. குறிப்பாக 10-ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த ராஷ்ட்ரகூட மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சோழ மன்னர்களை போரில் தோற்கடித்த ராஷ்ட்ரகூட மன்னர் கிருஷ்ணா காலத்தில் நடந்த நிகழ்வுகள் கோயில் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டுள்ளன.

சோழர் கல்வெட்டுகள் ஆதித்தய சோழன் காலத்தில் செதுக்கப்பட்டவை. பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலம் குறித்த பழமையான செப்பேடும் இக்கோயில் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

இதன் மூலம் பாகூர் சிறந்த கல்வித் தலமாக விளங்கியதை அறிய முடிகிறது. இக்கோயிலில் ஜூன் மாதம் நடைபெறும் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

தொல்லியல் துறை கட்டுப்பாடு.
பாகூர் மூலநாத சுவாமி கோயில் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டு, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோயில் பூஜைகள், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் பிரதோஷம், சனிப்பெயர்ச்சிக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக இங்குள்ள பொங்கு சனிபகவான் சன்னதி பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோயில் தஞ்சாவூர் கோயிலுக்கு முன்பு கட்டப்பட்டது என்ற சிறப்புடையது.

28/06/2025
புதுச்சேரியில் இடுபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நெல் மகசூல் இறங்கு முகத்தில் உள்ளது.புதுச்சேரி யூனியன் பிர தேசத்தில...
21/04/2025

புதுச்சேரியில் இடுபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நெல் மகசூல் இறங்கு முகத்தில் உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிர தேசத்தில் சாகுபடி பரப்ப ளவு வெகுவாக குறைந்து வருகிறது. 2004-05ம் ஆண்டு 21,034 ஹெக்டர் பரப்பளவு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 2023-24ம் ஆண்டு 16,274 ஹெக்டர் பரப்பளம் வாக குறைந்துவிட்டது.

#அஇவிச #விவசாயிகள் #விவசாயசங்கம் #புதுச்சேரி

தண்ணீர் திருவிழாமார்ச் 22, 2025 அன்று உலக நீர் தினம் இன்று காந்தி திடலில் மாலை 6.00 மணியளவில் நிறைவு விழா நடைபெற்றது, இத...
22/03/2025

தண்ணீர் திருவிழா

மார்ச் 22, 2025 அன்று உலக நீர் தினம் இன்று காந்தி திடலில் மாலை 6.00 மணியளவில் நிறைவு விழா நடைபெற்றது, இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் டிஆர்டிஏ தலைவர் திரு. ஏ.குலோத்துங்கன், ஐஏஎஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் என்.ரமேஷ் மற்றும் புதுச்சேரி டிஎஸ்டிஇயின் திரு காளமேகம் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தண்ணீர் திருவிழா 25 பற்றிய கண்ணோட்டத்தை நல்லாட்சிக்கான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் புரோபிர் பானர்ஜி வழங்கினார்.

நிறைவு விழாவின் முக்கிய சிறப்பம்சமாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான புதுச்சேரி-விழுப்புரம் -ஆரோவில்-கடலூர் (PVAC) உயிரி பிராந்தியத்தின் சாம்பியன் என்ற பட்டத்தை தலைமை விருந்தினர் அறிவித்தார். பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பின் தலைவர் திரு. வி. சந்திரசேகர், ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான அவரது அயராத முயற்சிகளுக்காக மாவட்ட ஆட்சியரால் PVAC உயிரி பிராந்தியத்தின் ஈரநில சாம்பியனாக கௌரவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரியின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் புகழ்பெற்ற ஆயி குளம் என்ற கருப்பொருளில் தெரு நாடகம் நிகழ்த்தப்பட்டது.

புதுச்சேரியின் கழிமுகங்கள்/குளங்களின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர்வாழ் நீர் ஆகாயத்தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் பற்றிய கண்காட்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தெரு நாடக கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆகாய தாமரை பயிற்சியாளர்களும் பாராட்டப்பட்டனர்.

முன்னதாக டாக்டர் வினோத்குமார் வரவேற்புரை அளித்தார், திருமதி கயல்விழி நீர் உறுதிமொழி ஏற்றார். ஸ்வர்ணிம் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி திருமதி கீதா நன்றியுரையை வழங்கினார்.

17/02/2025

புதுச்சேரி நகரத்திற்கு தேவையான குடிநீருக்கு பாகூர், வில்லியனூர் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது பற்றி பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு.....

