Uthumalai

Uthumalai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uthumalai, Aranmanai Street, Tirunelveli.

18/05/2023

_*அழகான நடத்தை..*_

ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.

"நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"

அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".

குருஜி கேட்டார் - "அந்தப் பெண் உங்களை கடந்த பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"

அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் . (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)

குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"

அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார். மற்றும் புன்னகைத்தார்.

குருஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள்.

நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுக்கிறேன்.

உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள்.

அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது.

அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர்.

உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார்.

உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார்.

பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்.

அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான மகரயாழ் தேநீர் மற்றும் உணவு கொடுக்கிறார்.

மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார்.

நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று.

நீங்கள் சொன்னீர்கள் - உள்ளூர் ரயிலில்.

உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்து கேட்டார் - தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா..!!

குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?

அந்த இளைஞன் சொன்னான் - குருஜி! அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

இளைஞர்களிடையே கூட்டத்தில் உரையாற்றிய குருஜி - *"இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்"* என்றார்.

*"அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் "அழகான நடத்தை" வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."*

15/01/2023

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏எனது முக நூல் உறவுகளுக்கும் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
🙏

🐂🐄🌺🌸

17/12/2022

😄 திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் வா‌ழ்‌ந்த ஜோடிக‌ள் த‌ங்களது 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

ஊரையே‌க் கூ‌ட்டி ‌விரு‌ந்து வை‌த்து த‌ங்களது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவ‌ர்களை‌ப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது.

"நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஷ‌ி‌ம்லா செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர்மா‌னி‌த்தோ‌ம்.

அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மன‌ை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது.

அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.

‌சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமையாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள்.

அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர்.😄😀😀

14/11/2022

நினைவுகள்: சைக்கிள்

1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் தான் போகும்.

இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.

ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .

அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு. அதிலும் பின்னால் ஒருவரை உட்கார வைத்து சைக்கிள் ஓட்டிவிட்டால் போதும், ஒலிம்பிக்ல் வெற்றி பெற்றால் கூட அந்த அளவிற்கு மகிழ்ச்சி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.

அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.

1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.

அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.

பழைய நினைவுகளை அசைபோடுவது என்றும் ஆனந்தமே. இந்த தலைமுறையினர்களுக்கு சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம். இவா்களுக்கு அந்தகாலத்தில் நமக்கு கிடைத்த மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்பு இல்லை....

12/07/2022

பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்..

நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.

நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)

11/07/2022

என்னவோ தெரியவில்லை இந்தப்படத்தை இப்போது பதிவிட வேண்டும் என்று தோன்றியது... கரும வினை வேர் அறுக்கிறது பாவத்தின் சம்பளம் இப்போது பழி தீர்த்துக் கொண்டு இருக்கிறது... கடவுள் இருக்கின்றான் குமாரு

10/07/2022

*தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.*

*அம்மா! என்னைப் பெற்றெடுத்து,

பாசத்தைக் கொட்டி,

பல தியாகங்களை செய்து,

காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.*

*அம்மா உனக்கு என்ன வேண்டும்,

நான் என்ன செய்ய வேண்டும் என்றான் மகன்*

*தாய் வியப்புடன் மகனைப்பார்த்தாள்*

*அதைப்பற்றி இப்ப என்ன?

என்னுடைய கடமையைத் தானே செய்தேன்,

அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும்*

நீ விரும்பினாலும்,

எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?*

*இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான்.

தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான்.

அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய்,

மகனிடம்,*

*சரி…..

நீ தொடர்ந்து கேட்பதால்,

ஒன்று சொல்கிறேன்.

அதை நிறைவேற்றினால் போதும் என்றாள்.*

*மகனுக்கு ஒரே சந்தோஷம்.*

*அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள்– என்றான் மகன்,*

*ஒன்றுமில்லை மகனே,

நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே,

அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு–எனக் கூறினாள் தாய்.*

*அம்மா,

நீ கேட்பது,

வித்தியாசமாக உள்ளது.

இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.*

*தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய்,

எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள்.

தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான்.

அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள்.

மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான்.

சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து,

கோபமாக,*

*என்ன அம்மா செய்கிறாய்…

தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்?

ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய்–எனக் கேட்டான் மகன்.*

*அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:*

*மகனே..

அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.

நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய்.

உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன்.

