உலா - ULAA

உலா - ULAA Feel the Bliss of Nature

உலா உலாவின் அடிப்படை நோக்கமே, சிறப்பு குழந்தைகளுக்கான பயணம் என்பது தான். 2024ஆம் ஆண்டின் முதல் பயணம் செவி மற்றும் மொழி த...
26/02/2024

உலா

உலாவின் அடிப்படை நோக்கமே, சிறப்பு குழந்தைகளுக்கான பயணம் என்பது தான். 2024ஆம் ஆண்டின் முதல் பயணம் செவி மற்றும் மொழி திறன் மாற்றமுள்ள சிறப்பு குழந்தைகளை குடுமியான்மலை அழைத்து செல்வதன் மூலம் ஆரம்பிச்சிருக்கு . பிப்ரவரி 23ஆம் தேதி காலையில 9 மணிக்கு, 40 குழந்தைகளையும், அவர்களின் ஆசிரியர் 10 பேர் என 55 பேர் கூட திருச்சி, பொன்மலையில தொடங்குன பயணம் சாயந்திரம் 6 மணி போல முடிஞ்சிது. கிட்டத்தட்ட 9 மணி நேரம் பஸ்ஸில் போடப்பட்ட பாடல்களின் தாளங்களுக்கு ஏற்ப குழந்தைகள் நிக்காம டான்ஸ் ஆடிகிட்டே இருந்ததும், குழந்தைகள் குடுமியான்மலையில் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்துக்கும் விளக்கம் கேட்டு தெரிந்துகொள்வதும் என சந்தோஷமும், வியப்பும், ஆச்சரியமாய் இருந்தவர்களை பார்த்ததும் நம்மளுக்கும் உற்சாகம் தொற்றி கொண்டது. முன்னதாக வரலாறு சார்ந்த இடத்துக்கு நாம போக போறோம்னு பயணத்துக்கு முன்னாடி நாள் நாம குழந்தைகள் கிட்ட பேசுனபோது ஒட்டகம் பாக்க கூட்டிட்டு போறீங்களா அப்படினு நம்ம கிட்ட அவங்க கேட்டுருந்தாங்க, குழந்தைகள் ஆசை தானே நமக்கு முக்கியம், அதுனால கண்டிப்பா பாக்கலாம்னு சொல்லிட்டு, நார்த்தாமலை பக்கத்துல இருக்க இப்ராஹிம் பார்ம் கூட்டிட்டு போலாம்னு முடிவு பண்ணிட்டோம். ஒட்டகத்தோட, குதிரை, வெளிநாட்டு பறவைகள், இக்வானா, பாம்பு ன்னு குழந்தைகள் பார்த்து பார்த்து சந்தோசப்பட, இதை விட நமக்கு என்ன சந்தோசம்ன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு. ரொம்ப மகிழ்வா இருந்ததுன்னு எல்லாருமே தங்கள் மொழியில நிறைய நன்றிகளை சொல்லிகிட்டே இருக்க, மன திருப்தியோட இந்த பயணத்தை முடிக்க மனமில்லாமல், குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லாமல் பள்ளியில் அவர்களை விட்டுவிட்டு பிரிந்தோம்.

@பின்தொடர்பவர்கள்

✨️
06/08/2023

✨️

பயணம் அனைவருக்குமானது அனைவரும் பயணம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக எங்கேயும் அதிகம் வெளியில் செல்ல முடியாத குடும்ப ப...
16/01/2023

பயணம் அனைவருக்குமானது அனைவரும் பயணம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக எங்கேயும் அதிகம் வெளியில் செல்ல முடியாத குடும்ப பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்தோஷமாக இரண்டு நாள் எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் அவர்கள் மட்டும் அவர்களுக்கான ஒரு பயணமாக கொண்டாட்டமாக பயணம் செய்ய வேண்டும் என்று நிறைய பேரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மகளீர் மட்டும் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

இரண்டு நாள் இயற்கையோடு இயற்கையாக அனைத்தையும் மறந்து மலைகள் அருவிகள் என்று சுதந்திரமாக திரிய இணைந்துக்கொள்ளுங்கள் உலா - வுடன் ✨💕

Trip Package Includes

▫️Tent Stay
▫️Off-Road Jeep Safari
▫️Water Fall's (Thoovanam Waterfall's & Kanthaloor water)
▫️Trekking
▫️Sight Seeing
▫️4 Times Food ( Veg/Non-Veg)
▫️2 Times Tea & Snacks
▫️Campfire With Music
▫️Udumalaipet Pick & Drop

