03/11/2025
அவசரப் புகார் மனு
பெறுநர்:
மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்கள்,
இராஜ்பவன்,
புதுச்சேரி - 605 001.
ஜயா,
பாகூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பறவைகள், கொக்குகள், நாரைகள், கீரிப்பிள்ளை மற்றும் காட்டுப்பூனைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுதல், மரங்கள் வெட்டப்படுதல் மற்றும் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் இயற்கை வேளாண்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஒரு அவசரப் பிரச்சினையை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பாகூர் ஏரியில் பாகூர், அரங்கனூர், நிர்ணயபட்டு, சேலியமேடு, மற்றும் பரிக்கல்பட்டு, சோரியங்குப்பம், இப்பகுதிகளில் தினமும் பறவைகளை வலைகள் வைத்தும் இரசாயண மருந்து வைத்தும் வேட்டையாடப்படுகிறது. மேலும் நாட்டுத் துப்பாக்கி மூலமும் பறவைகள் வேட்டையாடப்படுகிறது. சமூக விரோகள் தொலைபேசி மூலம் பறவைகள் வியாபாரம் நடைபெறுகிறது. அனைத்து மதுபானக் கடைகள் மூலமாகவும் பறவைகள்விற்பனை நடை பெறுகிறது. இதன் பின்னயில் அரசுத் துறை அதிகாரிக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதே நிலை உசுட்டேரி மற்றும் வில்லியனூர் பகுதிகளிளும் தொடர்கிறது.
ரோந்து வாகனம் இருந்து பறவைகள் வேட்டையாடுவதற்கு மரம் வெட்டுதல் தடுப்பதற்கும் எந்த பயனும்மில்லை. வனத்துறை இனை இயக்குநர், வனத்துறை AO மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் இவர்களிடம் புகார் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையுமில்லை. வனத்துறை AO அவர்கள் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அவரது தொலைபேசி வேலைசெய்வது இல்லை அல்லது காலிங் எடுப்பது இல்லை.
வனத்துறை இனை இயக்குநர், வனத்துறை AO இவர்கள் அலுவலக வளாகத்தைவிட்டு வெளியே வருவதில்லை. இவர் மீது அளுநரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை.
அதிகாரிகளின் பொறுப்பின்மை:
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பது குறித்து உரிய துறைகளிடம் புகார் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலிலேயே ஈடுபடுகின்றனர்.
* வனத்துறை இதை பொதுப்பணித்துறை அல்லது கொம்யூன் பஞ்சாயத்து சம்பந்தப்பட்டது என்கிறது.
பொதுப்பணித்துறை மற்றும் பிற துறைகள் இது காவல்துறையின் அல்லது வனத்துறையின் பொறுப்பு என்று கூறுகின்றன.
இத்தகைய 'கொம்யூன் பஞ்சாயத்து' போன்ற அதிகாரிகளின் ஒருங்கிணைந்த அலட்சியத்தால், குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972-ஐ கேலிக்குரியதாக்குகிறது.
வனத்துறை நிர்வாகக் கோளாறு குறித்த கோரிக்கை:
புதுச்சேரி வனத்துறையில் தற்போது வேளாண்மைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வனப் பாதுகாப்புக்குத் தேவையான சிறப்பு அறிவும், பயிற்சிகளும் இவர்களுக்கு இல்லாததால், வேட்டையாடுதல் மற்றும் மரம் வெட்டுதல் போன்ற குற்றங்களைத் தடுக்க இவர்களால் முடியவில்லை. எனவே, வனத்துறையின் செயல்திறனை மேம்படுத்த, இந்தப் பணியாளர்களை உடனடியாக வேளாண்மைத் துறைக்கே திருப்பி மாற்றி, விவசாய மானியம், காப்பீடு மானியம் இதுவரையில் கொடுக்கப்படவில்லை இந்த அதிகாரிகளை அங்கு பணியில் அமர்த்த வேண்டும்.வேளாண்மை துறை சாராத காவல் துறை அதிகாரிகளை பணியில் அமர்த வேண்டும். வனப் பாதுகாப்பில் அனுபவம் மற்றும் ஆர்வம் உள்ளவர்களைப் பணியமர்த்த வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறையின் உறவினர்கள் மூலம் பறவை வேட்டை நடைபெறுகிறது. புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லை.
கோரிக்கைகள்:
மேற்கண்ட தீவிரமான சட்டவிரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிர்வாகக் கோளாறுகளைச் சரிசெய்யவும், தாங்கள் உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:
* உடனடி விசாரணைக் குழு:
நீர்நிலைகளில் நடக்கும் வனவிலங்கு வேட்டை மற்றும் மரங்கள் வெட்டுதல் குறித்து ஒரு உயர் மட்ட கூட்டு விசாரணைக் குழுவை அமைத்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
* காவல் மற்றும் ரோந்து:
வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த தொடர் ரோந்துப் பணிகளை இப்பகுதிகளில் உடனடியாகத் தொடங்கி, சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க வேண்டும்.
* பொறுப்பு நிர்ணயம்:
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மரங்களைப் பாதுகாப்பதில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையின் பொறுப்புகளும் தெளிவுபடுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
* வனத்துறை ஊழியர்களை மாற்றுதல்:
வனத்துறையில் உள்ள வேளாண்மைத் துறை பணியாளர்களை உரிய துறைக்கு மாற்றி, வனப் பாதுகாப்பிற்கான நிபுணத்துவம் உள்ளவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரச்சனைக்கு உங்கள் மேலான தலையீடு மூலமாக நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
உண்மையுள்ள,
பி. சந்திரசேகர்,
தலைவர்,
பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு.
பாகூர்.