Jothy International Travel &Services,Rajapalayam626117.cell +91 9600444225

Jothy International Travel &Services,Rajapalayam626117.cell +91 9600444225 Our services for Tourism. SBILife insurance, Net Work marketing, ஆன்மீகஅரசியல் Gpay. 9600444225

உங்கள் குடும்பசுற்றுலா குறைந்தசெலவில்நிறைவான மகிழ்ச்சியுடன் கொண்டாடிகளித்திட சுற்றுலாவுக்கு முன்பதிவு கடடணம் கட்ட.

நாலம்பலம் என்று அழைக்கப்படும் கோவில்களின் சிறப்பு ஸ்ரீ கிருஷ்ணர் தன் தாய்மாமனான கம்சனை வதம் செய்து, அவனால் பல வருடங்களாக...
07/05/2026

நாலம்பலம் என்று அழைக்கப்படும் கோவில்களின் சிறப்பு

ஸ்ரீ கிருஷ்ணர் தன் தாய்மாமனான கம்சனை வதம் செய்து, அவனால் பல வருடங்களாக பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் தாய் தந்தையான தேவகி மற்றும் வசுதேவரை விடுதலை செய்தார். கம்சனால் பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணரின் தாத்தாவான உக்கிரசேனரையும் விடுதலை செய்தார். பிறகு உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரசனாக்கினார். கம்சன் இறந்ததால் அவனுடைய மனைவிகளான அஷ்டியும் பிராப்தியும் விதவை ஆனார்கள். அஷ்டியும் பிராப்தியும் சகோதரிகள். இவர்கள் ஜராசந்தனின் புதல்விகள். தன்னுடைய இரு புதல்விகளையும் விதவையாக்கின ஸ்ரீ கிருஷ்ணர் மேல் கடும் கோபம் கொண்டான் ஜராசந்தன். ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவரை சார்ந்த யாதவர்களுடன் தொடர்ந்து போர் புரியலானான். வரம் பெற்ற ஜராசந்தனை ஸ்ரீ கிருஷ்ணரால் வதைக்க இயலவில்லை. ஆகவே யாதவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். காலம் இவ்வாறு கரைய உக்கிரசேனர் இறைநிலை அடைந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய தமையனாரான பலராமரை மதுராவின் மன்னனாக முடிசூட்டினார். ஜராசந்தனின் போரை தவிர்க்க சமுத்திர ராஜனின் உதவியை நாடினர். ஸ்ரீ கிருஷ்ணரின் வேண்டுகோளுக்கிணங்கி சமுத்திர ராஜன் துவாரகை என்ற நிலப்பரப்பை அளித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும் அவரை சார்ந்த யாதவர்களும் துவாரகைக்கு இடம் பெயர்ந்தார்கள். துவாரகையின் மன்னனாக ஸ்ரீ கிருஷ்ணர் முடிசூட்டப்பட்டார்.

துவாரகையில் நித்திய பூஜைகள் செய்ய தனக்கு பிரத்யேகமாக நான்கு சிலைகளை உருவாக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர். பக்தி, பாசம், நேசம், தியாகம் ஆகிய உன்னதமான குணங்களைக் கொண்ட நான்கு சகோதரர்களின் சிலைகள் அவை. ஆம்! ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் சிலைகள் தாம் அவை. அனுதினமும் இந்த நான்கு சகோதரர்களுக்கும் பூஜை செய்வதை தலையாய கடமையாக கொண்டார். கிருஷ்ணாவதாரம் நிறைவேறி, அவரது சுவர்காரோகணத்திற்கு பிறகு, சமுத்திர ராஜனால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வழங்கப்பட்ட துவாரகை ஆழிக்கடலில் மூழ்கிப்போனது. ஸ்ரீ கிருஷ்ணரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் சிலைகள் பின்னாளில் மேற்கு கரையோரத்தில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டன. அப்போது மேற்கு கரையோரம் இருந்த நிலப்பரப்பிற்கு கைப்பமங்கலம் என்று பெயர். அதனை ஆட்சி புரிந்த வக்கிகைமால் என்ற சிற்றரசனிடம் மீனவர்கள் சிலைகளை ஒப்படைத்தனர். பிறகு பிரசன்னம் பார்த்து, நான்கு சிலைகளும் மேற்கூறிய இடங்களில் வக்கிகைமாலால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருக்கோயில்கள் எழுப்பப்பட்டன.