தொடர்புக்கு :-

6380737568
7708459833

குடுமியான்மலை தமிழி: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இது.  சங்காலத்தில் வழங்கப்பட்ட ...
29/12/2022

குடுமியான்மலை தமிழி:

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் இது. சங்காலத்தில் வழங்கப்பட்ட ஒல்லையூர் என்ற ஊரின் பெயரிலேயே பிந்தைய கல்வெட்டுகளிலும் ஒல்லையூர் கூற்றத்து குன்றியூர் நாட்டு திருநலக்குன்றம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கே புகழ்பெற்ற இசைக்கல்வெட்டும் பிரசித்தி பெற்ற குடைவரைக்கோவிலும் பாண்டியர் கால கோயில் கட்டுமானமும் நாயக்கர் கால சிற்பங்களும் நிறைந்துள்ளன. மேலதிக தகவல்களை பின்னொரு பகுதியில் விரிவாக காண்போம். இக்குடுமியான்மலையின் கீழ்பகுதியில் குடபோக கோவிலின் வரலாறு சற்றொப்ப 1400 ஆண்டுகள் பழமையெனில் அம்மலையின் பின்பகுதியில் சுமார் 2300 ஆண்டு பழமையான (பொயுமு 3ம் நூற்றாண்டு) தமிழி எழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. அதன் சிறப்பையும், அவலத்தையும் இங்கே காண்போம்.

மலையின் பின்புறம் சென்றால் கீழ்பகுதியில் மதுரை சமண பண்பாட்டு குழுவினரின் மஞ்சள் வண்ண பெயர்ப்பலகை காணப்படுகிறது. அவர்களின் அரும்பணி பாராட்டுக்குரியது, ஆனால் தமிழி எழுத்துக்கள் அனைத்தும் சமணர்க்கு மட்டுமே உரியது என்பது எங்ஙனம் ஏற்புடையது? சரி அவ்விவாதத்திற்குள் நுழைய வேண்டாம். அப்பெயர் பலகையைக் கடந்து சற்று மேலேறினால் வலப்புறத்தில் சில கற்படுக்கைகளும் சற்று மங்கிய நிலையில் ஒரு தமிழி கல்வெட்டும் காணப்படுகிறது. அக்கல்வெட்டின் விளக்கத்தை காண்போம்.

'நாழள் கொற்றந்தய் ப(ளி)ய்' என்பதே அதன் பாடமாக வரலாற்று அறிஞர்கள் கணித்துள்ளனர். நாழள் என்பது சங்ககாலத்தில் குறிஞ்சிப்பாட்டில் குறிக்கப்படும் மலர் வகைகளில் ஒன்று, இம்மலர் இன்று புலிநகக்கொன்றை, மயிற்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இம்மலரின் பெயரில் அமைக்கப்பட்ட ஊரே இங்கு குறிக்கப்படுகிறது, அந்தை என்பது மரியாதைக்குரிய சொல், கொற்றந்தை என்பவர் இங்கு மரியாதைக்குரியவராக காட்டப்படுகிறார். 'நாழள் ஊரினை சார்ந்த கொற்றந்தை என்பவர் செய்த பள்ளி' என்பதே இவ்வாசகத்தின் விளக்கம். இன்றைக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் பழமையான எழுத்துரு.இம்மாதிரி எழுத்துகளின் பழமை காரணமாகவே நம்மொழி செம்மொழி நிலையை எட்டியது.

நம் மரபுநடையில் இக்கல்வெட்டினை காண்போம்.

இரும்பாநாடு தூங்கானைமாட கோவில்:"ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ப...
14/12/2022

இரும்பாநாடு தூங்கானைமாட கோவில்:

"ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற
பெருந்தனிப் பரஞ்சோதி"

சம்பந்தர் தம் பெண்ணாடக பதிகத்தில் "தூங்கானை மாட" கோவிலை பற்றி கூறுகிறார். யானை ஒன்று அமர்ந்திருந்தால் அதன் பின்புறம் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறு தோற்றத்தில் அமைந்திருப்பதால் இந்த வகை கோவிலுக்கு இப்பெயர். இவ்வகை கோவிலை வடிவமைப்பது கடினம், ஏனெனில் வட்ட வடிவில் கற்களை செதுக்கி பொருத்த தனித்திறமை வேண்டும். இத்தகைய கோவில்கள் தொண்டைமண்டலத்தில் நிறைய உண்டு. புதுக்கோட்டையில் இத்தகைய கோவில் இருப்பது இது ஒன்று மட்டுமே. வாருங்கள் நம் மரபுநடையில் காண்போம்.

