07/05/2026
நாலம்பலம் என்று அழைக்கப்படும் கோவில்களின் சிறப்பு
ஸ்ரீ கிருஷ்ணர் தன் தாய்மாமனான கம்சனை வதம் செய்து, அவனால் பல வருடங்களாக பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன் தாய் தந்தையான தேவகி மற்றும் வசுதேவரை விடுதலை செய்தார். கம்சனால் பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணரின் தாத்தாவான உக்கிரசேனரையும் விடுதலை செய்தார். பிறகு உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரசனாக்கினார். கம்சன் இறந்ததால் அவனுடைய மனைவிகளான அஷ்டியும் பிராப்தியும் விதவை ஆனார்கள். அஷ்டியும் பிராப்தியும் சகோதரிகள். இவர்கள் ஜராசந்தனின் புதல்விகள். தன்னுடைய இரு புதல்விகளையும் விதவையாக்கின ஸ்ரீ கிருஷ்ணர் மேல் கடும் கோபம் கொண்டான் ஜராசந்தன். ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அவரை சார்ந்த யாதவர்களுடன் தொடர்ந்து போர் புரியலானான். வரம் பெற்ற ஜராசந்தனை ஸ்ரீ கிருஷ்ணரால் வதைக்க இயலவில்லை. ஆகவே யாதவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். காலம் இவ்வாறு கரைய உக்கிரசேனர் இறைநிலை அடைந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய தமையனாரான பலராமரை மதுராவின் மன்னனாக முடிசூட்டினார். ஜராசந்தனின் போரை தவிர்க்க சமுத்திர ராஜனின் உதவியை நாடினர். ஸ்ரீ கிருஷ்ணரின் வேண்டுகோளுக்கிணங்கி சமுத்திர ராஜன் துவாரகை என்ற நிலப்பரப்பை அளித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும் அவரை சார்ந்த யாதவர்களும் துவாரகைக்கு இடம் பெயர்ந்தார்கள். துவாரகையின் மன்னனாக ஸ்ரீ கிருஷ்ணர் முடிசூட்டப்பட்டார்.
துவாரகையில் நித்திய பூஜைகள் செய்ய தனக்கு பிரத்யேகமாக நான்கு சிலைகளை உருவாக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர். பக்தி, பாசம், நேசம், தியாகம் ஆகிய உன்னதமான குணங்களைக் கொண்ட நான்கு சகோதரர்களின் சிலைகள் அவை. ஆம்! ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் சிலைகள் தாம் அவை. அனுதினமும் இந்த நான்கு சகோதரர்களுக்கும் பூஜை செய்வதை தலையாய கடமையாக கொண்டார். கிருஷ்ணாவதாரம் நிறைவேறி, அவரது சுவர்காரோகணத்திற்கு பிறகு, சமுத்திர ராஜனால் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வழங்கப்பட்ட துவாரகை ஆழிக்கடலில் மூழ்கிப்போனது. ஸ்ரீ கிருஷ்ணரால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் சிலைகள் பின்னாளில் மேற்கு கரையோரத்தில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டன. அப்போது மேற்கு கரையோரம் இருந்த நிலப்பரப்பிற்கு கைப்பமங்கலம் என்று பெயர். அதனை ஆட்சி புரிந்த வக்கிகைமால் என்ற சிற்றரசனிடம் மீனவர்கள் சிலைகளை ஒப்படைத்தனர். பிறகு பிரசன்னம் பார்த்து, நான்கு சிலைகளும் மேற்கூறிய இடங்களில் வக்கிகைமாலால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருக்கோயில்கள் எழுப்பப்பட்டன.
தலங்களின் பெருமைகள்:
1. வக்கிகைமாலால் எழுப்பப்பட்ட திருக்கோயில்கள் "நாலம்பலம்" என அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு கோயில்களிலும் பெருமாளே ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனனாக அருள்பாலிக்கிறார். பெருமாள் ஸ்ரீராமராக தோன்றியபோது, ஆதிஷேஷன் லஷ்மணனாகவும், பெருமாளின் சங்கு சக்கரமே பரதன் மற்றும் சத்ருக்கனனாகவும் தோன்றினார்கள் என்று ராமாயணம் கூறுகிறது. பெருமாளின் சேவைக்காக தோன்றியவர்களை பெருமாளாகவே பாவித்து மக்கள் வழிபடுகிறார்கள்.