தலங்களின் பெருமைகள்:
1. வக்கிகைமாலால் எழுப்பப்பட்ட திருக்கோயில்கள் "நாலம்பலம்" என அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு கோயில்களிலும் பெருமாளே ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனனாக அருள்பாலிக்கிறார். பெருமாள் ஸ்ரீராமராக தோன்றியபோது, ஆதிஷேஷன் லஷ்மணனாகவும், பெருமாளின் சங்கு சக்கரமே பரதன் மற்றும் சத்ருக்கனனாகவும் தோன்றினார்கள் என்று ராமாயணம் கூறுகிறது. பெருமாளின் சேவைக்காக தோன்றியவர்களை பெருமாளாகவே பாவித்து மக்கள் வழிபடுகிறார்கள்.
2. பெருமாள் கோயில் கொண்டுள்ள இடங்களில் எல்லாம், அவரது திருக்கரங்களை சங்கு, சக்கரம், கதை மற்றும் பத்மம் (தாமரை) போன்றவைகளே அலங்கரிக்கின்றன. இதற்கு மாறாக த்ரிப்ரயார் மற்றும் இரிஞ்சாலக்குடா திருக்கோயில்களில் சங்கு, சக்கரம், வில் மற்றும் அட்சமாலையோடு மூலவர் காட்சியளிக்கிறார். இவர்கள் முறையே ஸ்ரீராமர் மற்றும் பரதன் ஆவர். மூழிக்குளம் மற்றும் பாயமல் திருக்கோயில்களில் சங்கு, சக்கரம், கதை மற்றும் அட்சமாலையோடு மூலவர் காட்சியளிக்கிறார். இவர்கள் முறையே லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் ஆவர்.
3. நான்கு திருக்கோயில்களிலும் உள்ள மூலவர் ஒரே சாயலில் இல்லை. கூர்ந்து நோக்கினால் ஒவ்வொரு மூலவரும் தனிப்பெரும் கடாட்சத்துடன் காட்சியளிப்பது புலப்படும்.
4. பொதுவாக பெருமாள் திருக்கோயில்களில் காணப்படும் கருடாழ்வார் சன்னதி நான்கு திருக்கோயில்களிலும் இல்லை. இதுவே இக்கோயில்கள் ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோருக்குரியது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
5. ஸ்ரீராமரின் த்ரிப்ரயார் கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதையை காணாமல் தவித்த ஸ்ரீராமரின் துயரை நீக்க வானரங்கள் எல்லா திசைகளிலும் சென்று சீதையை தேடினார்கள். ராவணனால் கவரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை அனுமாரே கண்டு திரும்பினார். ஸ்ரீராமரை வணங்கி "கண்டேன் சீதையை" என அனுமன் கூறியதும், அவர் செய்தியை கேட்ட மகிழ்ச்சியில் வானர சேனை ஆர்பரித்ததும், இன்று நாம் காணும் த்ரிப்ரயார் திருத்தலத்தில் தான் என்ற செய்தி நம்மை பக்தி பெருங்கடலில் மூழ்க செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
6. ஸ்ரீராமரின் த்ரிப்ரயார் கோயில் 108 திவ்ய தேசங்களில் இல்லை. மாறாக லட்சுமணனின் மூழிக்குளம் திருக்கோவிலே (புராணப்பெயர்: திருமூழிக்கலம்) 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. பதினான்கு ஆண்டுகால வனவாசத்தின் போது லக்ஷ்மணன் ஆற்றிய சேவைகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இத்தகை
திருச்சூர் மாவட்டத்திலுள்ள நாலம்பலம் கோவில்கள் ஸ்ரீ ராமனுக்கான திருப்ப்ரயார் கோவில், பரதனுக்கான கூடல்மாணிக்கம் கோவில், லட்சுமணனுக்கான திருமூழிக்குளம் கோவில் (எர்ணாகுளம் எல்லையில்), சத்ரு஘்னனுக்கான பாயம்மல் கோவில்கள் ஆகும். இவற்றை ஒரே நாளில் உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்வது பெரும் புண்ணியம் தரும
- **திருப்ப்ரயார் ஸ்ரீராம சுவாமி கோவில்**: பாத அபிசாரங்கள், பேய் பிசாசு செய்வினை உபத்ரவங்களிலிருந்து முக்தி.
- **இரிஞ்ஞாலக்குட கூடல்மாணிக்கம் கோவில்**: சந்தான பாக்கியம், வயிற்று வலி, அர்ஷம், சுவாச கோளாறுகள் சிகிச்சை; ரோக சாந்தி.
- **திருமூழிக்குளம் லட்சுமண பெருமாள் கோவில்**: சர்ப்ப துஷ்டி இல்லாமை, பொது புண்ணியம்.
- **பாயம்மல் சத்ரு஘்ன சுவாமி கோவில்**: சத்துரு தோஷம், ஆபிச்சார தோஷம், பாத அபிசாரங்கள் நீக்கம்; சுதர்சன புஷ்பாஞ்சலி மூலம் நன்மை.ஆக மொத்தத்தில்
பொது பலன்கள்
ஒரே நாளில் நாலம்பல தரிசனம் துன்பங்கள், நோய்கள், தாரிதிர్యம் நீக்கி ஆசிர்வாதம், செல்வம் தரும். திருப்ப்ரயார் நிர்மால்யம் தொட்டு மற்ற கோவில்களை தரிசித்து திரும்பி வழிபடுவது மிகுந்த புண்ணியம். இத்தகைய தலதரிசனம் செய்ய இப்போதே தொடர்பு கொள்ளுங்கள் 096004 44225