முடியுமானால்,

உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா?–என்றாள் தாய்*

*மகன் திகைத்து நின்றான்.*

*இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய்.*

*நண்பர்களே,

உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும்,

ஒன்றைத்தவிரஅது தான் தாயின் தியாகம்.

தாயின் தியாகத்திற்கு,

எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது.

தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்?

நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள் ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.*

21/06/2022

*ப்ளஸ் -2 வகுப்பிற்கு பின் படிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது!*

*என்ன படிக்கலாம்...?*

*மாணவ மாணியர்களின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்.*

*Science Courses (3 Years)*

Bsc Physics
Bsc Chemistry
Bsc Botany
Bsc Zoology
Bsc Computer science
Bsc Mathematics
Bsc PCM
Bsc CBZ
Bsc Forestry
Bsc Dietician & Nutritionist
Bsc Home Science
Bsc Agriculture Science
Bsc Horticulture
Bsc Sericulture
Bsc Oceanography
Bsc Melsorology
Bsc Arthopology
Bsc Forensic Science
Bsc Food technology
Bsc Diary Technology
Bsc Hotel Management
Bsc Fashion Design
Bsc Mass Communication
Bsc Electronic Media
Bsc Multimedia
Bsc 3D Animation

*Commerce Courses*

CA Chartered Account
CMA Cost Management Account
CS Company Secretary (Foundation)
B.Com Regular
B.Com Taxation & Tax Procedure
B.Com Travel & Tourism
B.Com Bank Management
B.Com Professional
BBA / BBM Regular
BFM Bachelor of Financial Management
BMS
BAF

*Humanities Courses*

Advertising
BS General
Criminology
Economics
Fine Arts
Foreign languages
Home Science
Interior Design
Journalism
Library Science
Physical Education
Political Science
Psychology
Social Work
Sociology
Travel and Tourism

*Management Courses*

Business Management
Bank Management
Event Management
Hospital Management
Hotel Management
Human Resources​ Managemet
Logistics Management

*Law Courses (3/5 years)*

LLB
BA + LLB
B.Com + LLB
BBM + LLB,
BBA + LLB

*MEDICAL COURSES*

MBBS
BUMS Unani
BHMS Homeopathy
BAMS Ayurveda
BSMS Sidha
BNYS Naturopathy​
BDS Dental
BVSc Veterinary

*PARAMEDICAL COURSES*

Nursing
Pharm D
B. Pharm
D. Pharm
M. Pharm
Anesthesia Technical
Cardiac Care Technical
Perfusion technology
Cathllab Technology
Clinical Optometry
Dental Hygiene
Dental Mechanic
Dental Technician
Health Inspector
Medical Imaging & Tech.
Medical Lab Technician
Medical Records Tech.
Medical X Ray Technician
Nuclear Medicine Tech.
Occupational Therapist
Operation theater Tech
Ophthalmic Assistant
Physiotherapy
Radiographic Assistant
Radiotherapy Technician
Rehabilitation Therapy
Respiratory Therapy Tech.
Blood Transfusion Tech.
Bsc Renal Dialysis

*B.Tech Engineering (4 year courses)*

Petro Chemical
Petroleum
Civil
Mechanical
Aeronautical
Aerospace
Agricultural
Architecture
Automobile
Automation & Robotics
Avionics
Biomedical
Bio Technological
Chemical
Ceramics
Computer Science
Electronics & Comm.
Electrical & Electronics
Environmental Science
Information Science
Industrial
Industrial Production
Instrumental Technology
Marine
Medical Electronics
Mining
Manufacturing Science
Naval Architecture
Nanotechnology
Polymer Technology
Silk Polymer
Carpet Technology
Textile
Robotics Genetic

**POLYTECHNIC ENGINEERING (10 th class)*

Civil
Mechanical
Automobile
Computer Science
Electronics and Communication
Electrical
Petro Chemical

*Management*
*(new job opportunity courses... 2/3/5 years duration.)*

BBA / BBM
BBA Aviation
BBA Air Cargo Management
BBA Aeronautical
BBA Retail Marketing
BBA Customer Care Management
BBA Airline & Airport Management
BBA Cargo Management
BBA Office Management
BBA Store Management
BBA Mall Management
BBA Logistics

BCA SAP
BCA Cloud Computing

MBA
Logistics
Aviation
HR
Management

Architecture (5 years + 2)
B.Arch (NATA is Compulsory)
M.Arch .