இம்முறை நமது குழுவின் மரபுநடை தமிழ்நாடு அரசுசுற்றுலாத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றது

புதுக்கோட்டை பயணம்:புதுக்கோட்டை வரலாற்று பயணத்தில் இருநாட்கள் நாம் காணும் இடங்களாவன:1.தேவர்மலை(லகுலீசர் சிற்பம் மற்றும் ...
12/12/2022

புதுக்கோட்டை பயணம்:

புதுக்கோட்டை வரலாற்று பயணத்தில் இருநாட்கள் நாம் காணும் இடங்களாவன:

1.தேவர்மலை(லகுலீசர் சிற்பம் மற்றும் முத்தரையர் குடைவரை)
2.மலையக்கோவில்(பரிவாதினி கல்வெட்டு,முத்தரையர் குடைவரை)
3.பூவாலைக்குடி(அமரூன்றி முத்தரையர் கால குடைவரை)
4.தேனிமலை(இருக்குவேளிர் கால சமண புடைப்புசிற்பம்,கல்வெட்டு)
5.திருகோகர்ணம்(முற்கால பாண்டியர் குடைவரை கோவில்)
6.குடுமியான்மலை (பாறை ஓவியம்,தமிழி கல்வெட்டு,இசைகல்வெட்டு,பாண்டியர் குடைவரை)
7.ஆவுடையார் கோவில்(மாணிக்கவாசகர்-ஈசன் திருவிளையாடல் தலம்,சிற்ப சிறப்புமிக்க கோவில்)
8.திருப்புனவாசல்(மிகப்பெரிய ஆவுடையார் உள்ள கோவில்,தஞ்சை பெரியகோவிலை விட பெரிய ஆவுடையார் திருமேனி)
9.இரும்பாநாடு(கஜபிருஷ்டம் எனும் தூங்கானைமாட சோழர்கால கோவில்)
10.ஓரியூர் தேவாலயம்(நூற்றாண்டு கண்ட தேவாலயம்)

பயணத்தில் இணைவோர் பதிவில் உள்ள QR Codeஐ Scan செய்து முன்பதிவு செய்யவும்.

தேனிமலை சமணச்சின்னம்  புதுக்கோட்டை மாவட்டம் தேனி மலையில் ஆண்டார் மடம் எனும் இயற்கை குடைவு உள்ளது அதன் அடித்தளம் மண்மூடிக...
03/12/2022

தேனிமலை சமணச்சின்னம்

புதுக்கோட்டை மாவட்டம் தேனி மலையில் ஆண்டார் மடம் எனும் இயற்கை குடைவு உள்ளது அதன் அடித்தளம் மண்மூடிக் கிடக்கிறது அதன்அடியில் சமணர் படுக்கை இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

'இந்த மலையில் "மலையத் வஜந் " எனும் சமணர் தவம் செய்வதைக் கண்டு இருக்குவேள் என்பவர் பள்ளிச் சந்தமாக நிலம் வழங்கியுள்ளார் '
இது அங்குள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய தொல்லியல் இக் குடைவுப் பகுதி முழுதும் கம்பி வேலியிட்டுப் பாதுகாத்துள்ளனர்.

குடைவின் எதிரில் பாறையில் " உதன செருவொட்டி " என்பவர் செய்வித்த தீர்த்தங்கரர் திருவுருவம் உள்ளது. அருகில் முற்றுப்பெறாத இருவுருவங்கள் உள்ளன.

நம் மரபுநடையில் இச்சின்னம் காண்போம்.

முன்பதிவிற்கு முதல் கமெண்டில் உள்ள Link ல் விவரங்களை பூர்த்தி செய்யவும்

முத்தரையர் குடைவரை:புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள...
02/12/2022

முத்தரையர் குடைவரை:

புதுக்கோட்டை -பொன்னமராவதி சாலையில் உள்ள வையாபுரி என்ற ஊரினை தாண்டி சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர் பூவாலைக்குடி, இங்குள்ள ஏரியினை கடந்துதான் இக்கோவிலுக்கு செல்ல வேண்டும்.

கோவிலின் அமைப்பு:
இக்குடைவரை கருவறை, கருவறை முன்சுவர், முகமண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது.
பெருமண்டபத்தில் அம்மன்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் குடைவரைக்கு வெளியே உள்ள அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார். மேலும், பைரவர், சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய் சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.