புதுச்சேரி நிலத்தடி நீர் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (சட்டம் எண் 2/2003), 2002 செயல்படுத்திட புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணயத்திற்கு ஒரு தலைவர், சர்வே, ஆய்வு, மேம்பாடு, நிர்வாகம் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் அனுபவம் உள்ள 5 அரசு சார்ந்த (அதிகாரிகள்) உறுப்பினர்கள் மற்றும் நிலத்தடி நீர் சார்ந்த சிறப்பு அறிவுத்திறன் அல்லது அனுபவம் உள்ள 3 அரசு சாராத உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்திற்கு பல வருடங்களாக உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. வேளாண்துறை செயலர் தலைவராகவும், ஒரு வேளாண் துணை இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் செயல்படுகின்றனர். இப்படி முழுமையாக இல்லாமல் உள்ள ஆணையத்திற்கு என்ன அதிகாரம் இருக்க முடியும். மேலும், உறுப்பினர் செயலராக உள்ளவர் வேளாண் பொறியியல் பட்டதாரி. இவர் நிலத்தடி நீர் பற்றி தெரிவிக்கும் கருத்தினை பசுமைத் தீர்ப்பாயம் எப்படி எடுத்துக் கொள்ளமுடியும். அதேபோல் மத்திய நிலத்தடி நீர் ஆணையம், சென்னை 2014ல் நடத்திய ஆய்வினை எப்படி இப்பொழுது உள்ள சூழலுக்கு ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், அனைத்துவிதமான ஆய்வுகளையும் செய்து தமிழ்நாடு, கண்டமங்கலம் ஃபிர்க்காவினை "*Semi critical firka*" என்று அறிவித்துள்ளது. அதாவது, 70 முதல் 90 சதம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதியாகும். மேலும், நிலத்தடி நீர் ஆதார மதிப்பீடு கமிட்டி, இப்பகுதியை "*கருமை வட்டாரம்*" என்று அறிவித்துள்ளது. அதாவது நிலத்தடி நீர் 85 சதம் மேல் உறிஞ்சப்படுவதாகவும், அதனால் மிகவும் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்று இப்பகுதியை வரையறுக்கிறது. எனவே, பாகூர், வில்லியனூர் மற்றும் திருக்கானூர் பகுதிகள் அதிகளவு நீர் உறிஞ்சப்படும் பகுதிகளாகும்.

இப்படி தமிழகத்தில் வல்லுநர்கள் ஆய்வு செய்து அறிவித்ததை கணக்கில் கொள்ளாமல், உறுப்பினர்களே இல்லாமல் செயல்படும் புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் மற்றும் நிலத்தடி நீர் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத வேளாண் பொறியியல் படித்த உறுப்பினர் செயலர் கொடுக்கும் தரவுகளை வைத்து பசுமைத் தீர்ப்பாயம் இப்பிரச்னையை அணுகியுள்ளது.

புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் முழுமையாக உறுப்பினர்கள் இல்லாமல் செயல்படுவதன் காரணத்தால் ஏறக்குறைய 8,000 ஆழ்குழாய் கிணறுகள் பதிவு பெற்று ஒழுங்குப்படுத்தப்படாமல் உள்ளது. புதுச்சேரி நகரப்பகுதிகளை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், தண்ணீர் உறிஞ்சுவது கண்காணிக்கப்படாமல் உள்ளது. கடல் பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் வரை நாளொன்றுக்கு 10,000 லிட்டர் வரை மட்டும் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்கிற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எத்தனை நிறுவனங்கள் இதுபோன்று அதிக அளவு தண்ணீர் எடுக்கின்றன என்று ஆணையத்திற்கு நன்கு தெரியும். புதுச்சேரி நகரத்தில் இயங்கும் துணி வெளுப்பகங்களே (சலவையகம்) இதற்கு சாட்சி. இவற்றை எல்லாம் கண்காணிக்கத் தவறவிட்டு வேளாண் நிலங்களை அழிக்க இந்த ஆணையம் துணை போகிறது.

புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் மழை நீர் சேகரிப்புக்காக எந்தவித முன்னெடுப்பும் இதுவரை எடுக்கவில்லை. புதுச்சேரியில் எத்தனை மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளன, அதன் மூலம் வருடத்திற்கு எவ்வளவு நீர் சேகரிக்கப்படுகிறது என்கிற தரவு எதுவும் ஆணையத்திடம் இல்லை.

தமிழகத்தில், ஒன்றரை கோடி மக்கள் வாழும் சென்னைக்கு பல ஏரிகளிலிருந்து தான் குடிநீர் வழங்கப்படுகிறது. அங்கு இதுபோல் வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் வேலை இல்லை.