மலைநாட்டு திவ்ய தேசங்கள் (கேரளாவில் உள்ள 13 திருத்தலங்கள்) தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள் ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவ...
06/05/2026

மலைநாட்டு திவ்ய தேசங்கள் (கேரளாவில் உள்ள 13 திருத்தலங்கள்) தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள் ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் மகத்தானவை. அவற்றின் முக்கிய பலன்கள் இதோ:

• வைகுண்ட பதவி (மோட்சம்):
108 திவ்ய தேசங்களையும் தரிசனம் செய்பவர்களுக்கு மரணத்திற்குப் பின் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது வைணவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இந்த மலைநாட்டு திவ்யமேணங்களை தரிசித்தால் 108 திவ்யமேண தரிசனபலன்கள் கிடைக்கிறது அதனாலயே மலைநாட்டு திவ்யதேசதரிசனம் மிக முக்கியமாக கருதப்படுகிறது,
• பாவ விமோசனம் மற்றும் கர்மவினை நீக்கம்: இந்த புனித தலங்களை தரிசித்து, அங்கு நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்பது, ஒருவருடைய பாவங்கள் மற்றும் கர்ம வினைகளை நீக்கி ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
• மன அமைதி மற்றும் புத்துணர்ச்சி: மலைநாட்டு தலங்கள் பெரும்பாலும் இயற்கை சூழல் மிகுந்த அமைதியான இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை தரிசிப்பது ஆழ்ந்த மன அமைதியையும், ஆன்மீக புத்துணர்ச்சியையும் தருகிறது.
• பெருமாளின் அருளாசி: திருமால் நித்திய வாசம் செய்யும் தலங்களாக இத்தலங்கள் கருதப்படுவதால், இங்கு வழிபடுவது பெருமாளின் பரிபூரண அருளையும், பாதுகாப்பையும் குடும்பத்திற்கு பெற்றுத் தரும்.
• ஆழ்வார்களின் பாசுரங்களின் அருள்: ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பட்ட) செய்யப்பட்ட இந்த தலங்களில், அவர்களின் பக்தி அனுபவத்தை நாமும் உணர முடியும்.
• கலாச்சார மற்றும் கட்டிடக்கலை உணர்வு: பழங்கால திராவிட கட்டிடக்கலை நுணுக்கங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு ரசிக்கலாம், இது நம் கலாச்சார பெருமையை உணர்த்தும்.
• தோஷ நிவர்த்தி: குறிப்பாக சில திவ்ய தேசங்கள் கிரக தோஷங்கள், திருமணத் தடைகள் மற்றும் புத்திர தோஷங்களை நீக்கும் தலங்களாக போற்றப்படுகின்றன.