*மாணவர், மாணவியர்கள் நல்லதொரு பிரிவை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு நல்வாழ்த்துக்கள்.*

ஐயா காமராசரைப் பார்க்க "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்...
25/05/2022

ஐயா காமராசரைப் பார்க்க "சோ" அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது காமராசர் சோ-வைப் பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக் கிறேன்,ஒருநாளாவது உன்னைச் சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார். அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை. இல்லை இல்லை சொல்லு ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க சொல்லலை என்று கூறியுள்ளார். அதற்கு காமராசர் சொன்னாராம் ஏன் சொல்லலை தெரியுமா நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க என்றுதான் சொல்லாமலிருந்தேன் நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம். இதைக்கேட்ட சோ தன்னையறியாமல் அழுதுவிட்டாராம். எப்படி தலைவர் என்று எண்ணிப் பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா? இவரை போன்ற நல்லவர்களை தோற்கடித்த சாபத்தால் தான் இன்றைய தமிழகம் இப்படி அவதிப்படுகிறது .......

13/05/2022

*தேவையான மருந்து எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை*

*I. உடற்பயிற்சி என்பது மருத்துவம்.*

*ii நோன்பு என்பது மருத்துவம்.*

*iii இயற்கை உணவே மருந்து.*

*iv. சிரிப்பு ஒரு மருந்து.*

*v. காய்கறிகளே மருந்து.*

*vi. தூக்கமே மருந்து.*

*vii. சூரிய ஒளியே மருந்து.*

*viii. ஒருவரை நேசிப்பது மருத்துவம்.*

*ix. நேசிக்கப்படுவது மருத்துவம்.*

*x. நன்றியுணர்வு என்பது மருத்துவம்.*

*xi குற்றத்தை மன்னிப்பது மருத்துவம்.*

*xi தியானம் என்பது மருத்துவம்.*

*xiii. கடவுளைப் பற்றிய தத்துவங்களை படிப்பதும் மருத்துவம்.*

*xiv. பாடுவதும் ஆடுவதும் துதிப்பதும் மருத்துவம்.*

*xv சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம்.*

*xvi சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம்.*

*xvii. தன்னை நம்புவதும் மருத்துவம்*

*xviii. நல்ல நண்பர்கள் இருப்பதும் மருத்துவம்.*

*xix. தன்னை மன்னிப்பதும் மற்றவர்களை மன்னிப்பதும் மருத்துவம்*

*இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்*🙏

11/05/2022

ராஜபக்சே பூர்வீக வீடு 120 ஆண்டுகள் பழையதாம்.

பிறந்தது, வளர்ந்தது, அரசியலுக்கு வந்தது, பிரதமரானது, அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தது, போர் முடிவுகளை தீர்மானித்தது எல்லாம் இங்குதானாம்.

நேற்று மக்கள் எடுத்த தீர்மானத்தில் தீயில் அழிந்தது.

*நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உன்னை கேட்கும்...!*

*நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்குதோ.....*

*முன்னை இட்ட தீ முப்புரத்திலே*

*பின்னை இட்ட தீ தென் இலங்கையில்*

*அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே*

*யானும் இட்ட தீ மூள்க மூள்கவே !*

பட்டினத்தார் வரிக்கு இப்பதான் சரியான காட்சி அமைந்திருக்கு..

புரட்சி தோற்றுப்போகலாம்
வீழ்ந்து போகாது...

சர்வாதிகாரிகள் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.!

அது முசோலினியோ, ஹிட்லரோ, ராஜபக்சேவோ.!

*மக்களிடம் அறியாமை இருக்கும் வரையில்* அல்லது *வாழ்வாதாரம் பாதிக்காத வரையில் பிரச்சினை இல்லை.!*

சிங்களர்களே.., உங்களுக்காக தமிழர்களை கொன்றேன் என்றான்..,
மகிழ்ந்தார்கள்.!

சிங்களர்களே.., உங்களுக்காக இஸ்லாமியர்களை கொன்றேன் என்றான்..,
மகிழ்ந்தார்கள்.!

கடைசியில் சிங்களர்களையே பட்டினியால் கொல்லும்போது தான்...

அய்யோ ராஜபக்சே ஒட்டுமொத்த இலங்கையையும் அழிக்க போகிறான் என்பது அவர்களுக்கு புரிந்தது.!

*ராஜபக்சேயால், முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் வீடு மற்றும் தமிழர்களின் உடமைகள்*🔥 *தீயிடப்பட்ட நாள்* *10 மே 2009*

*நேற்று (10 மே 2022) சிங்களர்களால் ராஜபக்சேயின் வீடு 🔥 தீயிடப்பட்டு, ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடியது இறைவன் இருப்பதையே காட்டுகிறது.*🙏🙏

Address

Aranmanai Street
Tirunelveli
627860

Telephone

9965388201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uthumalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share