புதுச்சேரியில் உள்ள மிகப் பெரிய ஏரியான ஊசுடு ஏரி மூலம் பயன்பெறும் பாசன ஆயக்கட்டு நிலங்கள் மிகவும் குறைந்துவிட்டன. எனவே, ஊசுடு ஏரி மூலம் புதுச்சேரியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஊசுடு ஏரியை தனியார் படகு குழாம் நடத்த அனுமதி அளிக்கின்றனர். இதுபோன்று தொலைநோக்குப் பார்வை இல்லாமல் புதுவையின் நெற்களஞ்சியமாக உள்ள பாகூர் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைக்க திட்டமிடுதல், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பாகூரை முற்றிலும் அழித்துவிடும்.

மேலும், புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் மணமேடு மற்றும் சோரியாங்குப்பம் பகுதிகளில் தடுப்பணை கட்டவுள்ளதாக பசுமைத் தீர்ப்பாயத்தின்முன் தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பணை கட்டிய பிறகு அதன் மூலம் எவ்வளவு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது என்று ஆய்வு செய்து அதன்பிறகு தான் ஆழ்குழாய் கிணறு அமைப்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். அதுபோல, சங்கராபரணி ஆற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். ஏனென்றால் திருக்காஞ்சி வரை நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்துள்ளதால் இங்கு பயிர் செய்வது கடினமாக உள்ளது.

பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய மதிப்பீடுகளை மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தி கண்டறிய வேண்டும் என்று புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், விரிவான ஆய்வு நடத்த புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்தில் அல்லது வேளாண்துறையில் தகுதி வாய்ந்த நீர்நிலவியலாளர் இல்லை. தற்பொழுது வேளாண்துறையில் பதவியில் இருக்கும் ஒரே நீர்நிலவியலாளர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார். பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியபடி ஆய்வு செய்தப் பிறகு தான் மற்றும் இப்பகுதி மக்களின் கருத்தறிந்த பிறகு தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கு, முதலில் அரசு உடனடியாக புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து முழுமையாக செயல்பட வைத்தால் மட்டுமே புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரம் காப்பாற்றப்படும்.

புதுச்சேரியில் உள்ள 81 ஏரிகளை புதுச்சேரி ஏரி புனரமைப்புத் திட்டம் மூலம் தூர் வாரி ஏறக்குறைய 20 வருடங்கள் ஆகின்றன. மீண்டும் ஏரிகளை புனரமைத்தால் மட்டுமே நிலத்தடி நீரின் அளவை உயர்த்தமுடியும். எனவே, அரசு இது போன்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்கள் எதிர்க்கும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதை பாகூர் மற்றும் வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திட வேண்டும். மாற்று வழிமுறையான ஊசுடு ஏரியிலிருந்து நகரத்திற்கு குடிநீர் வழங்கவும், மழைநீர் சேகரிப்பை முன்னெடுக்கவும், புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் முழுமையாக செயல்பட உறுப்பினர்கள் நியமித்திடவும், திட்டத்தினை செயல்படுத்த உள்ள பகுதிகளில் மீண்டும் உரிய ஆய்வு செய்திடவும், புதுச்சேரியில் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சும் நிறுவனங்களை கண்காணிக்கவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்திட போராட வேண்டும்.

*V. சந்திரசேகர்*
*தலைவர்*
*பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு*
*பாகூர்*

போர்வெல்' போடும் பகுதிகளில் தடுப்பணை கட்ட தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு.
16/02/2025

போர்வெல்' போடும் பகுதிகளில் தடுப்பணை கட்ட தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு.

சமீபத்தில் வீசிய ஃபெங்கல் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அனைத்து வகையான பயிர்கள் பா...
03/02/2025