மலைநாட்டு திவ்ய தேசங்கள் (உதாரணம்):திருவனந்தபுரம் (அனந்தபத்மநாப சுவாமி), திருவட்டாறு, திருக்காட்கரை, திருவாலங்கோடு, திருநாவாய், திருவித்துவக்கோடு, திருக்காக்கரை போன்ற 13 தலங்கள் மலைநாட்டில் அமைந்துள்ளன.
பொதுவாக, இந்த திவ்ய தேச யாத்திரை, மானுட வாழ்வில் ஆன்மீக அறிவையும், மெய்யான ஞானத்தையும் பெற உதவும் ஒரு பயணமாக கருதப்படுகிறது. [
இந்த புனித பயணத்தில் நீஙுகளும் கலந்துகொள்ள 096004 44225

கோடைகாலத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சுற்றுலா இது,இராஜபாளையத்திலிருந்து பயணம் தொடங்குகிறது
24/04/2026

கோடைகாலத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சுற்றுலா இது,இராஜபாளையத்திலிருந்து பயணம் தொடங்குகிறது

02/04/2026
இராஜபாளையம் சுற்றுவட்டார அனைத்து பகுதியிலிருந்தும் பயணம் தொடங்கும்
09/01/2026

இராஜபாளையம் சுற்றுவட்டார அனைத்து பகுதியிலிருந்தும் பயணம் தொடங்கும்

இந்து மக்களின் புனித நகரம் காசி மீண்டும் உன்னத நிலையில்....!!!!!"காசி வீழ்ச்சி அடைந்தால் ,இமயம் முதல் இலங்கை வரை,குஜராத்...
24/12/2025

இந்து மக்களின் புனித நகரம் காசி மீண்டும் உன்னத நிலையில்....!!!!!

"காசி வீழ்ச்சி அடைந்தால் ,இமயம் முதல் இலங்கை வரை,குஜராத் முதல் அசாம் வரை வாழ்ந்து வரும் இந்துக்கள் வீழ்ச்சி அடைவார்கள்" என்பது ராமாயண காலத்தில் இருந்து வரும் ஆன்மீக பழமொழி!

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஊர் திருக்கண்டியூர் !( பைரவரின் எட்டு படை வீடுகளில் இது இரண்டாம் படை வீடு!!!)

இங்கே தான் பல கோடி யுகங்களுக்கு முன்பு ஈசனின் ஆணைப்படி , கால பைரவர்,பிரம்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளினார் !

அப்படி கிள்ளும் போது கிள்ள கிள்ள தொடர்ந்து பிரம்மாவின் ஐந்தாவது தலை முளைத்து வந்து கொண்டே இருந்தது.....மொத்தம் 1000 தலைகள் முளைத்து கொண்டே இருந்தன.........கால பைரவரும் விடாமல் தலைகளை கிள்ளிக் கொண்டே இருந்தார்........அப்போது ஈசனின் ஆணைப்படி கிள்ளுகிறேன் என்ற எண்ணம் அவரிடம் இருந்து நீங்கி பிரம்மாவின் ஐந்தாவது தலையை நான் கிள்ளுகிறேன் என்ற ஆணவம் ஒரே ஒரு நொடி வந்து விட்டது.......அதனால் ,பிரம்மாவின் 1000 ஆவது தலை அவரது கை விரல்களில் ஒட்டிக் கொண்டது...

உடனே ,தன்னை படைத்த தனது அப்பா ஈசனிடம் அப்பா அடியேன் என்ன செய்ய வேண்டும்? என்று வேண்டினார்....

"தேசாந்திரம் (வடக்கு நோக்கி கோவில்களுக்கு )போ!" என்று ஈசன் ,தனது மகனாகிய கால பைரவரிடம் ஆணையிட்டார்.