குடைவரை அமைப்பு:
லிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள அனைத்து குடைவரையிலும் லிங்கத்திருமேனிகள் தாய்ப்பாறையில் அமைந்தது இம்மாவட்டத்திற்கு உள்ள சிறப்பு. பெரும்பாலும் பாண்டியர் குடைவரைகள் அனைத்துமே தாய்ப்பாறை லிங்கங்களே.
இக்கோவிலின் கருவறை வாயிலின் இடப்புறம் நீர் வெளியேறும் வண்ணம் வெட்டப்பட்டுள்ளது!

கல்வெட்டுகள் :
இக்கோவிலில் மொத்தம் 39 கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் காலத்தால் முற்பட்டது ஸ்ரீபூதி களரி எனும் முத்தரையரின் கல்வெட்டாகும்.
இக்கல்வெட்டில்
"ஸ்ரீபூதி களரி ஆயின அமரூன்றி முத்தரையன் தன்(ம) ம் "
என உள்ளது. எழுத்தமைதி மற்றும் குடைவரையின் அமைப்பை வைத்து பார்க்கையில் இதனை 8 ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. இம்முத்தரையன் மன்னனா? அல்லது அதிகாரியா? என தெரியவில்லை. செந்தலை கல்வெட்டில் வரும் சுவரன் மாறனுக்கும், மலையடிப்பட்டி குடைவரை கண்ட விடேல்விடுகு முத்தரையனுக்கும் இடைப்பட்ட முத்தரையன் என ஒரு கருத்தும், நார்த்தாமலை விஜயாலயசோழீஸ்வரர் கோவிலை கட்டிய "சாத்தம்பூதி"என்பவரின் மகன், எனவும் கருத்துள்ளது அவ்வகையில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கடுத்து கோப்பரகேசரி ஒருவரின் கல்வெட்டும், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், "எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன்", சடையவர்மன் சுந்தரபாண்டியன், விஜயநகர கல்வெட்டுகள் காணப்படுகிறது!
சோழராட்சியில் இவ்வூர் கேரளாந்தக வளநாட்டு, கூடலூர் நாட்டின் கீழ் இணைக்கப்பட்டும், பின்னர் கடலடையாது இலங்கைகொண்ட சோழவளநாட்டின் கீழும், பாண்டியராட்சியில் பொன்னமவராவதி வடபற்றிலும் இருந்துள்ளது. அருகேயுள்ள ஊரின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகிறது! இன்றும் அப்பெயரிலேயே அவ்வூர்கள் வழங்கிவருகிறது சிறப்பு.
(சாத்தனூர், தேனூர், காரையூர், அரசூர், செவ்வலூர்,
திருப்பத்தூர்)
நந்தாவிளக்கு, படையல், வழிபாடு சம்பந்தப்பட்ட கல்வெட்டுகளே முழுக்க காணப்படுகிறது! அப்பகுதியிலுள்ள ஊரார் பெயர்கள் வருகிறது,
சோழர்காலத்தில் உவச்சரான கண்டன் சிவகண்டனான அச்சகண்டபெருமாள் என்பவரின் வழிகாட்டலில் பஞ்சமகாசப்தம் வாசித்தமை குறித்து கல்வெட்டுகூறுகிறது. நாயக்கர் காலத்தில் வரிகட்ட இயலாமையால் தன்நிலத்தை கோவில் காணியாக, இறையிலியாக விட்டதும் தெரிகிறது.
இம்மண்டபங்களை குடைவித்தது ஸ்ரீகோவிலுடையான் வாதுணிஊரன் துற்றினை என தெரியவருகிது.
தற்சமயம் தொல்லியல்துறை இக்கோவிலை சுற்றி வேலியெழுப்பி வருகிறது! இக்கோவில் பெரும்பாலும் அடைத்தே காணப்படும்.

அரிய இக்குடைவரை கோவிலை நம் மரபுநடையில் காண்போம்

மரபுநடையில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

முதல் கமெண்டில் உள்ள இணைப்பை சுட்டி முன்பதிவு செய்யவும்.

#ஆற்றுப்படை #உலா

Ula's Panrihills Trip December 24 & 25 Limited Seats Only - Interested People's DM for More Details 🙋🏻‍♂️
30/11/2022

Ula's Panrihills Trip December 24 & 25 Limited Seats Only - Interested People's DM for More Details 🙋🏻‍♂️

உலா - ULAA வின் பன்றிமலை பயணம் டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் ஏற்ப்பாடு செய்துள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்...
30/11/2022

உலா - ULAA வின் பன்றிமலை பயணம் டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் ஏற்ப்பாடு செய்துள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.

Address

Chennai
Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when உலா - ULAA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உலா - ULAA:

Share

Category