சமீபத்தில் வீசிய ஃபெங்கல் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அனைத்து வகையான பயிர்கள் பாதிப்படைந்தன. அதே போல் சோரியாங்குப்பம் போன்ற ஆற்றோர கிராமங்களில் மிகப்பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் நிலத்தை சமப்படுத்தினால் மட்டுமே பயிர் செய்யமுடியும் என்று உழவர்கள் கவலையில் உள்ளனர். இந்த சேதத்தையும் வேளாண்துறை கணக்கெடுத்தது. ஆனால், அதனை முறையாக அரசுக்கு தெரிவித்து அதற்குரிய நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும்/ஏற்பாட்டினையும் செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இதற்கு முன்னர் ஏற்பட்ட புயல்/ கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய தனியாக நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், இம்முறை வேளாண் இயக்குநர் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குநர் இந்த சேதத்தினை கணக்கெடுத்தும் அதற்குரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், பாதிப்புக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புக்கான மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய பாகூர் வந்த குழுவினரை தனது நிலத்தை பார்வையிட அழைத்து வருமாறு வேளாண் அதிகாரிகளை கேட்டபொழுது, மறுத்துவிட்டதோடு அல்லாமல் அந்த உழவரை காவல் நிலையத்தில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவோம் என்று மிரட்டியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அந்த வேளாண் அதிகாரி மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு உத்தரவிடவேண்டும். பாகூர் பகுதிகளில் நேஷனல் ஹைவேஸ் சாலை அமைத்ததால் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. நெடுஞ்சாலைக்கும், விளைநிலத்திற்கும் இணைத்து U வடிகால் அமைத்திருந்தால் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. எனவே பாதிப்புக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புக்கான மதிப்பீடு செய்யும்போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், வேளாண்துறை கணக்கெடுத்து விடுபட்ட 1,414 ஹெக்டருக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், *அக்ரிஸ்டாக்கில் பதிந்து விண்ணப்பம் கொடுத்து வேளாண் அலுவலர்களால் பரிந்துரை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான உழவர்களின் பெயர் தற்பொழுது வழங்கப்படும் நிவாரணத்தில் விடுபட்டுவிட்டதாகவும், ஏறக்குறைய ரூ 20 லட்சம் விடுபட்டு போனதாக தற்பொழுது வேளாண்துறையில் அலுவலர்கள் மத்தியில் பேச்சு உள்ளது*. அதனால் தான் உழவர் பயனாளர்களின் விவரங்கள் வேளாண்துறை இணையதளத்திலும், நிவாரணம் வழங்குவதற்கு முன்னும், வழங்கிய பின்னும் வெளியிடப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவு பின்பற்றப்படவில்லை என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாம் முன்னரே பலமுறை அறிக்கை வெளியிட்டோம், *திரு. ஜாஹீர் ஹூசைன் கூடுதல் வேளாண் இயக்குநர் தட்டாஞ்சாவடி அலுவலகத்திற்கு வருவதில்லை, மற்றும் அவரது திறமையின்மை காரணமாக உழவர் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்துவதில் குளறுபடிகள் உள்ளன. * அதுபோல, அனைத்து வேளாண் அலுவலர்கள் பயிர் பாதிப்பை கணக்கெடுத்து வழங்கியதை தொகுத்து அரசுக்கு கோப்பு அனுப்ப வேண்டிய *துணை வேளாண் இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அவர்கள் அரசு செலவில் ஏனாம் பிராந்தியத்தில் நடைபெற்ற மலர்கண்காட்சியை காண சென்றுவிட்டார். அதனால் நிவாரணம் வழங்குவது தாமதமானது.* தற்பொழுது இவர்கள் இருவரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்தால் *நூற்றுக்கும் அதிகமான உழவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது*. நிவாரணம் பெற்ற உழவர் பயனாளர்களின் விவரங்கள் *வேளாண்துறை இணையதளத்தில் வெளியிட்டால் மட்டுமே விடுபட்ட உழவர்கள் விவரங்கள் தெரியவரும்.*

*இதுபோன்று தமிழகத்தில் நடந்திருந்தால் அதற்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். எனவே, நிவாரணம் பெற்ற உழவர் பயனாளர்களின் விவரங்கள் வேளாண்துறை இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும், மண் அரிப்பு ஏற்பட்ட விளைநிலங்களை சீரமைத்திட உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் மற்றும் ஃபெங்கல் புயல் நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான திரு. ஜாஹீர் ஹூசைன், கூடுதல் வேளாண் இயக்குநர் மற்றும் துணை வேளாண் இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்* என்று கேட்டுக் கொள்கிறோம்.

*V. சந்திரசேகர்*
*தலைவர்*
*பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு*
*பாகூர்*

பாகூர் ஏரி 08.01.2025
09/01/2025

பாகூர் ஏரி 08.01.2025

பாகூர் ஏரி ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை
15/09/2024

பாகூர் ஏரி ஆக்கிரமிப்பு நடவடிக்கை தேவை

04/09/2024

Puducherry state Bahour commune. Kuruvinatham village Tenpennai river in sitter dam in the middle night lorry TATA at and tempo van are lifting the illegal sand.

And then in Soriyankuppam village near the burial ground both ways inside of the thenpennai river lifting the sand by the lorry.

The Revenue department
P. W. D department and the police department don't take action.
Two years ago fiction the check post on the kuruvinatham Tookkypaalam and periyar Nagaraj. Now that check post is not functioning.
So the thefting persons are lifting sand and sale on the Tavalakuppam and Puducherry town.

Address

Pondicherry

Alerts

Be the first to know and let us send you an email when Save Bahour Lake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share