சிவாலயங்களை தொடர்ந்து வழிபட்டு கொண்டே திருக்கையிலாயம் நோக்கி போ.....எங்கே இந்த தலை கீழே விழுகிறதோ அங்கே நான் உனக்கு மீண்டும் காட்சி அளிப்பேன் என்று ஈசன் அறிவுறுத்துகிறார்.....

சுமாராக 10,007 சிவாலயங்களை கால பைரவர் வழிபட்டு விட்டு முடிவாக காசிக்கு வருகிறார்!

அன்னை பார்வதி தேவி உலகில் உள்ள எல்லா தானியங்களையும் ஒன்றாக்கி ஒரு உணவாக ஆக்கி கால பைரவரின் கையை நோக்கி எறிகிறார்...அந்த உணவை சாப்பிட பிரம்மாவின் ஐந்தாவது தலை, கால பைரவரின் கையில் இருந்து விழுந்து விடுகிறது....அதன் பசியும் அடங்கி விடுகிறது......

இப்போது ஈசன் , விஸ்வநாதர் வடிவில் கால பைரவருக்கு காட்சி அளிக்கிறார்......

"என் மகனே! இந்த காசியில் இருந்து கொண்டு என் சார்பாக நீ பூமியை ஆட்சி செய்து கொண்டு வா !!!"என்று வரம் கொடுக்கிறார்.....

அன்று முதல் காசி மாநகர் பைரவரின் ஆட்சி தேசமாக மாறுகிறது......கால பைரவர் 64 வகையான அவதாரம் எடுத்து 64 வகையான திருவிளையாடல் புரிந்து காசிக்கு வருகிறார்கள்.....ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கங்கை கரையில் ஒரு படித்துறை உண்டாகிறது....

இந்து தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் தான் வாழ்நாளில் இந்த 64 படித்துறையிலும் தர்ப்பணம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.....ஒரு நாளுக்கு ஒரு படித்துறை வீதம் 64 நாட்கள் வரை தினமும் தர்ப்பணம் செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.

1960 முதல் நாத்திக பிரச்சாரம் மற்றும் திராவிட சித்தாந்தம் ஆன்மீக தமிழ்நாட்டில் பரவியதால், இது பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.ஆதாரம்: சைவ சித்தாந்த நூல்கள்

வாரணாசி (காசி) குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

அது இந்துக்களின் புனித நகரம் என்பதனை விட கடல் இல்லாத அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும், 1951 முதல் 2014 வரை உயிரோடு வாழ்வதே பெரிய விசயம்

என்பதான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த உத்திரபிரதேச மக்களின் வாழ்க்கையை அரசாங்கத்தின் கஜானாவை எப்படி இந்த நகரம் மாற்றப் போகின்றது.

மாற்றிக் கொண்டு இருக்கின்றது என்பதனை அவ்வப்போது பதிவு செய்துள்ளேன்.

இப்போது உள்ள தகவல்கள்.

இராமேஸ்வரம் குறித்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள உதவும்.

🫶

2025-ஆம் ஆண்டில் வாரணாசி (காசி) நகரம் சுமார் 14.69 கோடி (146.97 மில்லியன்) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.

இது கோவா, சிம்லா போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை விடப் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி விஸ்வநாதர் காரிடார் (Kashi Vishwanath Corridor) திறக்கப்பட்ட பிறகு, ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசப் பொருளாதாரத்திற்கு சுமார் ₹1.25 லட்சம் கோடி அளவுக்குப் பொருளாதார ஊக்கம் கிடைத்துள்ளது.

கோவில் உண்டியல் காணிக்கை, சுற்றுலா வரி, போக்குவரத்து மற்றும் தங்கும் விடுதிகள் மூலமாக அரசுக்குக் கிடைக்கும் ஜிஎஸ்டி (GST) வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 20% முதல் 30% வரை உயர்ந்துள்ளது.