2. பெருமாள் கோயில் கொண்டுள்ள இடங்களில் எல்லாம், அவரது திருக்கரங்களை சங்கு, சக்கரம், கதை மற்றும் பத்மம் (தாமரை) போன்றவைகளே அலங்கரிக்கின்றன. இதற்கு மாறாக த்ரிப்ரயார் மற்றும் இரிஞ்சாலக்குடா திருக்கோயில்களில் சங்கு, சக்கரம், வில் மற்றும் அட்சமாலையோடு மூலவர் காட்சியளிக்கிறார். இவர்கள் முறையே ஸ்ரீராமர் மற்றும் பரதன் ஆவர். மூழிக்குளம் மற்றும் பாயமல் திருக்கோயில்களில் சங்கு, சக்கரம், கதை மற்றும் அட்சமாலையோடு மூலவர் காட்சியளிக்கிறார். இவர்கள் முறையே லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் ஆவர்.
3. நான்கு திருக்கோயில்களிலும் உள்ள மூலவர் ஒரே சாயலில் இல்லை. கூர்ந்து நோக்கினால் ஒவ்வொரு மூலவரும் தனிப்பெரும் கடாட்சத்துடன் காட்சியளிப்பது புலப்படும்.
4. பொதுவாக பெருமாள் திருக்கோயில்களில் காணப்படும் கருடாழ்வார் சன்னதி நான்கு திருக்கோயில்களிலும் இல்லை. இதுவே இக்கோயில்கள் ஸ்ரீராமர், பரதன், லக்ஷ்மணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோருக்குரியது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
5. ஸ்ரீராமரின் த்ரிப்ரயார் கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது. சீதையை காணாமல் தவித்த ஸ்ரீராமரின் துயரை நீக்க வானரங்கள் எல்லா திசைகளிலும் சென்று சீதையை தேடினார்கள். ராவணனால் கவரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை அனுமாரே கண்டு திரும்பினார். ஸ்ரீராமரை வணங்கி "கண்டேன் சீதையை" என அனுமன் கூறியதும், அவர் செய்தியை கேட்ட மகிழ்ச்சியில் வானர சேனை ஆர்பரித்ததும், இன்று நாம் காணும் த்ரிப்ரயார் திருத்தலத்தில் தான் என்ற செய்தி நம்மை பக்தி பெருங்கடலில் மூழ்க செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
6. ஸ்ரீராமரின் த்ரிப்ரயார் கோயில் 108 திவ்ய தேசங்களில் இல்லை. மாறாக லட்சுமணனின் மூழிக்குளம் திருக்கோவிலே (புராணப்பெயர்: திருமூழிக்கலம்) 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. பதினான்கு ஆண்டுகால வனவாசத்தின் போது லக்ஷ்மணன் ஆற்றிய சேவைகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இத்தகை
திருச்சூர் மாவட்டத்திலுள்ள நாலம்பலம் கோவில்கள் ஸ்ரீ ராமனுக்கான திருப்ப்ரயார் கோவில், பரதனுக்கான கூடல்மாணிக்கம் கோவில், லட்சுமணனுக்கான திருமூழிக்குளம் கோவில் (எர்ணாகுளம் எல்லையில்), சத்ரு்னனுக்கான பாயம்மல் கோவில்கள் ஆகும். இவற்றை ஒரே நாளில் உச்சி பூஜைக்கு முன் தரிசனம் செய்வது பெரும் புண்ணியம் தரும
- **திருப்ப்ரயார் ஸ்ரீராம சுவாமி கோவில்**: பாத அபிசாரங்கள், பேய் பிசாசு செய்வினை உபத்ரவங்களிலிருந்து முக்தி.
- **இரிஞ்ஞாலக்குட கூடல்மாணிக்கம் கோவில்**: சந்தான பாக்கியம், வயிற்று வலி, அர்ஷம், சுவாச கோளாறுகள் சிகிச்சை; ரோக சாந்தி.
- **திருமூழிக்குளம் லட்சுமண பெருமாள் கோவில்**: சர்ப்ப துஷ்டி இல்லாமை, பொது புண்ணியம்.
- **பாயம்மல் சத்ரு்ன சுவாமி கோவில்**: சத்துரு தோஷம், ஆபிச்சார தோஷம், பாத அபிசாரங்கள் நீக்கம்; சுதர்சன புஷ்பாஞ்சலி மூலம் நன்மை.ஆக மொத்தத்தில்
பொது பலன்கள்
ஒரே நாளில் நாலம்பல தரிசனம் துன்பங்கள், நோய்கள், தாரிதிர్యம் நீக்கி ஆசிர்வாதம், செல்வம் தரும். திருப்ப்ரயார் நிர்மால்யம் தொட்டு மற்ற கோவில்களை தரிசித்து திரும்பி வழிபடுவது மிகுந்த புண்ணியம். இத்தகைய தலதரிசனம் செய்ய இப்போதே தொடர்பு கொள்ளுங்கள் 096004 44225