25/09/2024
﷽ உள்ளம்💎
“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்கள்: புகாரி: 01 , முஸ்லிம் : 3530
இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.
“நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் : 5012
▪️மக்களைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். அவர்கள் உயிரற்றுப்போன உடலுக்காக அழுகின்றார்கள்.
ஆனால்,உயிரற்றுப் போன உள்ளத்துக்காக அழுவதே இல்லை.
- இமாம் ஷாபிஈ (ரஹ்)
“மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார்.
அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான்.
பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் : 3865
மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
🔷எவன் ஆத்மாவைப் (உள்ளத்தை) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.
(அல்குர்ஆன் : 91:9)
🔷 உள்ளம் தூய்மை ஆகி விட்டால் அனைத்து நிலைகளும் சீராகிவிடும்.
- ஷெய்ஹ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (رَضِيَ أللَّٰهُ عَنْهُ)
𝗪𝗵𝗲𝗻 𝘁𝗵𝗲 𝗵𝗲𝗮𝗿𝘁 𝗶𝘀 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁𝗲𝗱, 𝗮𝗹𝗹 𝘁𝗵𝗲 𝗰𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 𝗯𝗲𝗰𝗼𝗺𝗲 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁.✨
- 𝗦𝗵𝗲𝗶𝗸𝗵 𝗠𝘂𝗵𝘆𝗶𝗱𝗱𝗶𝗻 𝗔𝗯𝗱𝘂𝗹 𝗤𝗮𝗱𝗶𝗿 𝗝𝗶𝗹𝗮𝗻𝗶 (رَضِيَ أللَّٰهُ عَنْهُ)💐