சிறு வணிகர்கள்:

பூக்கடைக்காரர்கள், பிரசாதம் விற்பவர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் (காசி பட்டு மற்றும் பித்தளை பொருட்கள்) விற்பனை செய்பவர்களின் வருமானம் 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

போக்குவரத்து:

படகோட்டிகள், ஆட்டோ மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுநர்களின் தினசரி வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, கங்கை நதியில் படகு சவாரி செய்யும் படகோட்டிகளின் மாத வருமானம் முன்பை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

ஹோட்டல் மேலாண்மை, வழிகாட்டிகள் (Guides) மற்றும் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

முன்பு 3,000 சதுர அடியாக இருந்த கோவில் வளாகம், தற்போது 5 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் 50,000 முதல் 75,000 பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய முடிகிறது.

நமோ காட் (Namo Ghat): நவீன வசதிகளுடன் கூடிய இந்த படித்துறை, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டர் சுற்றுலா வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கங்கை ஆரத்தி மற்றும் தூய்மை: கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் 'நமாமி கங்கே' திட்டத்தின் கீழ் படித்துறைகள் நவீனப்படுத்தப்பட்டு, எல்.இ.டி (LED) திரைகள் மூலம் நேரலை ஆரத்தி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து வசதி: வாரணாசி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகியவை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நகருக்குள் நெரிசலைக் குறைக்க ரோப்வே (Ropeway) போக்குவரத்துத் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வாரணாசிக்கு வரும் பயணிகளில் 70% பேர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP - Sewage Treatment Plants)

வாரணாசி நகரத்தின் கழிவுநீர் கங்கையில் கலப்பதைத் தடுக்க பிரம்மாண்டமான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினசரி சுத்திகரிப்பு: வாரணாசியில் நாளொன்றுக்கு உருவாகும் சுமார் 400 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையங்கள் (தினரி, கோதா, சௌகாட் மற்றும் ரமணா ஆகிய இடங்களில்) செயல்படுகின்றன.

ஆசியாவிலேயே பெரியது: 'தினரி' (Dinapur) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் மிகவும் நவீனமானது.

இது கழிவுநீரைச் சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் இருந்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும் வசதி கொண்டது.

2. 'அசி' மற்றும் 'வருணா' நதிகள் சீரமைப்பு
கங்கையின் துண நதிகளான அசி (Assi) மற்றும் வருணா (Varuna) வழியாகத்தான் அதிகப்படியான கழிவுநீர் கங்கைக்கு வந்து கொண்டிருந்தது.

தடுப்புச் சுவர்கள் மற்றும் கால்வாய்கள்: கழிவுநீர் கங்கைக்குச் செல்வதற்கு முன்பே அதை மறித்து, பெரிய ராட்சத குழாய்கள் (Interception and Diversion - I&D) மூலம் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது அசி நதியின் சங்கமப் பகுதியில் கழிவுநீர் கலப்பது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில் உள்ள 84-க்கும் மேற்பட்ட படித்துறைகளில் (Ghats) மக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மற்றும் குப்பைகளைக் கையாளும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பயோ-டாய்லெட் (Bio-toilets): சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கங்கையில் கழிவுகள் சேராத வண்ணம் பயோ-டாய்லெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குப்பை அகற்றும் இயந்திரங்கள்: கங்கையின் மேற்பரப்பில் மிதக்கும் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளை அகற்ற 'ட்ராஷ் ஸ்கிம்மர்கள்' (Trash Skimmers) எனப்படும் இயந்திரப் படகுகள் தினமும் பயன்படுத்தப்படுகின்றன.

முன்பை விட கங்கை நதி வாரணாசியில் 70% முதல் 80% வரை தூய்மையாகி உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கங்கை நீரில் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளதால், டால்பின்கள் மற்றும் ஆமை போன்ற உயிரினங்கள் மீண்டும் கங்கையில் தென்படத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவது இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது.

அரசு இதற்காக 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' (Zero Liquid Discharge) என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றி வருகிறது

ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு ஆதரவு தருக
17/12/2025

ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு ஆதரவு தருக

Address

185A/239, Sivagamipuram Street
Rajapalayam
626117

Alerts

Be the first to know and let us send you an email when Jothy International Travel &Services,Rajapalayam626117.cell +91 9600444225 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category